தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்தாண்டு 2020 மார்ச் முதல் ஒரு வருடமாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகிறது.
முதலில் கடுமையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பின்னர் படிப்படியாக ஒவ்வொரு மாதமும் தளர்வுகளுடன் அமலில் உள்ளது.
தற்போது பொதுத்தேர்தல் காரணமாக அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் சமூக இடைவெளிகளை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக பிரச்சாரங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதனால் கடந்த 2 வாரங்களாக கொரோனா மீண்டும் அதிகளவில் பரவி வருகிறது.
எனவே தேர்தலுக்கு பிறகு எந்த சமயத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
இந்தநிலையில் தலைமை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் தலைமையில் நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள், பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதன்படி தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான தமிழக அரசு, அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மருத்துவ நிபுணர்கள், டாக்டர்கள் ஆலோசனையின் அடிப்படையில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீடிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகங்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளலாம்.
பொதுமக்கள் முககவசம் அணிவது கட்டாயமாகும். இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது, மற்ற பல நடவடிக்கைகளை எடுப்பது குறித்து மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்துகொள்ளலாம்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி மற்றும் உள்ள விதிகள்படி செயல்பட உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
கொரோனா தடுப்பூசி போடுவதை மேலும் அதிகப்படுத்த வேண்டும்.
65 வயதுக்கு மேல் உள்ளவர்கள், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வெளியில் நடமாட கூடாது.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
TN extends lock down till April 30