ரஜினியை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்; என்னதான் பிரச்சினை ஒரு பார்வை

ரஜினியை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்; என்னதான் பிரச்சினை ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அக்டோபர் 28ஆம் தேதி இரவு 9 மணியளவில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

இது தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரஜினிகாந்த் நலமுடன் வீடு திரும்ப அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

ரஜினி ஓரிரு நாட்களில் குணமுடன் வீடு திரும்புவார் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் செய்திக் குறிப்பு வெளியிட்டது.

அதில், `நடிகர் ரஜினிகாந்தின் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பு தற்போது சரி செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைக்குப் பின் ரஜினிகாந்த் உடல் நலம் தேறி வருகிறார். சிகிச்சை முடிந்து இன்னும் சில நாள்களில் வீடு திரும்புவார்.’ எனத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து பிரபல மருத்துவர் ஒருவரும் கருத்து தெரிவித்துள்ளார். அதில்…

“இதயத்திலிருந்து மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் கழுத்துப்பகுதி வழியாக செல்லும்.

அந்த குழாய்யில் அடைப்பு ஏற்பட்டுள்ளது- எனவே லேசான மயக்கமோ, நினைவு தப்பிப் போவதற்கோ வாய்ப்புகள் உள்ளது.

எனவே பாதிப்பு வராமல் தடுக்கவும் சீரான ரத்தம் ஒட்டம் நடக்கவும் Carotid Artery revascularization முறையில் சரிசெய்துள்ளனர்.

ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட 2 காரணங்கள் உண்டு. ஒன்று கொலஸ்ட்ரால். மற்றொன்று ரத்தக்குழாய் சுருங்குதல்.

எனவே அப்போது அடைப்பை சரிசெய்து ஸ்டண்ட் வைத்து ரத்த ஓட்டத்தை சரிசெய்யலாம். எனவே அவர் விரைவில் குணமாகி வீடு திரும்புவார்.” என பிரபல மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்று ரஜினியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளார்.

இத்துடன் ரஜினிகாந்துக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டு அறிந்து சென்றார்.

புனீத் ராஜ்குமார் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்.; 3 ரசிகர்கள் மரணம்

புனீத் ராஜ்குமார் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்.; 3 ரசிகர்கள் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் இன்று அக்டோபர் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் அவரது அப்பா ராஜ்குமார் சமாதி அருகே தகனம் செய்யப்பட உள்ளது.

புனித் ராஜ்குமார் உடலுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் கர்நாடக அமைச்சர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் மைதானத்தில் உடல் வைக்கப்பட்டது. ரசிகர்கள் வரிசையில் சென்று அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையில் புனித் மறைவு கேட்டு ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இத்துடன் புனித்தின் மரண செய்தியறிந்து மாரடைப்பில் இருவர் மரணம் அடைந்ததாகவும் செய்திகள் வந்துள்ளன. இறந்த ஒரு ரசிகரின் பெயர் பரசுராம் தேவம்மன்வார் என கூறப்படுகிறது.

Karnataka CM Bommai pays tribute to actor Puneeth Rajkumar

மீண்டும் ‘அண்ணாத்த’..: ரஜினி மகள் கனவை நிறைவேற்றுவாரா சிவா..?

மீண்டும் ‘அண்ணாத்த’..: ரஜினி மகள் கனவை நிறைவேற்றுவாரா சிவா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த், குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘அண்ணாத்த’.
இந்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

இப்படத்தை தனது பேரன்களுடன் சமீபத்தில் பார்த்தார் ரஜினிகாந்த். பேரனின் மகிழ்ச்சி குறித்தும் ரஜினி தன் குரலில் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் ரஜினி மகள் சௌந்தர்யாவும் அண்ணாத்த குறித்து பேசியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “சிவா சார்.. ‘அண்ணாத்த” படத்துல நீங்க என்ன பண்ணியிருக்கீங்கன்னு மக்கள் இன்னும் பார்க்கலை.. ஆனா, நான் பார்த்துட்டேன்.

படம் பார்த்துட்டு நான் வெளிய வந்து, உங்க கைய பிடிச்சிக்கிட்டு கண்ணுல ஆனந்த கண்ணீரோடு நின்னேன். நீங்க பண்ணது மேஜிக் இல்லை, அதுக்கு மேல என்ன சொல்லணும்னே தெரியலை. வார்த்தை இல்லை.

தலைவரோட வெறித்தனமான ஒரு ரசிகையாவும், அப்பாவோட மகளாவும் நீங்க அப்பாவை பார்த்துக்கிட்ட முறைய வச்சி, கண்ணடிப்பா, நீங்க, அப்பா, உங்க மொத்த குழு ‘அண்ணாத்த’ படத்துக்கப்புறம் திரும்பவும் வேலை பார்க்கணும் சார்,” என
சௌந்தர்யா அதில் தெரிவித்துள்ளார்.

ரஜினி மகளின் ஆசையை சிவா நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Soundarya Rajini Praising Annaatthe movie and Director Siva On Hoote App

ராஜமௌலி பட ரிலீசுக்காக தங்கள் நிறுவன பெயரையே மாற்றிய PVR

ராஜமௌலி பட ரிலீசுக்காக தங்கள் நிறுவன பெயரையே மாற்றிய PVR

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலி படங்களின் மெகா வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆர்ஆர்ஆர்’.

இந்த படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவகன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்..

பிரம்மாண்ட சரித்திரப் படமாக உருவாகி வரும் இந்த படமானது அடுத்தாண்டு 2022 ஜனவரி 7ம் தேதி வெளியாகும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் உள்ள மல்டிபிளக்ஸ் நிறுவனங்களில் ஒன்றான பிவிஆர் நிறுவனம் இந்த படத்துடன் இணைந்துள்ளது.

அதன்படி இந்தியாவில் இந்த நிறுவனத்திற்கு உள்ள 800 மேற்ப்பட்ட தியேட்டர்களை தற்போது தற்காலிகமாக சில மாதங்களுக்கு மட்டும் ‘பிவிஆர்ஆர்ஆர்’ என பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

அதாவது பிபிஆர் என்ற பெயருடன் ‘ஆர்ஆர்ஆர்’ படப் பெயருடன் சேர்த்து மாற்றப்படுகின்றன.

இந்திய வரலாற்றிலேயே ஏன்.. உலக சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு திரைப்படத்திற்காக ஒரு தியேட்டர் நிறுவனம் தனது பெயரை மாற்றுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த இணைப்புக்கான லோகேலா அறிமுக விழா மும்பையில் நடைபெற்றது.
அந்த விழாவில் ஆர்ஆர்ஆர் இயக்குனர் ராஜமௌலி மற்றும் பிவிஆர் அதிகாரிகள் கலந்து கொண்டு லோகோவை அறிமுகம் செய்தனர்.

Multiplex Brand PVR’s Name Changed to PVRRR for Few Months

சிம்புவின் ‘பத்து தல’ படப்பிடிப்பு.. பரவசத்தில் பிரியா பவானி சங்கர்…

சிம்புவின் ‘பத்து தல’ படப்பிடிப்பு.. பரவசத்தில் பிரியா பவானி சங்கர்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ‘பத்து தல’.

இதில் சிம்புவுக்கு ஜோடி இல்லை. கவுதம் கார்த்திக் ஜோடியாக பிரியா நடித்து வருகிறார்.

ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கன்னியாகுமரியில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் படப்பிடிப்பு குறித்து பிரியா பவானி சங்கர் தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாவது…

“கன்னியாகுமரியில் ஒரு வாரமாக ‘பத்து தல’ படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். இங்கு படப்பிடிப்பு நடப்பதில் மகிழ்ச்சி. மிக அற்புதமான ஒரு நகரத்தில் இருக்கிறேன். மக்கள், வானிலை, உணவு, ஊரின் அமைதி எப்போதும் என இதயத்தில் நிறைந்திருக்கும்,” என குறிப்பிட்டுள்ளார்.

Priya Bhavani Sankar at Kanyakumari for Pathu Thala shooting

ஆர்யா நல்லா நடிக்கிறான்.. ரொம்ப அடிக்கிறான்.. வலி தாங்கல – விஷால்

ஆர்யா நல்லா நடிக்கிறான்.. ரொம்ப அடிக்கிறான்.. வலி தாங்கல – விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛எனிமி’.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ல் வெளியாகிறது.

இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் விஷால் பேசியதாவது :

என்னுடைய நல்ல நண்பர் கன்னட பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் இறந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கும், அவரது ரசிகர்களுக்கும், கன்னட திரைப்பட உலகத்திற்கும் எனது ஆழ்ந்த ஆறுதல்களை தெரிவித்து கொள்கிறேன்.

எனிமி தீபாவளிக்கு வருகிறது. எனக்கு ஒரு நல்ல ஒரு தயாரிப்பாளர் வினோத்குமார் கிடைத்துள்ளார்.

அவர் பணத்தை மனதில் வைத்து படத்தை தயாரிக்கவில்லை. அவர் நினைத்திருந்தால் இந்த படத்தை ஒரு பெரிய விலைக்கு ஓடிடிக்கு விற்றிருக்கலாம்.
ஆனால் ரசிகர்களுக்காக இந்த படத்தை தியேட்டருக்கு கொண்டு வருகிறார்.

மக்கள் தியேட்டரில் ரசிக்க வேண்டுமென படத்தை தியேட்டருக்கு கொண்டுவந்ததற்கே அவரை வணங்க வேண்டும்.

அவருடன் அடுத்து ஒரு படத்திலும் இணைகிறேன். அந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

டைரக்டர் ஆனந்த் சங்கர் ஈகோ இல்லாத ஒரு மனிதர். அவர் முதலில் என்னிடம் கதை சொன்னபோது இந்தக் கதையில் ஜாமி (ஆர்யா) இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து அவரிடம் சொன்னேன்.

ஆர்யா கேரக்டரை இன்னும் வலுவாக்கினால் நன்றாக இருக்கும் என சொன்னேன். பின்னர் அதற்கான அற்புதமான திரைக்கதையுடன் வந்தார்.
ஆர்யாவிடம்.. உலகமே அழியப்போகிறது என்று சொன்னால், அசராமல் இரு சைக்கிளிங் முடித்து விட்டு வருகிறேன் என்று சொல்வார். எதையும் சீரியஸாக எடுத்து கொள்ள மாட்டார்.

இப்போது திடீரென நன்றாக நடிக்க ஆரம்பித்து விட்டார். ரொம்பல நல்லா நடிக்கிறான்.

இந்தப்படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் நடிக்கும் போது, அப்போது தான் சார்பட்டா நடித்துவிட்டு வந்தார். உண்மையிலேயே பாக்ஸிங் கற்றுக்கொண்டு வந்து என்னை அடி வெளுத்து விட்டான். என்னால அடி தாங்க முடியல.

மிருணாளினி என்னுடன் நடிப்பது தயக்கமாக இருந்ததாக சொன்னார். அடுத்தமுறை, தயக்கமில்லாமல் நீங்கள் நடிக்கலாம்.

கருணாகரன் உடன் நடிக்கும்போது சிரிக்காமல் இருக்க முடியாது. அவர் நடிக்கும் போது நானும் மிருளானியும் சிரித்து கொண்டே இருப்போம்.

600 தியேட்டருக்கு மேல் தெலுங்கானா ஆந்திராவில் இப்படம் வெளியாகவுள்ளது.

நீங்கள் திரையில் ரசித்து பார்க்கும் படமாக இப்படம் இருக்கும். படத்தில் முதல் பத்து நிமிடங்கள் நானும் ஆர்யாவும் இருக்க மாட்டோம் இரண்டு சின்ன பையன்கள் நடித்திருக்கிறார்கள் அவர்களிடம் நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அட்டகாசமாக நடித்துள்ளார்கள்.”

என விஷால் பேசினார்.

Vishal speech abour Arya in Enemy Press Meet

More Articles
Follows