‘வலிமை’ & ‘டாக்டர்’ அப்டேட் கொடுத்த கலெக்டர்..; நீங்க வேற லெவல் ப்ரோ என பாராட்டிய சிவகார்த்திகேயன்

‘வலிமை’ & ‘டாக்டர்’ அப்டேட் கொடுத்த கலெக்டர்..; நீங்க வேற லெவல் ப்ரோ என பாராட்டிய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வலிமை’ அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் டார்ச்சர் செய்யவே “எங்களை புரிந்துக் கொண்டு பொறுமை காக்கவும்” என அறிக்கை விட்டார் நடிகர் அஜித்.

இதனால் அடங்கிப் போன ரசிகர்களுக்கு திடீரென ‘வலி-மை’ அப்டேட் கொடுத்தார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன்.

இவர் வித்தியாசமான முறையில் வலிமை அப்டேட் என்கிற பெயரில் ஓட்டு போட விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.

உங்கள் வாக்கு வலி *மை* நிறைந்தது என தன் ட்விட்டரில் பதிவிட்டார்.

ஜனநாயகத்தின் வலிமை உங்கள் ஒவ்வொருவரின் ஓட்டிலும் உள்ளது. 100% ஓட்டு தான் இந்தியர்களின் பெருமை.” என குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது டாக்டர் அப்டேட் எனக் குறிப்பிட்டு, சிவகார்த்திகேயன் மாஸ்க் அணிந்த படி இருக்கும் போஸ்டரை பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவிற்கு சிவகார்த்திகேயன் ‘நீங்க வேற லெவல் பிரதர்’ உண்மையிலேயே இது மிகவும் பொறுப்பான ஒரு செயல். நானும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன்.

தயவு செய்து அனைவரும் வாக்களிக்க செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்லுங்கள்’ என பதிவிட்டிருந்தார்.

இதற்கு திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன், ‘அதான் டாக்டரே சொல்லிட்டாரே, நாம் மாஸ்க் அணிந்து ஓட்டளிப்போம்’ என்று பதிலளித்துள்ளார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன்.

Tirupur District Collector about Valimai and Doctor updates

பாலிவுட்டில் மாதவனுக்கு ஜோடியாகும் தனுஷ் பட நாயகி

பாலிவுட்டில் மாதவனுக்கு ஜோடியாகும் தனுஷ் பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

asuran manju warrierகேரளாவில் பிரபலமான நடிகை மஞ்சு வாரியர்.

தமிழில் பல வாய்ப்புகள் வந்தபோதும் மறுத்தவர்.

ஆனால் கடந்த 2019ல் அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழக ரசிகர்களையும் கவர்ந்தார்.

தற்போது முதன்முதலாக பாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கிறார் மஞ்சு வாரியர்.

ஹிந்தியில் மாதவனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் மஞ்சு வாரியார்.

கல்பேஷ் என்பவர் இந்தப்படத்தை இயக்க உள்ளார்.

Actress Manju Warrier to act with Madhavan

கமல் கட்சிக்கு அழைத்தாலும் நோ.. மக்கள் தெளிவாக உள்ளனர்..; உஷாரான ஆதி

கமல் கட்சிக்கு அழைத்தாலும் நோ.. மக்கள் தெளிவாக உள்ளனர்..; உஷாரான ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ரசிகர் மன்றத்தினர் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் திரைப்பட புகழ் நடிகர் ஆதி பங்கேற்றிருந்தார்.

முன்னதாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஆதி:

“நற்பணி மன்றத்தினரை சந்திக்கும் நேரங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்குவது, சமூக பணிகளில் ஈடுபடுவது வழக்கம். நம்மை பார்த்து மற்றவர்கள் நன்மை செய்ய வேண்டுமென்பதை ரசிகர்களுக்கு அறிவுறுத்துவதாகவும்

அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அழைத்தால் செல்வீர்களா என்கிற கேள்விக்கு

இப்பொழுது நடிப்பில் கவனம் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.

தற்போது மக்கள் விழிப்புடன் உள்ளனர் நல்லது செய்பவர்களை மக்கள் ஆதரிப்பார்கள் என்றார்.

விஜயகாந்த், கமல் என சினிமாத்துறையினர் தொடர்ந்து அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு:

அரசியலுக்கு சினிமாத்துறையினர் வரக்கூடாது என்பதில்லை சேவை செய்ய எந்த துறையினரும் அரசியலுக்கு வரலாம் என்றார்…

அடுத்து கிளாப், பார்ட்னர் என்கிற தமிழ் படங்களும் 2 தெலுங்கு படங்களிலும் நடித்து வருவதாக கூறினார்

அவருடன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர் இருந்தனர்.

Actor Aadhi reply on joining politics

தமிழ்நாட்டுக்கு விஜய்… கேரளாவுக்கு மம்மூட்டி..; கொண்டாடும் திரையுலகம்

தமிழ்நாட்டுக்கு விஜய்… கேரளாவுக்கு மம்மூட்டி..; கொண்டாடும் திரையுலகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போடப்பட்ட ஊரடங்கால் 2020 மார்ச் முதல் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன.

2020 நவம்பர் 10 முதல் தமிழகத்தில் 50% தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

ஆனாலும் ரசிகர்கள் கூட்டம் போதவில்லை.

பின்னர் 2021 ஜனவரி 13ல் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் தியேட்டர்களில் ரிலீசானவுடன் கூட்டம் அலைமோதியது.

இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் முதல் அனைத்து தரப்பினரும் உற்சாகமடைந்தனர்.

கேரளாவிலும் மாஸ்டர் ரிலீஸ் சமயத்தில் தியேட்டர்கள் 50% இருக்கைகளுடன் திறக்கப்பட்டாலும் இரவு காட்சிக்கு அனுமதியில்லை.

கேரள தியேட்டர்களில் மூன்று காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதிக்கப்பட்டன.

இதனால் தான் மோகன்லால் & மீனா நடித்து பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ‘த்ரிஷ்யம்-2’ படத்தை கூட ஓடிடியில் ரிலீஸ் செய்தனர்.

இரவு காட்சிக்கு அனுமதி கிடைக்கும் வரை தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டன.

இந்த நிலையில் நேற்று மார்ச்-11 இரவுக் காட்சிக்கு கேரள அரசு அனுமதி அளித்தது.

இதனையடுத்து மம்மூட்டி & மஞ்சு வாரியர் நடித்த ‘தி பிரைஸ்ட்’ என்ற படம் தியேட்டர்களில் வெளியானது.

இப்படத்தை பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர்.

பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் போர்டு மாட்டப்பட்டுள்ளதாம்.

கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் நஷ்டத்தில் இருந்தன.

தற்போது மம்மூட்டி படத்தால் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Fans and Critics praises Actor Mammootty

நீங்களே feel பண்ணினா எப்படி boss??.. பாஜக சீட் கொடுக்கல… ஆனாலும் மீடியாவை கலாய்க்கும் குஷ்பூ

நீங்களே feel பண்ணினா எப்படி boss??.. பாஜக சீட் கொடுக்கல… ஆனாலும் மீடியாவை கலாய்க்கும் குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியை பா.ம.க.விற்கு ஒதுக்கிவிட்டது அதிமுக கூட்டணி.

இத்தொகுதியில் சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த நடிகை குஷ்பு, தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவே அந்த தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளராகவும் குஷ்பு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக முன்பு கூறப்பட்டது.

ஆனால் சேப்பாக்கம் தொகுதியை பா.ம.க.,விற்கு அதிமுகவுக்கு கொடுத்தவிட்டதால் குஷ்பு & பா.ஜ., தரப்பு பெரும் அதிர்ச்சி அடைந்தது.

இன்று வெளியான திமுக வேட்பாளர் பட்டியலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குஷ்பூவுக்கு பாஜக சீட் கொடுக்கவில்லை என்பதை கலாய்த்து நெட்டிசன்கள் கருத்துக்கள் பதிவிட்டனர்.

இது பற்றி குஷ்பு பேசியதாவது…

“தேர்தலில் போட்டியிட உள்ளதாக நான் கூறவில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளைத்தான் நான் செய்தேன்.

எனக்கு சீட் கொடுப்பார்கள். நான் தேர்தலில் நிற்பேன் என்ற ஒப்புதலோடு பா.ஜ.க.வுக்கு வரவில்லை.

கட்சி மீது இருக்கும் நம்பிக்கை வந்தேன். இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.

சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திற்காக அசாம், மேற்கு வங்கம் கூட செல்வேன்.” இவ்வாறு குஷ்பூ பேசினார்.

மேலும் குஷ்பூவின் ட்விட்டர் பதிவில்…

“ஹஹாஹாஹாஹ .. என்னைப் பற்றி ஒரு பகுதி பத்திரிகைகள் போட்டியிடவில்லை ஏன்? என கேட்கின்றன.

நான் ஒரு போதும் போட்டியிடவில்லை என்று கூறவில்லை .

கட்சியும் இதுபற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனால் நீங்களே ஒரு கண்ணு காது மூக்கு போட்டு ஒரு பொம்மை உருவாகி, நீங்களே feel பண்ணினா எப்படி boss?? உங்களை பார்த்தா பாவமா இருக்கு. பல்பு வாங்கிட்டாங்க” என்று கிண்டலாக கூறியுள்ளார்.

Khushboo reply to her haters

திருமண ஏற்பாடுகள் தீவிரம்.. உதய்பூர் அரண்மனையை 2 நாட்கள் வாடகைக்கு எடுத்த ஹன்சிகா

திருமண ஏற்பாடுகள் தீவிரம்.. உதய்பூர் அரண்மனையை 2 நாட்கள் வாடகைக்கு எடுத்த ஹன்சிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய், சூர்யா, விஷால், ஜெயம் ரவி, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட கோலிவுட் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டவர் ஹன்சிகா.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார்

தற்போது இவரின் 50-வது படமான ‘மஹா’ ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதிலும் சிம்புவுடன் இணைந்து நடித்துள்ளார் ஹன்சிகா.

இந்த நிலையில் இவரது வீட்டில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறதாம்.

அதாவது… ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி என்பவருக்கு வருகிற மார்ச் 20-ந் தேதி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் நடைபெற உள்ளதாம்.

எனவே உதய்பூர் அரண்மனை ஒன்றினை 2 நாட்கள் வாடகைக்கு எடுத்து அதில் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்திவிருக்கிறார்கள்.

Wedding bells for hansika’s brother

More Articles
Follows