போதையில் குமரியை கொஞ்சிய கோடீஸ்வரன் குளிக்காமல் கோயிலுக்கு போனால் மரியாதை.; சிவகுமார் மீது திருப்பதி தேவஸ்தானம் வழக்கு (வீடியோ)

போதையில் குமரியை கொஞ்சிய கோடீஸ்வரன் குளிக்காமல் கோயிலுக்கு போனால் மரியாதை.; சிவகுமார் மீது திருப்பதி தேவஸ்தானம் வழக்கு (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tirupati Devasthanam filed complaint against Actor Sivakumarஓவியர், நடிகர், மேடை பேச்சாளர் என் பன்முகம் கொண்டவர் சிவகுமார்.

அதே சமயம் சிவகுமாரின் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் சில நேரம் சர்ச்சையை கிளப்பும்.

அனுமதியில்லாமல் சிவகுமாரை செல்ஃபி எடுத்த ஒருவரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டது சர்ச்சையாகவே பின்னர் மன்னிப்பு கேட்டு புதிய செல்போனை வாங்கி கொடுத்தார்.

அதன்பின்னரும் ஒருமுறை செல்போனை தட்டிவிட்டார்.

இந்த நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பேசிய பேச்சு ஒன்றின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்…

கோயில்களில் இன்னும் தீண்டாமை இருக்கிறது. ஏழைகள் திருப்பதி கோயிலுக்கு போனால் 4 நாட்கள் தரிசனத்திற்கு காத்திருக்க வேண்டும்.

ஆனால் கோடீஸ்வரன் தண்ணியடித்துவிட்டு கொஞ்சும் குமரியுடன் விடிய விடிய இருந்துவிட்டு குளிக்காமல் கோயிலுக்கு போனால் கூட கும்ப மரியாதை கொடுக்கப்படுகிறது.

இதை சும்மா சொல்லவில்லை. ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கிறேன் என பேசியிருந்தார்.

தற்போது இந்த பேச்சுதான் அவர் மீது வழக்கு பதிய காரணமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் மாயன் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திருப்பதி மலையில் உள்ள இரண்டாவது நகர காவல் நிலையத்தில் நடிகர் சிவக்குமார் மீது புகார் செய்யப்பட்டது.

தேவஸ்தானம் அளித்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tirupati Devasthanam filed complaint against Actor Sivakumar

IAS படிப்புக்கு வைத்திருந்த 5 லட்சத்தை ஏழைகளுக்கு கொடுத்த நேத்ரா மோகன்.; கல்விச் செலவை அரசு ஏற்கும் என முதல்வர் உறுதி!

IAS படிப்புக்கு வைத்திருந்த 5 லட்சத்தை ஏழைகளுக்கு கொடுத்த நேத்ரா மோகன்.; கல்விச் செலவை அரசு ஏற்கும் என முதல்வர் உறுதி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

student nethraமதுரையில் மேலமடை பகுதியைச் சேர்ந்தவர் சலூன் கடைக்காரர் மோகன். இவருக்கு வயது 48.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரிசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை நிவாரணமக வழங்கினார்.

மேலும் பலர் இவரின் உதவியை நாட தனது மகள் நேத்ராவின் ஐஏஎஸ் படிப்புக்காக சேமித்து வைத்த ரூ.5 லட்சத்தையும் ஏழைகளுக்கு கொடுத்து உதவினார்.

இவரின் மகள் நேத்ரா தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார்.

நடிகர் பார்த்திபன் உட்பட பலரும் மோகனை பாராட்டினர். மேலும் அவரின் மகள் நேத்ரா கல்விக்கு உதவுவதாக அறிவித்தனர்.

மோகனின் இந்த நெகிழ்ச்சியான உதவியை அறிந்த பிரதமர் மோடி, மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிலையில் நேத்ராவின் உயர்கல்விச் செலவை தமிழக அரசு ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்…

முடிதிருத்தகம் நடத்தி வரும் மோகன், தனது மகளின் வேண்டுகோளுக்கிணங்க, படிப்புக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை, ஏழை, எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்க செலவிட்டதற்கு, தமிழக மக்கள் சார்பாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் எதிர்கால படிப்பிற்கு சேமித்து வைத்திருந்த பணத்தை, ஊரடங்கு காலத்தில், ஏழை, எளிய மக்களுக்கு செலவிட்டதை அங்கீகரிக்கும் வகையில், நேத்ராவின் உயர் கல்வி செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

நேத்ரா அனைத்து வகையிலும் சிறந்து விளங்கி, இதுபோன்ற பற்பல பாராட்டுதல்களையும், அங்கீகாரத்தையும் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் மேலும் பெருமை சேர்த்திட வேண்டும் எனவும் முதல்வர் வாழ்த்தியுள்ளார்.

மீண்டுமொரு வெட்டுக்கிளி தாக்குதல் இருக்கு..; இந்தியாவில் 15 மாநிலங்களுக்கு ஐ.நா. எச்சரிக்கை

மீண்டுமொரு வெட்டுக்கிளி தாக்குதல் இருக்கு..; இந்தியாவில் 15 மாநிலங்களுக்கு ஐ.நா. எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

locust attack in india 2020கடந்த மார்ச் மாதம் முதலே கொரோனா பாதிப்பால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா உயிர் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனிடையில் கடந்த மே மாதம் கிழக்கு ஆப்பிரிக்காவில் பெருகிய வெட்டுக்கிளிக் கூட்டம் பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு படையெடுத்து வந்தது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆயிரக்கணக்கான எக்டேர் பரப்பில் உள்ள பயிர்கள் சேதமடைந்துள்ளன.

தமிழகத்திலும் சில இடங்களில் இந்த வெட்டுக்கிளி தாக்குதல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஈரானிலும் வளர்ந்துவரும் வெட்டுக்கிளிகள் கூட்டம் ஜூன், ஜூலை மாதங்களில் இந்தியாவிற்கு படையெடுத்து வரும் என ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த தாக்குதல் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் இருக்கும் என தெரிய வந்துள்ளது.

கௌதம் மேனனின் ‘ஒரு சான்ஸ் கொடு பொண்ணு’..; மேகா ஆகாஷிடம் கெஞ்சும் சாந்தனு & கலையரசன்

கௌதம் மேனனின் ‘ஒரு சான்ஸ் கொடு பொண்ணு’..; மேகா ஆகாஷிடம் கெஞ்சும் சாந்தனு & கலையரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

oru chance kuduவிண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் 2ஆம் பாகம் என்ற பெயரில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தை இயக்கினார் கௌதம் மேனன்.

இந்த குறும்படம் பல்வேறு கிண்டல்களை உருவாக்கியது. பல மீம்ஸ்கள் உருவானது.

அவை சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டது.

தற்ப்போது கௌதம் வாசுதேவ் மேனன் தனது அடுத்த வீடியோவின் டீசரை வெளியிட்டு உள்ளார்.

இந்த குறும்படம் அல்ல பாடல்.

ஒரு சான்ஸ் கொடு பொண்ணு… என்ற இப்பாடலில் வீடியோ சாந்தனு பாக்யராஜ், மேகா ஆகாஷ், கலையரசன் போன்றோர் நடித்திருந்தனர்.

சாந்தனு ஒரு லவ்வர் பையனாகவும் கலையரசன் லோக்கல் பையனாக லுங்கியுடன் நடனமாடுகிறார்.

மேகா ஆகாஷ் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அழகாய் அமர்ந்திருக்கிறார்.

மேலும் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் நடனமாடும் காட்சியும் அதில் உள்ளது.

இந்த பாடலை கார்த்திக் இசையமைக்க, பாடலாசிரியர் கார்க்கி இதற்கு காதல் வரிகளை எழுதி இருக்கிறார்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள இந்த டீசர் 24 விநாடிகள் கொண்டது.

இந்த பாடலின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.. விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Attachments area

ஆன்லைனில் படம் ரிலீஸானால் அரசுக்கு நஷ்டம்.. – அமைச்சர் அதிரடி கருத்து

ஆன்லைனில் படம் ரிலீஸானால் அரசுக்கு நஷ்டம்.. – அமைச்சர் அதிரடி கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

minister kadambur rajuகொரோனா ஊரடங்கால் இந்தியா முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 3 மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதாலும் சினிமா சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாலும் கோலிவுட்டில் மட்டும் ரூ 800 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தியேட்டர்கள் திறக்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் தயாரிப்பாளர்கள் பலரும் ஆன்லைனில் படத்தை வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அண்மையில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிட்டார் நடிகர் சூர்யா.

விரைவில் கீர்த்தி சுரேஷின் பெண் குயின் படத்தை அமேசானில் ரிலீஸ் செய்யவுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

இந்த நிலையில் ஆன்லைனில் படம் ரிலீஸ் குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

அதில்… ஆன்லைனில் படம் வெளியிடுவது தொடர்ந்தால் சினிமாத்துறைக்கு உகந்ததாக இருக்காது.

திரைத்துறையின் 100 ஆண்டு கால வரலாற்றில் ஆன்லைனில் படம் வெளியானது இதுவே முதன்முறை.

ஆன்லைனில் திரைப்படங்களை வெளியிடுவது ஆரோக்கியமாக இருக்காது

ஆன்லைனில் திரைப்படங்களை வெளியிடுவதால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுவார்கள்.

மேலும் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படும் எனவும் அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

செம்மொழித் தமிழாய்வு இயக்குனர்.; ரஜினியை திருப்திப்படுத்த நியமனமா?.. சீறும் சீமான்

செம்மொழித் தமிழாய்வு இயக்குனர்.; ரஜினியை திருப்திப்படுத்த நியமனமா?.. சீறும் சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini seemanசென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் இயக்குநராக முனைவர் இரா.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இத் தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ட்விட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

அந்த ட்வீட்டில் ஆட்சியாளர்களின் பெயரோடு நடிகர் ரஜினிகாந்த்தையும் அமைச்சர் டேக் போட்டு பதிவு செய்திருந்தார்.

அதேபோல், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினியும் கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில், நாட்டில் உள்ள எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என ரஜினி குறிப்பிட்டு இருந்தார்.

தமிழ் மொழியை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார்.

இந்த விவகாரம் ரஜினி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் மற்றவர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது..

இந்தநிலையில், மத்திய அமைச்சர் நடிகர் ரஜினியை டேக் செய்தது குறித்தும் பல்வேறு கேள்விகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து சீமான், “சென்னை தரமணியில் அமைந்துள்ள மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முதல் இயக்குநராக ஆர்.சந்திரசேகரன் என்பவரை நியமனம் செய்திருக்கும் மத்திய அரசின் செயல் பெரும் ஐயத்தைத் தோற்றுவிக்கிறது.

நீண்ட நெடுநாள்களாகச் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநரை நியமிக்க வேண்டும் எனும் கோரிக்கை கிடப்பில் இருந்தவேளையில், தற்போது நடைபெற்றிருக்கும் நியமனம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், அதன் பின்புலத்தில் நடந்தேறிய அரசியல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது’’ என தெரிவித்துள்ளார்..

More Articles
Follows