உடல் உறுப்புகளை கடத்தும் கும்பல் பற்றிய படம் *துரியோதனா*

உடல் உறுப்புகளை கடத்தும் கும்பல் பற்றிய படம் *துரியோதனா*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thuriyodhana movie news updatesதிரில்லர் படங்களுக்கு எப்போதும் ஒரு மாஸ் இருக்கும்.

அந்த வகையில் புதியவர்களின் முயற்சியாக “துரியோதனா” என்ற படம் உருவாகியுள்ளது.

உடல் உறுப்புகளை கடத்தும் கும்பலால் ஹீரோயின் படத்தின் தொடக்க காட்சியில் கடத்தப்படுகிறார்.

அதை கண்டு பிடிக்கும் சீக்ரெட் இண்பர்மேஷன் ஆபிசர் டெல்லியில் இருந்து கேரளா வருகிறார்.

கதை தொடக்கம் முதல் இறுதி வரை பரபரப்பாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை வந்த திரில்லர் படங்களில் இந்தப்படம் வேறு கோணத்தில் இருக்கும் என கூறுகிறார் இயக்குனர் பிரதோஷ்.

மும்பை, டெல்லி, ராமேஸ்வரம், கேரளாவின் அடர்த்தியான காடுகளில் “துரியோதனா” திரைப்படம் படமாக்கப்பட்டது.

கதாநாயகனாக பிரதோஷ், வினுராகவ் நடிக்கிறார்கள். கதாநாயகியாக ஷில்பா நடிக்கிறார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் சின்னத்திரையில் கலக்கும் நவ்யாசாமி வெள்ளித்திரைக்கு வருகிறார்.

ஒளிப்பதிவு: ஹரீஷ் அப்துல்லா, மகேஷ் ராம்.

எடிட்டிங்: விமல்

வசனம்: தனசேகரன்

இசை: C.S.குமார்

பாடல்கள்: ஸ்ரீதர், பிரதோஷ்

கதை, திரைக்கதை, இயக்கம் பிரதோஷ்

தமிழகம் முழுவதும் “ஆக்ஷன் ரியாக்ஷன்” நிறுவனம் மூலம் ஜெனீஷ் வீரபாண்டியன் வெளியிடுகிறார்.

Thuriyodhana movie news updates

பிரேமம் பட ஆனந்த்நாக் நடிக்கும் *ரெடி டு சூட்*; வில்லனாக மனோஜ் பாரதிராஜா

பிரேமம் பட ஆனந்த்நாக் நடிக்கும் *ரெடி டு சூட்*; வில்லனாக மனோஜ் பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Premam fame Anand Ananth Nag and Manoj Bharathiraja teams up for Ready to Shootசமீப காலமாக தமிழ் சினிமாவில் வித்தியாசமான பட தலைப்புகள் வந்தவண்ணம் உள்ளது.

அந்த வரிசையில் முற்றிலும் மாறுபட்ட தலைப்புடன் ஒரு திரில்லர் படம் உருவாகி வருகிறது.

அது எஸ்.எஸ்.வி எண்டர்பிரைசஸ் எஸ்.ஆறுமுகம் தயாரிக்கும் “ ரெடி டு சூட்“

இந்த படத்தின் பூஜை சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

இயக்கம் – மனோஜ்குமார் இதயராஜ்

நேரம், பிரேமம், வெற்றிவேல், போன்ற படங்களில் நடித்த ஆனந்த் நாக் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி – ஜீவிதா

வில்லனாக பாரதிராஜாவின் மகன் மனோஜ் கே.பாரதிராஜா நடிக்கிறார். மற்றும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர்.

ஒளிப்பதிவு – சதீஷ் கதிர்வேல்
இசை – அச்சு
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – எஸ்.ஆறுமுகம்.

முழுக்க முழுக்க திரில்லராக உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

Premam fame Anand Ananth Nag and Manoj Bharathiraja teams up for Ready to Shoot

ready to shoot pooja

அருள்நிதி-பரத் நீலகண்டன் இணையும் படத்திற்கு தர்புகா சிவா இசை

அருள்நிதி-பரத் நீலகண்டன் இணையும் படத்திற்கு தர்புகா சிவா இசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Darbuka Siva will be composing music for Arulnithis next movieஒரு இசையமைப்பாளரின் உண்மையான வெற்றி என்பது குறிப்பிட்ட பாடல்களுக்கு ரசிகர்கள் மயங்குவதும், அந்த படைப்பாளியை பற்றி இணைய தளத்தில் தேடுவதும் தான்.

தற்காலத்திய சகாப்தத்தில் மிகவும் திறமையான கலைஞர்களுக்கிடையில் பெரும் போட்டி இருப்பதால், அடுத்த கட்டத்துக்கு செல்ல ஒரு கடினமான சூழ்நிலை நலவுகிறது.

ஆனால் தர்புகா சிவா எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தனது தனித்துவமான பண்புகளால் இசை ரசிகர்களை கவர்ந்திழுப்பதோடு, ரசிகர்களிடம் அமோக வரவேற்புகளையும் பெறுவது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் தர்புகா சிவா தனது இசைப்பயணத்தை புதுமையான இசையாலும், ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தையும் வழங்கி வருகிறார்.

எனை நோக்கி பாயும் தோட்டாவின் மூன்று சிங்கிள் பாடல்களால் (மறுவார்த்தை, விசிறி மற்றும் நான் பிழைப்பேனா) கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ரசிகர்கள் அனைவரையும் கட்டிப் போட்டுள்ளார் தர்புகா சிவா.

மேலும், இன்னும் ரிலீஸாகாத ஒரு படத்தின் பாடல்கள் நீண்ட காலமாக டாப் பாடல்கள் லிஸ்டில் இடம் பிடித்திருப்பது மிகவும் சவாலான விஷயம்.

தற்போது, இந்த இசையமைப்பாளர் அறிமுக இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைக்க தயாராகி விட்டார்.

எஸ்பி சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ‘ப்ரொடக்‌ஷன் நம்பர் 2’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
“எங்கள் படத்தின் மதிப்பு தர்புகா சிவாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்த பிறகு மேலும் அதுகரித்துள்ளது.

அவரது இசை திறமை மற்றும் இளம் இசை ரசிகர்களிடம் அவரின் பிரபலத்தன்மையை பார்த்து நாங்கள் வியப்படைந்தோம்.

அவரது இசையால் படத்தை நாங்கள் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வோம்” என பெருமையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் ஷங்கர்.

உச்சபட்ச கலைஞர்கள் பலர் இந்த படத்துக்குள் வருவது, நம்மை மிகவும் உற்சாகப்படுத்தும் விஷயங்கள் படத்தில் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

Darbuka Siva will be composing music for Arulnithis next movie

சிவகார்த்திகேயனின் அப்பா பிறந்தநாளில் அவரது இரு பட முக்கிய நிகழ்வுகள்

சிவகார்த்திகேயனின் அப்பா பிறந்தநாளில் அவரது இரு பட முக்கிய நிகழ்வுகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan24AM ஸ்டுடியோ சார்பாக ஆர்.டி.ராஜா தயாரிக்கும் புதிய படத்தின் சூட்டிங் பூஜை மற்றும் சூட்டிங் நேற்று ஆரம்பமானது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, ரவிக்குமார் இயக்குகிறார்.

இதே நாளில் சிவகார்த்திகேயன் முதல் படத் தயாரிப்பான கனா என்ற படத்தின் டப்பிங்கும் துவங்கப்பட்டது.

இப்படத்தை நடிகரும் பாடகருமான அருண்ராஜா காமராஜ் இயக்க, சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த இரு படத்தின் முக்கிய நிகழ்வுகளும் ஒரே நாளில் நடப்பதும், இன்று என் அப்பாவின் பிறந்தநாள் என்பதால் அவரின் ஆசியுடன் செய்கிறேன் என சிவகார்த்திகேயன் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரது தந்தை இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Today,On Appa’s bday started my new film shoot and #Kanaa ‘s dubbing wit his blessings thanks to all the lovely people for wishing us..Spl thanks to my brothers and sisters for all the love.. love u all

மீண்டும் இணையும் மெகா காமெடி கூட்டணி பார்த்திபன்-வடிவேலு

மீண்டும் இணையும் மெகா காமெடி கூட்டணி பார்த்திபன்-வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

parthiban vadiveluநடிகர் பார்த்திபன் சரியான நக்கல் பார்ட்டி என்பது நாம் தெரிந்த ஒன்றுதான்.

அதுவும் இவர் வடிவேலு உடன் சேர்ந்துவிட்டால் வடிவேலுவின் கதி அந்தோ பரிதாபம்.

இவர்களின் கூட்டணியில் வந்துள்ள அனைத்து படங்களுமே இவர்களின் காமெடிக்காகவே ஓடியது.

தற்போது இந்த கூட்டணி விமல் நடிக்கும் படமொன்றில் இணைகிறது.

சுராஜ் இயக்கும் ஒரு படத்தில் விமல் – வடிவேலு இருவரும் போலீசாக நடிக்கின்றனர்.

இதில் நடிகர் பார்த்திபனும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகவேள் எம்ஆர். ராதாவின் வாழ்க்கையை படமாக்கும் பேரன் ஐக்

நடிகவேள் எம்ஆர். ராதாவின் வாழ்க்கையை படமாக்கும் பேரன் ஐக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MR Radhaநடிகவேள் எம்ஆர். ராதா நடித்த படங்களை இன்று பார்த்தால் கூட அவர் அன்று சொன்னது இன்று நடக்கிறதே என வியக்காதவர்களே இருக்க முடியாது.

அவரின் வசனங்கள் இன்றைய காலகட்டத்திற்கு அப்படியே பொருந்தி வருகிறது.

நடிப்பு, அரசியல், சுயமரியாதை இயக்கம் என ஒட்டுமொத்த தமிழகத்தை கவர்ந்த அவரது வாழ்க்கை இப்போது ஒரு படமாக உருவாகவுள்ளது.

இப்படத்தை எம்ஆர். ராதாவின் பேரன் ஐக் என்பவர் இயக்கவுள்ளார்ர்.

ஜீவா, ஸ்ரீதிவ்யா நடித்த `சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற படத்தை இயக்கியவர் அவரே.

இப்படம் குறித்த அறிவிப்பை தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

`நடிகவேளைப் பார்க்காதவர்கள் கூட அவரை மறந்திருக்க முடியாது. இது அவர்களுக்கானது தான். என்னுடைய தாத்தா ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா பற்றி இதுவரை சொல்லப்படாத கதையை படமாக எடுக்கிறேன்.

பேரனாக மட்டுமின்றி, ரசிகனாகவும் இந்தப் படத்தை உண்மையாக முழுமனதுடன் எடுப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ike radha‏ @thenameisike

For those who’ve never seen him but never forgotten him – This ones for U ! Unveiling untold stories of my legendary grandfather ‘Nadigavel’ M.R.Radha in a Film which I hope I do justice to as a grandson & more importantly as a fan #MRRadhaTheFilm #Nadigavel #WorkInProgress

More Articles
Follows