தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த 8 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.
வருகிற நவம்பர் 10முதல் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் தான் VPF கட்டணத்தை செலுத்த முடியாது என, பாரதிராஜாவை தலைவராக கொண்ட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தினர் போர்க்கொடி உயர்த்தினர் என்ற தகவலை பார்த்தோம்.
நவம்பர் 10ல் தியேட்டர்கள் திறந்தாக வேண்டும். தயாரிப்பாளர்கள் பிரச்சினையை இப்போது பேச வேண்டாம் என அமைச்சர் கடம்பூர் ராஜீ அறித்திருந்தார்.
இது தொடர்பாக, திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் சுமூகமான தீர்வு எட்டப்படவில்லை.
இதனால் தியேட்டர்கள் தீபாவளிக்கு திறக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் சினிமா ரசிகர்களும் புதுப்படங்களை பார்க்க முடியாமல் போகுமா? என்ற வருத்தத்தில் உள்ளனர்.
தயாரிப்பாளர் சங்கத்திற்கு நவம்பர் 22ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
புதிய தலைமை நிர்வாகிகள் அமைந்த பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி திரையங்குகளை திறந்து கொள்ளலாம் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
Theatre owners and Movie producers clash Will Theatre reopen before Diwali