ஷங்கர் விஜய் படங்களை தொடர்ந்து அஜித் படத்திற்கும் தமன் இசை

ஷங்கர் விஜய் படங்களை தொடர்ந்து அஜித் படத்திற்கும் தமன் இசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

தமிழ், தெலுங்கில் உருவாகும் ’விஜய் 66’ படத்தை தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைக்க உள்ளார்.

ஷங்கர் – ராம் சரண் இணையும் ‘ராம் சரண் 15’ படத்திற்கும் தமன் தான் இசையமைக்கவுள்ளார்.

தற்போது விஜய் மற்றும் ஷங்கர் படங்களை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள படத்திற்கும் தமன் இசையமைக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

அஜித்தின் 61வது படத்தை வலிமை இயக்குனர் வினோத் இயக்க போனிகபூர் தயாரிக்கவுள்ளார்.

அஜித் படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளது இதுதான் முதன்முறையாகும்.

கூடுதல் தகவல்…

‘பாய்ஸ்’ படத்தில் 5 பாய்ஸ்களில் ஒருவராக தமன்-ஐ நடிகராக அறிமுகப்படுத்தினார் ஷங்கர். மேலும் இவர் தயாரித்து அறிவழகன் இயக்கிய ‘ஈரம்’ படத்தில்தான் தமன் முதன்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Thaman will compose music for Ajith 61 movie

கரூரை கதிகலங்க வைத்த உண்மைச் சம்பவம் ‘கம்பெனி’-யானது

கரூரை கதிகலங்க வைத்த உண்மைச் சம்பவம் ‘கம்பெனி’-யானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘கம்பெனி’

இதில் பேசப்பட்டிருக்கும் உண்மை சம்பவத்தால் சர்ச்சை வெடிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பேருந்துகளின் முழு வடிவமைப்பு தொழிற்சாலை ஒன்றில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

இப்படத்தை செ.தங்கராஜன் இயக்க, ஸ்ரீ மகானந்தா சினிமாஸ் சார்பில் ஆர்.முருகேசன் மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

இப்படத்தின் நாயகர்களாக ‘கோலி சோடா’ புகழ் பாண்டி, முருகேசன் மற்றும் அறிமுக நடிகர்கள் டிரிஷ் குமார், பிரித்வி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

நாயகிகளாக ‘கன்னி மாடம்’ படத்தில் நடித்த வளினா மற்றும் ‘திரெளதி’ படத்தில் நடித்த காயத்ரி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

பஸ்களை முழுமையாக வடிவமைக்கும் தொழிற்சாலையில் வேலை செய்யும் நண்பர்களான நான்கு இளைஞர்கள், ஒரு லட்சியத்தோடு பயணிக்கிறார்கள்.

அவர்களுடைய அந்த லட்சிய பயணத்தில் வரும் பிரச்சனைகளும், அவர்கள் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள், என்பது தான் படத்தின் கதை.

அந்த இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையின் பின்னணி என்ன? என்பது தான் நடந்த உண்மை சம்பவமாகும். மேலும், அந்த பிரச்சனையை திரைக்கதையாக்கி இயக்குநர் காட்சிகளை வடிவமைத்திருப்பது, விறுவிறுப்பான ஆக்‌ஷன் படமாக மட்டும் இன்றி, சமூக பிரச்சனையை பேசும் ஒரு தரமான திரைப்படமாகவும் ‘கம்பெனி’ படத்தை உயர்த்தியுள்ளது.

மேலும், கதைக்களம் பஸ்களை முழுமையாக வடிவமைக்கும் தொழிற்சாலை என்பதால், நிஜமாகவே அப்படி ஒரு தொழிற்சாலையில் படப்பிடிப்பு நடத்த வேண்டும், என்று முடிவு செய்த இயக்குநர் செ.தங்கராஜன், அதற்காக கரூர் மாவட்டத்தில் உள்ள பல தொழிற்சாலைகளை அணுகியுள்ளார். ஆனால், தங்களது தொழில் ரகசியம் மற்றும் புதுவகை பேருந்துகளின் வடிவமைப்பு போன்றவை வெளியே தெரிந்துவிடும் என்பதால் படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கவில்லை.

கதைக்களத்தோடு மக்கள் பயணிக்க வேண்டும் என்றால், உண்மையான களத்தில் வைத்து தான் கதையை சொல்ல வேண்டும், என்பதில் உறுதியாக இருந்த இயக்குநர் தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து பல தொழிற்சாலைகளை அணுகிக்கொண்டிருக்க, கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் மிகப்பெரிய பேருந்து தொழிற்சாலையின் உரிமையாளர், இயக்குநரின் விடா முயற்சியால் ஈர்க்கப்பட்டதோடு, படம் பேசும் சமூக பிரச்சனைப் பற்றி அறிந்துக்கொண்டு, இந்த படம் நிச்சயம் இயக்குநர் நினைத்தது போல வர வேண்டும், என்று கூறி தனது தொழிற்சாலையில் படப்பிடிப்பு நடத்த அனுமதியளித்துள்ளார்.

அதன்படி, சுமார் 10 நாட்கள் அந்த பேருந்து தொழிற்சாலையில் படப்பிடிப்பு நடத்திய இயக்குநர் செ.தங்கராஜன், இதுவரை எந்த ஒரு தமிழ்த் திரைப்படத்திலும் காட்டாத ஒரு களத்தை தனது ‘கம்பெனி’ திரைப்படத்தில் காட்டியுள்ளார். பேருந்துகளின் முழு வடிவமைப்பு தொழிற்சாலை என்ற களத்தை இதுவரை பார்த்திராத மக்களுக்கு, இது மிக புதிதாக இருப்பதோடு சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

பேருந்து தொழிற்சாலையில் நடந்த உண்மை சம்பவம் என்பதால், கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பல பேருந்து தொழிற்சாலைகள் மற்றும் அதன் ஊழியர்களின் பார்வை ‘கம்பெனி’ திரைப்படம் மீது விழுந்திருப்பதோடு, சினிமா ரசிகர்களிடமும் படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவுக்கு மட்டும் இன்றி ரசிகர்களுக்கும் புதிய அனுபவத்தை கொடுக்கும் விதமாக உருவாகி வரும்
‘கம்பெனி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் வெளியீட்டு தேதி குறித்து அறிவிக்க உள்ள படக்குழு திரையரங்கங்களில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.

இப்படத்திற்கு ஜுபின் இசையமைத்துள்ளார். படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும் இசையமைப்பாளர் ஜுபினின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஜுபின் நிச்சயம் பாராட்டு பெறுவார், என்று இயக்குநர் செ.தங்கராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தின் படத்தொகுப்பு பணியை ஜி.சசிகுமார் கவனிக்கிறார். மிராக்கல் மைக்கேல் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பெஞ்சமின் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார்.
கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள ‘கம்பெனி’ திரைப்படத்தில் பேசப்பட்டிருக்கும் உண்மை சம்பவம் சர்ச்சை வெடிக்கிறதோ, இல்லையோ, ‘ஜெய் பீம்’ போன்ற பெரும் அதிர்வலையை ‘கம்பெனி’ படம் ஏற்படுத்துவது உறுதி

Company movie updates True incident from Karur

ரியல் ஹீரோ : விஷ உணவை தடுக்க மக்களுக்காக களமிறங்கும் கார்த்தி

ரியல் ஹீரோ : விஷ உணவை தடுக்க மக்களுக்காக களமிறங்கும் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நம் உணவினால் நமக்கு அபாயம் என்பதை உணர்ந்து நடிகர் கார்த்தியின் புதிய முயற்சி. எனவே மக்கள் நலனைக் காக்க கையெழுத்து வேட்டை நடத்தவிருக்கிறார் நடிகர் கார்த்தி.

தினமும் நாம் சாப்பிடும் உணவில் உள்ள நச்சுத்தன்மைகள் குறித்துப் பல்வேறு செய்திகளைப் படித்து தினசரி படித்து வருகிறோம்.

நடிகர் கார்த்தி படிப்பதோடு நின்றுவிடாமல், அதைத் தடுக்கும் வகையில் பல்வேறு முயற்ச்சிகளை எடுத்து வருகிறார்.

தற்போது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகள் மீதான ஒழுங்குமுறைகளை மாற்றவுள்ளது. இதுகுறித்த இணைய வழிக் கையெழுத்து இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

இந்தக் கையெழுத்து இயக்கத்தில் கார்த்தியும் கையெழுத்திட்டுள்ளார். மேலும், இதற்கு அனைவரது ஆதரவும் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கார்த்தி பகிர்ந்துள்ள செய்தி:

“உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகள் மீதான ஒழுங்குமுறைகளை மாற்றவுள்ளது. இதனால் அத்தகைய உணவுகள் நம் வாழ்க்கைக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இப்படி மரபணு மாற்றப்பட்ட உணவுகள் ஒவ்வாமை, நோய் எதிர்ப்புக் குறைபாடு, வளர்ச்சிக் குறைபாடு, வளர்ச்சி தடைப்படுதல், உடலுறுப்பு சேதம், இனப்பெருக்க பாதிப்புகள் மற்றும் புற்றுநோய் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான நாடுகள் மரபணு மாற்றப்பட்ட பயிர் சாகுபடியை ஏற்பதில்லை. மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் அழுத்தம் இருந்தபோதிலும் இப்படியான உணவுப் பயிர்கள் சுற்றுச்சூழலுக்கும், ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பானவை அல்ல என்பதால் இந்தியாவிலும் அவற்றைப் பயிரிட இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

பொதுமக்கள் மற்றும் விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்ட வலுவான ஆதாரங்களின் காரணமாக Bt பிரிஞ்சால், GM கடுகு போன்றவை இதுவரை அனுமதிக்கப்படவில்லை. ஆனால், தற்போது விதிமுறைகளைத் தளர்த்துவதன் மூலம் மரபணு மாற்றப்பட்ட உணவுகளை நம் நாட்டுக்குள் அனுமதிப்பது ஏன் என்று புரியவில்லை.

இப்படியான உணவுகள் பாதுகாப்பானதா, இல்லையா என்பதை அறிய எந்த மாதிரியான சோதனைகள் பின்பற்றப்படும் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. யார், எப்படி இதுகுறித்து முடிவெடுப்பார்கள் என்பது குறித்தும் எந்தக் குறிப்பும் இல்லை.
எனவே மக்கள் நலனைக் காக்க, இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாதவர்களுக்காக, நாம் ஒன்றிணைவோம். இந்த மனுவில் கையெழுத்திடுவோம்”.

இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.

கார்த்தியின் இந்தப் பகிர்வுக்கு இணையத்தில் அனேக பேர் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டு வருகிறார்கள். தொடர்ந்து கையெழுத்திடுகிறார்கள். நீங்களும் பங்கு கொள்ளலாம்..

Actor Karthis new initiative against Poisonous food

கடவுளாக நடித்தவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டமளித்த திருப்பதி தேவஸ்தானம்

கடவுளாக நடித்தவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டமளித்த திருப்பதி தேவஸ்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்யன் ஷ்யாம் நடித்த பிரம்மாண்ட நாயகன் படத்தைப் பார்த்த திருப்பதி தேவஸ்தான தலைவர் மற்றும் அவரது குழுவினர் படக்குழுவினரையும் இயக்குனர் பாம்பே ஞானத்தையும் பாராட்டியதோடு படத்தில் திருப்பதி சுவாமி ஸ்ரீவெங்கடாஜலபதியாக நடித்த ஆர்யன் ஷ்யாமை கட்டி பிடித்து பாராட்டி பகவான் பாலாஜியாகவே இந்தப் படத்தில் வாழ்ந்துக்காட்டியிருக்கிறீர்கள் அவரை திரைப்படம் மூலமாக தரிசனம் பண்ற பாக்கியத்தை கொடுத்திருக்கிறீர்கள்.

இப்படத்தில் விரதம் இருந்து நடித்ததாக செய்தி அறிந்தோம் மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு எங்களது தேவஸ்தான சார்பில் Young Superstar என்ற பட்டத்தை தங்களுக்குவழங்கி மகிழ்கிறோம். என்று கூறியிருக்கிறார்கள்.

மேலும் ஆர்யன் ஷ்யாமுக்கு இது சம்பந்தமாக தேவஸ்தான தலைவர் துஷ்மந்த் குமார்தாஸ்பாராட்டி கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.

இந்தப்படத்தில் திருப்பதி ஸ்ரீவெங்கடாஜலபதியாக ஆர்யன் ஷ்யாம் நடித்திருக்கிறார் நடிகை அதிதி.மகாலட்சுமியாகவும் நடிகை சந்தியா பத்மாவதிதேவியாகவும் நடித்திருக்கிறார்கள்.

விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை எஸ். ஆனந்த்பாபு கவனிக்க இசையை திவாகர் சுப்பிரமணியம் அமைத்திருக்கிறார். இந்த பிரம்மாண்ட நாயகன் படத்தை எழுதி இயக்கியிருப்பவர் கலைமாமணி திருமதி பாம்பே ஞானம் சுப்பிரமணியம்.

இதற்கிடையில் ஆர்யன் ஷ்யாம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் AVM புரொடக்ஷன்ஸ் வழங்கும் அந்த நாள் படமும் தயாராகி விரைவில் வெளிவரவிருக்கிறது.

இந்தப் படம் அமானுஷ்யம் மற்றும் பிளாக் மேஜிக் கொண்ட சைக்கலாஜிக்கல் திரில்லர் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Thirupathi Devasthanam honoured Aryan shyam with Young Superstar title

2022 ஜனவரி 9 நிலவரப்படி பொங்கலுக்கு மோதும் தமிழ் படங்கள் இதோ..

2022 ஜனவரி 9 நிலவரப்படி பொங்கலுக்கு மோதும் தமிழ் படங்கள் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படம் 2022 பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு (இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு) அமலுக்கு வந்துள்ளதால் படத்தின் வெளியீடு தள்ளிப் போனது.

இதனையடுத்து வலிமை விட்ட இடத்தை பிடிக்க பல தயாரிப்பாளர்கள் முன் வந்துள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன.

நாளை திங்கள் முதல் சனிக்கிழமை வரை மூன்று காட்சிகள் மட்டும் தியேட்டர்களில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இரவு காட்சிகள் ரத்து. மேலும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘ராதே ஷ்யாம்’ மற்றும் ‘வலிமை’ ஆகிய படங்கள் தங்கள் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்தன.

பொங்கல் தினத்தில் 6 படங்கள் வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர்கள் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1. சசிகுமார் நடித்த ’கொம்பு வச்ச சிங்கம்டா’ 2. விதார்த் நடித்த ’கார்பன்’ 3. சதீஷ் நடித்த ’நாய் சேகர்’ , 4. அஸ்வின் நடித்த ‘என்ன சொல்ல போகிறாய்’, மற்றும் 5. ‘மருத’ 6. ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா ஆகிய திரைப்படங்கள் ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் விருந்தாக ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஜனவரி 13ல் வெளியாகவுள்ள படங்கள் பற்றிய ஒரு பார்வை இதோ…

ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா

லட்சுமிமேனன் கதாநாயகியாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா.
கே எஸ் ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியன் எழுதி இயக்கியுள்ளார். சந்தோஷ பாண்டி ஒளிப்பதிவில் கே.ஜெய் க்ரிஷ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு சந்திரகுமார் படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்கிசோஃபிரினியா எனும் மன சிதைவு நோயை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.

நாய் சேகர்
கிஷோர் ராஜ்குமாரின் இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ள படம் நாய் சேகர். சதீஷ், பவித்ரா லெட்சுமி ஜோடியாக நடித்துள்ளனர். அஜேஷ் இசையமைத்துள்ளார். வடிவேலு நடித்த ஒரு படத்தில் நாய்சேகர் என்பது அவரது கேரக்டர் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஜிஎஸ் குழுவினர் நாய் சேகர் பெயரை விட்டுக் கொடுக்காத காரணத்தினால் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்து வருவது தனிக்கதை. இந்த படத்தை லைகா தயாரித்து வருகிறது.

கொம்பு வச்ச சிங்கம்டா
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார், மடோனா செபஸ்டின், சூரி, மறைந்த இயக்குநர் மகேந்திரன், ஹரிஷ் பெரடி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’. இந்தர் குமார் தயாரித்துள்ளார்.

கார்பன்
ஹிப் ஹாப் ஆதி நடித்த அன்பறிவு படத்தில் வில்லனாக நடித்திருந்தார் விதார்த். இந்த அன்பறிவு படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும் விதார்த் நடிப்பை பாராட்டும்படியாக இருந்தது.

தற்போது விதார்த் நடிப்பில் 25வது படமாக உருவாகியுள்ள படம் “கார்பன். ஶ்ரீனிவாசன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

கனவில் காண்பவை எல்லாம் நிஜத்தில் அப்படியே அசலாக நடப்பதால் இந்த படத்திற்கு கார்பன் என பெயர் வைத்திருக்கிறார்களாம்.

தன்யா பாலகிருஷ்ணன் நாயகியாக நடிக்க, விக்ரம் ஜெகதீஷ் (ஒண்டிகட்ட படப்புகழ்), பாவ்லின் ஜெஷிகா (வாய்தா படப்புகழ்) மாரிமுத்து, மூணார் ரமேஷ், நிதீஷ் அஜய், வினோத் சாகர், மூர்த்தி (பிச்சைக்காரன் படப்புகழ்) டபுட் செந்தில், சுபா வெங்கட், பேபி ஜனனி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

மருத

பிக்வே பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜிஆர்எஸ் என்பவர் நடித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘மருத’. இந்த படத்தில் நடிகை ராதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சரவணன், விஜி, வேலா ராமமூர்த்தி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடல் ஒன்றை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன சொல்ல போகிறாய்..

ஹரிஹரன் இயக்கத்தில் ட்ரைடன்ஸ் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் என்ன சொல்ல போகிறாய். இதில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின்குமார் நாயகனாக நடித்துள்ளார்.

இவருடன் அவந்திகா, தேஜு அஸ்வினி, ‘குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இன்றைய (ஜனவரி 9ஆம் தேதி) நிலவரப்படி ஐஸ்வர்யா முருகன் ரிலீஸ் ஜனவரி 26ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விநியோகஸ்தர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க தள்ளி வைக்கிறோம் என படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 26ஆம் தேதி.. ஐஸ்வர்யா முருகன் ரிலீஸ்

ஜி.ஆர்.வெங்கடேஷ், கே.வினோத் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஐஸ்வர்யா முருகன்’. இப்படத்தை கருப்பன் பட புகழ் ஆர்.பன்னீர் செல்வம் இயக்கியுள்ளார்.

ஒரு காதல் ஜோடியின் குடும்பத்தை ஒரு காதல் எப்படியெல்லாம் பிரிக்கும் என்பதை இந்த படம் சொல்கிறதாம்.
ஹீரோவாக அருண் பன்னீர்செல்வம் கேரளாவைச் சேர்ந்த வித்யாபிள்ளை ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர்களுடன் தெய்வேந்திரன், ஹர்ஷ் லல்வானி, சாய்சங்கீத், குண்டுகார்த்திக், தீனா, ராஜா, சங்கீதா, நாகேந்திரன்னு புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.

அர்ஜுன் ஜெனா ஒளிப்பதிவையும், கணேஷ் ராகவேந்திரா இசை பணியையும், ஜான் ஆபிரகாம் எடிட்டிங் பணியையும் செய்கிறார்கள்.

வீரமே வாகை சூடும்
து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள படம் வீரமே வாகை சூடும். இதில் விஷால் ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு ஜனவரி 14ல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் பதிப்பு குறித்து தகவல் இல்லை.

6 tamil movie release on Pongal 2022

19வது சென்னை இண்டர்நேஷ்னல் திரைப்படவிழாவில் 3 தமிழ் படங்களுக்கு விருது

19வது சென்னை இண்டர்நேஷ்னல் திரைப்படவிழாவில் 3 தமிழ் படங்களுக்கு விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

19 வது சென்னை இண்டர்நேஷ்னல் திரைப்படவிழாவின் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட படங்களில் மூன்று படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

முதல் பரிசு வசந்த் சாய் இயக்கத்தில் ” சிவரஞ்சனியும் சில பெண்களும்” படத்திற்கு வழங்கப்பட்டது.

இரண்டாம் பரிசு இரண்டு படங்களுக்கு வழங்கப்பட்டது. பா.இரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் “சேத்துமான் ” படத்திற்கும், கணேஷ் விநாயக் இயக்கத்தில் “தேன்” படத்திற்கும் இரண்டாம் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் பேசிய இயக்குனர் வசந்தபாலன் “சேத்துமான்” திரைப்படத்தை தயாரித்த பா.இரஞ்சித் க்கு வாழ்த்துக்கள். மராட்டிய படமான ‘பான்றி’ படம் கொடுத்த தாக்கத்தை சேத்துமான் படமும் கொடுத்தது.

எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதை திரைப்படமாகியிருப்பது பெரு மகிழ்ச்சி. எழுத்தாளர்களின் சினிமா வருகை ஆரோக்கியமானது. என பேசினார்.

3 Tamil movies won award in 19th Chennai International film festival

More Articles
Follows