தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாஜ மாநில இளைஞரணி துணை தலைவர் சதீஷ்குமார் போன்ஸ்லே தலைமையில், தஞ்சை மேம்பாலம் அருகில் உள்ள அரசு பார்வையற்றோர் உயர்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
பத்மஸ்ரீ விருது பெற்ற கண் மருத்துவர் நடராஜன், மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்தார். இதில் 150 பார்வையற்ற மாணவர்கள் பங்கேற்றனர்.
இதை தொடர்ந்து பத்மஸ்ரீ விருது பெற்ற கண் மருத்துவர் நடராஜன் கூறுகையில், கண் பாதிப்பு பிறவி கோளாறினாலும், மாலை கண் நோயினால் தான் வருகிறது. உலகளவில் 35 மில்லியன் மக்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது.
அவர்கள் எல்லாம் கட்டாயம் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும், பார்வையற்ற மாணவர்களுக்கு டெலி மீடியா மூலம் மருத்துவ சிகிச்சையளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பார்வையற்றவர்களுக்கு நவீன சிகிச்சை மூலம் பார்வை தெரியும் வகையில் அமெரிக்காவில் கண்டுபிடித்துள்ளனர்.
அதற்கான விலை ரூ.2 கோடியாகும். விலை அதிகமாக இருப்பதால் மத்திய அரசு தலையிட்டு அந்த மருந்தை குறைந்த விலைக்கு வாங்கி கொடுத்தால் பெரும்பாலோருக்கு பார்வை கிடைத்துவிடும் என்றார்.
Tele Media treatment for Blind peoples Eye camp held at Tanjore