தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
2010 ஆம் ஆண்டில் விமல், ஓவியாவின் யதார்த்த நடிப்பில் உருவாகி வெளிவந்த படம் தான் ‘களவாணி’.
இப்படத்தினை சற்குணம் இயக்கியிருந்தார். மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
மீண்டும் அதே எதிர்பார்ப்பில் விமல்,ஓவியா நடிப்பில் உருவாகியுள்ளது ‘களவாணி 2’.இப்படத்தையும் சற்குணமே இயக்கியிருக்கிறார்.
நேற்று வெள்ளி அன்று வெளியான இப்படம், நல்லதொரு வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது…
இப்படத்தில், ஓவியாவின் தந்தையாக நடித்திருப்பவர் ராஜ்மோகன்குமார்.
செல்லத்துரை என்ற கதாபாத்திரத்தில், பஞ்சாயத்து தலைவராக நடித்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்.
கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்து, அனைவரின் பாராட்டினையும் பெற்றிருக்கிறார்.
ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பு அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு நல்லதொரு கதாபாத்திர நடிகர் கிடைத்துவிட்டார்.
Tamilnadu peoples praises Kalavani2 Villain actor RajMohankumar