தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பல உயிர்களை கொன்று குவித்து வருகின்றது.
இதனைக் கட்டுப்படுத்த உலகில் உள்ள பல நாடுகள் முயற்சித்து வந்தாலும் இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அறிவித்த தேசிய ஊரடங்கு நாளை ஏப்ரல் 14 உடன் முடிவுக்கு வர உள்ளது.
இதனையடுத்து இந்த ஊரடங்கு நீடிக்கப்படுமா? என்ற அறிவிப்பை நாளை ஏப்ரல் 14 காலை 10 மணிக்கு அறிவிக்கவுள்ளார் பிரதமர் மோடி.
இதற்கு முன்பே தெலுங்கான, ஒடிசா,பஞ்சாப், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 7 மாநிலங்கள் ஊரடங்கை வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளன.
இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி இருவரும் இந்த ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
Tamilnadu and Puducherry extended Corona lock down up to April 30