தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நீட் தேர்வு அச்சத்தால் அந்த தேர்வை எழுதாமல் 3 தமிழக மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டனர்.
இதனால் வேதனையுடன் நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் கட்சிகளை விமர்சித்தும் நீதிமன்றத்தை விமர்சித்தும் நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டார்.
இதனால் சில வழக்கறிஞர்களும் ஓரிரு அரசியல் கட்சிகளும் சூர்யாவை விமர்சித்தனர்.
இதனையடுத்து சூர்யாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் அடித்து வருகின்றனர். அவரை அரசியலுக்கும் அழைக்கின்றனர்.
தற்போது ஒரு புதிய போஸ்டரை அடித்துள்ளனர். அதில்…
வாடிவாசல் நாயகனே அரசியல் களத்திற்கு வாருங்கள்…
அநீதிக்கு எதிராக குரல் இனி அரசியலில் ஒலிக்கட்டும்…
அறம் சார்ந்த அரசியலை முன்னெடுப்போம் வாருங்கள்…
என மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மேலும் சூர்யா கட்சிக்கு ’இளம் காளைகள் கட்சி’ என்ற பெயரையும் அவர்களே முடிவு செயது அறிவித்துள்ளனர்.
Suriya fans wall poster with Political Party name