பாண்டிராஜ் இயக்கத்தில் முதன்முறையாக இணையும் சூர்யா – சத்யராஜ்

பாண்டிராஜ் இயக்கத்தில் முதன்முறையாக இணையும் சூர்யா – சத்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சூரரைப் போற்று’ படத்துக்குப் பிறகு, சூர்யா நடிக்கவுள்ள படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளார்.

இப்பட நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.

இசையமைப்பாளராக இமான் பணிபுரியவுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் இதில் சூர்யாவுடன் சத்யராஜ் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது படக்குழு.

சூர்யா – சத்யராஜ் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது குறிப்பிடத்தக்கது.

Suriya and Sathyaraj team up in Pandiraj direction

ஐசரி கணேஷ் தயாரிப்பில் 4வது முறையாக இணையும் சிம்பு & கௌதம் மேனன்

ஐசரி கணேஷ் தயாரிப்பில் 4வது முறையாக இணையும் சிம்பு & கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu gautham menon (2)மாநாடு & பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சிலம்பரசன்.

இதில் கௌதம் வாசுதேவ் மேனன், பத்து தல படத்தில் சிம்புக்கு வில்லனாக நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

‘பத்து தல’ படப்பிடிப்பு மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த கூட்டணி மீண்டும் இணைகிறது.

ஆம்.. மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளன.

இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்ஸ்டர்நேஷனல் தலைவர் ஐசரி கணேசன் தயாரிக்கிறார்.

சிம்பு – கவுதம் மேனன் கூட்டணியில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

‘விண்ணைத் தாண்டி வருவாயா பட இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்வி எழுந்த நிலையில் அப்பட தொடர்ச்சியாக ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற 12 நிமிடக் குறும்படத்தை இயக்கினார் கௌதம் மேனன்.

இதில் சிம்பு & த்ரிஷா நடித்திருந்தனர்.

Simbu and Gautham Menon joins 4th time

அதர்வா தம்பியை ஹீரோவாக்க கதை கேட்டு வரும் ‘மாஸ்டர்’ படத் தயாரிப்பாளர்

அதர்வா தம்பியை ஹீரோவாக்க கதை கேட்டு வரும் ‘மாஸ்டர்’ படத் தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

atharva brotherகடந்த சில மாதங்களுக்கு முன் மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மகளுக்கும் நடிகர் அதர்வாவின் தம்பியும் முரளியும் மகனுமான ஆகாஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

இந்நிலையில் தன்னுடைய மருமகனும் நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் என்பவரை விரைவில் ஹீரோவாக அறிமுகப்படுத்த உள்ளாராம் சேவியர்.

இதற்காக விஜய்சேதுபதியின் ஆஸ்தான இயக்குனர் சீனுராமசாமியிடம் கதை கேட்டுக் கொண்டிருக்கிறாராம் சேவியர் பிரிட்டோ.

Atharvaa’s brother Aakash turns hero

கல்யாணமாச்சா? நெற்றி வகிடில் ஏன் குங்குமப் பொட்டு..? ரசிகரை சந்தேகத்தை தீர்த்த ஷனம் ஷெட்டி

கல்யாணமாச்சா? நெற்றி வகிடில் ஏன் குங்குமப் பொட்டு..? ரசிகரை சந்தேகத்தை தீர்த்த ஷனம் ஷெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sanam Shettyநடிகை சனம் ஷெட்டியும் பிக்பாஸ் தர்ஷனும் காதலித்தனர்.

பின்னர் தர்ஷன் தன்னை காதலித்து ஏமாற்றியதாகவும், திருமணம் செய்ய மறுப்பதாகவும் சனம் புகார் கொடுக்க அது அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இருவரும் பின்னர் பிரிந்தனர்.

இந்த நிலையில் பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஷனம் தன் நெற்றி வகிடில் குங்குமப் பொட்டு வைத்து இருப்பார்.

இவர் பிக்பாஸில் இருந்த போதும் சேலை கட்டும் தருணங்களில் நெற்றி வகிடில் குங்குமப் பொட்டு வைத்து இருப்பார்.

இதனால் சனம் ஷெட்டிக்கு திருமணம் ஆகிவிட்டதா? ஏன் நெற்றி வகிடில் குங்குமப் பொட்டை வைத்திருக்கிறார் என ரசிகர்கள் குழம்பினர்.

ஒரு ரசிகர் இதை ஷனம் ஷெட்டியிடம் கேட்டார்.

அதற்கு அவர் பதிலளிக்கையில்…

ஆஹா.. இதே கேள்வியைத்தான் நிறைய பேர் கேட்கிறாங்க.. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை..,

உங்கள் ஆசியுடன் விரைவிலேயே திருமணம் ஆகும் என நினைக்கிறேன்.

எங்க குடும்பத்தில் உச்சந்தலை வகிடில் குங்குமப் பொட்டு வைப்பது இயல்பானது.

திருமணம் ஆனவர், ஆகாதவர் என அனைவரும் வைப்போம் என பதிலளித்துள்ளார்.

மற்றொரு ரசிகரோ… அவங்க (ஷனம்) கன்னடர் நண்பரே, கர்நாடகாவில் திருமணம் ஆகாத பெண்களும் நெற்றி வகிடில் குங்குமம் வைக்கும் வழக்கும் உள்ளது என தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.

Bigg Boss sanam shetty married or not ?

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ நடிகையுடன் ‘பிக்பாஸ்’ பாலாஜி காதல்.?

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ நடிகையுடன் ‘பிக்பாஸ்’ பாலாஜி காதல்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

balaji murugadoss yashikaஇருட்டு அறையில் முரட்டு குத்து, ஷாம்பி உள்ளிட்ட படங்களில் கவர்ச்சியாக நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

இவர் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார்.

இவர் நடிகர் மஹத்தை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் அதனை மறுத்தார்.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கு பெற்று ரன்னரான பாலாஜியுடன் யாஷிகா இணைந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலானது.

இதனால் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவியது.

இதற்கு விளக்கம் அளித்த யாஷிகா, “இருவரும் நண்பர்களாக பழகி வருகிறோம். அவர் அடைந்துள்ள வளர்ச்சியில் எனக்கு சந்தோஷம்’’ என தெரிவித்துள்ளார்.

IAMK heroine is in love with Bigg Boss Balaji Murugadoss

முதல்வர் திறந்து வைத்த ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் அஜித் பங்களிப்பு

முதல்வர் திறந்து வைத்த ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் அஜித் பங்களிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jayalalithaமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை ‘வேதா இல்லம்’ என நினைவு இல்லமாக தமிழக அரசு மாற்றியுள்ளது.

ஆனால் பொது மக்களுக்கு அனுமதி கிடையாது எனவும், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் மட்டுமே வேதா இல்லத்திற்குள் செல்ல வேண்டும் எனவும் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ‘வேதா இல்லத்தை திறந்து வைத்தார்

இதனையடுத்து சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழக உயர்கல்வி மன்ற வளாகத்தில் வெண்கலத்தால் வடிவமைக்கப்பட்ட 9 அடி முழு உருவ ஜெயலலிதா சிலையை முதல்வர் திறந்துவைத்தார்.

மேலும் உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு ‘ஜெயலலிதா வளாகம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் நடிகர் அஜித்தின் உள்ளது தெரிய வந்துள்ளது.

ஆம்… ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் அஜித் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட ட்ரோன் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சிலை மீது போர்த்தப்பட்டிருந்த பச்சை நிற துணியை ட்ரோன் மூலமாக அகற்றி முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இத்துடன் (அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன்) அஜித் வடிவமைத்த ட்ரோன் மூலமாக ஜெயலலிதா சிலை மீது மலரும் தூவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith’s contribution in Jaya Lalitha’s statue unveiling

More Articles
Follows