இனிய குரலால் மக்களை மகிழ்வித்த SPB நலம் பெற வேண்டி ரஜினி பிரார்த்தனை

இனிய குரலால் மக்களை மகிழ்வித்த SPB நலம் பெற வேண்டி ரஜினி பிரார்த்தனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Superstar Rajinis prayer for SP Balasubramanyamபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து அவரின் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவர் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று தங்களது விருப்பத்தை தெரிவித்தனர்.

இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பி.க்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் பல மொழிகளில் தன்னுடைய இனிமையான குரலால் பாடி கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்த எஸ்.பி.பி.யின் உடல்நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அபாயகட்டத்தை தாண்டிவிட்டார் என்பதைக் கேள்விப்பட்டதிலிருந்து எனக்கு மகிழ்ச்சி.

தீவிர சிகிச்சையில் உள்ள எஸ்.பி.பி. சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்” என ரஜினி அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

Superstar Rajinis prayer for SP Balasubramanyam

https://twitter.com/rajinikanth/status/1295246003038064641

BREAKING சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்க உத்தரவு.; ஒரு கடைக்கு 500 டோக்கன்!

BREAKING சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்க உத்தரவு.; ஒரு கடைக்கு 500 டோக்கன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகமெங்கும் மார்ச் மாதத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

கிட்டத்தட்ட 5 மாதங்களாக நாடெங்கிலும் பொது முடக்கம் அமலில் உள்ளது.

அதன்பின்னர் அரசுக்கு போதிய வருமானம் இல்லை என்று தமிழக அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை திறந்தது.

ஆனால் கொரோனா தொற்று உச்சம் காரணமாக சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் கடைகளை கடந்த மே 7ஆம் தேதி முதல் திறந்திட தமிழக அரசு உத்தரவிட்டது.

தற்போது சென்னையில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லறை விற்பனை கடைகள் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

மால்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக் கடைகள் இயங்காது.

மதுபான கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.

நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.

மதுபிரியர்கள் முகக்கவசம் அணியவேண்டும் மற்றும் தனி மனித இடைவெளி கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tasmac shops to reopen in Chennai from 18th August 2020

எனது குரலாக நீங்களும் உமது முகமாக நானும்… மீண்டும் வாருங்கள் SPB… – கமல்

எனது குரலாக நீங்களும் உமது முகமாக நானும்… மீண்டும் வாருங்கள் SPB… – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan spbகொரோனா தொற்றால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.

தற்போது அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் SPBயின் உடல்நிலை குறித்து நடிகர் கமல்ஹாசன் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம்.
உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா..

அருண் விஜய்யின் குணத்தை தீர்மானிக்கும் சூழ்நிலை.. ; ‘சினம்’ குறித்து GNR குமாரவேலன்.

அருண் விஜய்யின் குணத்தை தீர்மானிக்கும் சூழ்நிலை.. ; ‘சினம்’ குறித்து GNR குமாரவேலன்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arun vijay gnr kumara velanஅபாயம் எத்தனை பெரிதென்றாலும் எங்களை தடுக்க முடியாதென வீறு நடை போடுகிறது “சினம்” படக்குழு. கொரோனா உலகையே முடக்கி போட்டிருக்கும், இந்த இக்கட்டான காலகட்டத்திலும், உற்சாகம் பொங்க தீவிரமாக போஸ்ட புரடக்‌ஷன் பணிகளை செய்து வருகிறது படக்குழு. நாங்கள் திட்டமிட்டபடியே அனைத்தும் அற்புதமாக நடந்தேறி வருகிறது என பெரும் நம்பிக்கையுடன், மகிழ்ச்சியுடனும் தெரிவிக்கிறார் இயக்குநர் GNR குமாரவேலன்.

படத்தின் தற்போதைய நிலை குறித்து இயக்குநர் GNR குமாரவேலன் கூறியதாவது….

நடிகர் அருண் விஜய் தனது டப்பிங் பணிகளை முழுதாக முடித்து விட்டார். தற்போது மற்ற நடிகர்களின் டப்பிங் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்தவுடனே, பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளை துவக்கவுள்ளோம். அரசின் வழிகாட்டலின் படி நோயுக்கெதிரான அனைத்து முன்னெச்சரிக்கைகளும், தனி மனித இடைவெளியையும் கடைபிடித்தே, எங்கள் பணிகளை செய்து வருகிறோம்

சமீபத்தில் வெளியான படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரில் அருண் விஜய்யின் ‘ஆங்கார தோற்றம்’ ரசிகர்களிடம் பேராதரவு பெற்றது.

இது பற்றி இயக்குநர் கூறுகையில்…

போலிஸ் இன்ஸ்பெக்டர் பாரி வெங்கட் கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் மிகவும் எமோசலானது ஆனால் அதே நேரத்தில் கடும் கோபம் கொள்ளும் கதாப்பாத்திரம். அதனை அவர் முடிவு செய்வதில்லை. சூழ்நிலைகளே அவரின் குணத்தை தீர்மானிக்கிறது.

மேலும் இது ஒரு திரில்லர் படமென்றாலும் குடும்பங்களை கவரும் பல உணச்சிபூர்வமான தருணங்களும், நேர்மறை விசயங்களும் நிறைய இருக்கிறது என்றார்.

இப்படத்தில் பாலக் லால்வானி நாயகியாக நடிக்கிறார். காளிவெங்கட் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

Movie Slides Pvt Ltd சார்பில் R.விஜய குமார் இப்படத்தை தயாரிக்கிறார். தேசிய விருது பெற்ற இயக்குநர் GNR குமரவேலன் “சினம்” படத்தை எழுதி இயக்குகிறார்.

“சகா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா”படப்புகழ் ஷபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகம்மது படத்தொகுப்பு செய்கிறார்.

மைக்கேல் கலை இயக்கம் செய்ய சில்வா சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். மதன் கார்கி, பிரியன் ஏக்நாத் பாடல்கள் எழுத பவன் வடிவமைப்பை மேற்கொள்கிறார்.

‘ட்ரிப்’ படத்தின் அசத்தும் முதல் சிங்கிள் ‘What a life – You’

‘ட்ரிப்’ படத்தின் அசத்தும் முதல் சிங்கிள் ‘What a life – You’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

what a life song tripதமிழில் ஒர் புதுமையாக
காமெடி, அட்வெஞ்சர் திரில்லர் திரைப்படமாக உருவாகும் “ ட்ரிப் “ திரைப்படம் படப்பிடிப்பு ஆரம்பமான நாள் முதலே அனைவரிடத்திலும் பெரும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.

சமீபத்தில் வெளியடப்பட்ட டீசரும், டிரெய்லரும் ரசிகர்களிடம் அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாமல், திரையரங்கில் அட்டகாசமான கொண்டாட்டம் உண்டென, உத்தரவாதம் தந்துள்ளது.

இந்த நிலையில் இப்போது வெளியாகியுள்ள முதல் சிங்கிள் பாடலான “what a life – u” பாடல் படத்தின் மீது இன்னும் அதிகமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“சிவப்பு, மஞ்சள், பச்சை” படப்புகழ் இசையமைப்பாளர் சித்து தந்துள்ள பெப்பியான இசை, கதாப்பாத்திரங்களின் குணாதிசயங்களை, தனது கொண்டாட்ட வரிகளில் புட்டு வைக்கும் மோகன் ராஜனின் வரிகள், கேட்டவுடன் பிடித்துபோகும் பாடகர் கானா பாலாவின் குரல், அட்டகாச கலவையாக உருவாகியுள்ள இந்த “what a life – u” பாடல் ரசிகர்களுக்கு பெரு விருந்தாக அமைந்துள்ளது.

இசை உலகில் ஆதிக்கம் செலுத்தி கொடிகட்டி பறக்கும் DIVO நிறுவனம், தங்களது எந்தவொரு பாடல் ஆல்பமாக இருந்தாலும், அதை ரசிகர்கள் அனைவரிடமும் அழகான முறையில் கொண்டு சேர்த்து, வெற்றி பெறச்செய்து விடுவார்கள்.

இப்பாடலும் ரசிகர்களை ஈர்த்து, அவர்களின் வெற்றி மகுடத்தில் மற்றுமொரு மயிலிறகாக இணைந்திருக்கிறது.

காமெடி, அட்வெஞ்சர், திரில்லர் பாணியில் உருவாகும் “ட்ரிப்” படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்குகிறார்.

Sai Film Studios சார்பில் A.விஸ்வநாதன் மற்றும் E.பிரவீன்குமார் இப்படத்தை தயாரிக்கிறார்கள்.

சுனைனா, யோகிபாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பிரவீன் குமார், VJ சித்து, VJ ராகேஷ், கல்லூரி வினோத், ராஜேஷ் சிவா அதுல்யா சந்திரா, லக்‌ஷ்மி ப்ரியா, சத்யா, மேக் மணி, சதீஷ், அருண் ஆகியோர் நடிக்கிறார்கள்.

பரபரப்பு தரும் டீஸர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க, “ட்ரிப்” படத்தின் டிஜிட்டல், சேட்டிலைட் உரிமையை சன் குழுமம் வாங்கியிருப்பது படக்குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

எனக்கு பிடித்த SPBயின் பாடலுக்கு வாயசைப்பேன் என நினைக்கவில்லை.. – மோகன் உருக்கம்

எனக்கு பிடித்த SPBயின் பாடலுக்கு வாயசைப்பேன் என நினைக்கவில்லை.. – மோகன் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா தொற்றால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.

இது குறித்து நடிகர் மோகன் கூறியுள்ளதாவது…

திரையுலகிற்கு வருவதற்கு முன்பிருந்தே நான் எஸ்.பி.பி. அவர்களின் ரசிகன். பெங்களூருவில் இருந்த காலகட்டங்களில், அவரின் குரலும் பாடலும் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய பாடல்களைக் கேட்டுத்தான் வளர்ந்தேன்.

கல்லூரி வாழ்க்கையில், அவருடைய எத்தனையோ பாடல்கள் என் கல்லூரி வாழ்க்கையின் பலவற்றில் இரண்டறக் கலந்திருந்தது.

அப்போதெல்லாம், நான் சினிமாவுக்குள் வரவேண்டும் என்றோ நடிகனாவேன் என்றோ நினைத்ததில்லை. ஆனால் எப்போதும் எஸ்.பி.பி.யின் பாடல்கள் எனக்கு துணையாகவும் பொழுதுபோக்காகவும் உத்வேகம் கொடுப்பதாகவும் இருந்தன.

தெலுங்கில் எனது முதல் படமான ‘தூர்ப்பு வெல்லே ரயிலு’ (கிழக்கே போகும் ரயில் படத்தின் ரீமேக்) படத்துக்கு எஸ்.பி.பி சார்
தான் இசையமைப்பாளர்.

முள்ளப்புடி வெங்கடரமணா திரைக்கதையில் பாப்பு இயக்கத்தில் வெளியான அந்தப் படத்துக்கு இசையமைத்து, அனைத்து பாடல்களையும் பாடியிருந்தது எஸ்.பி.பி சார் தான்.

தமிழில், மகேந்திரன் இயக்கத்தில், ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் நடித்தேன். அந்தப் படத்தில் ஜாக்கிங் செல்லும் போது வருகிற ‘பருவமே புதிய பாடல் பாடு’ என்ற பாடல், இன்று வரைக்கும் எல்லோருக்கும் பிடித்த பாடல். இப்படி நான் திரைத்துறைக்கு வருவேன் என்றோ எனக்குப் பிடித்த எஸ்.பி.பி.யின் பாடலுக்கு வாயசைப்பேன் என்றோ நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

என்னுடைய ஆரம்பக் கால படங்களில் ‘ஜூலி ஐ லவ்யூ’ பாடலும் ‘இளையநிலா பொழிகிறதே’ உள்ளிட்ட ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தின் எல்லாப் பாடல்களும் என்று என் திரைவாழ்விலும் எனக்காக, என் படங்களுக்காக தொடர்ந்து ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார். தொழில்முறையிலும் இப்படியான இணைப்பு வந்திருந்தாலும் நான் எப்போதுமே எஸ்.பி.பி.யின் தீவிர ரசிகன்.

தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். என் மனமும் சிந்தனையும் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறது. எஸ்.பி.பி.யின் இனிமையான குரலில் அமைந்த பாடல்கள் ஒவ்வொன்றும் சாகாவரம் பெற்றவை.

பாடல்கள் மட்டுமல்ல. எஸ்.பி.பி. அவர்களே அத்தகையை பண்பான மனிதர்தான். எஸ்.பி.பி. அவர்கள் பூரண குணமடைந்து, இல்லம் திரும்பவேண்டும் என்று அவரை இதயத்தில் வைத்திருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறார்கள்.

அன்புள்ளம் கொண்ட எஸ்.பி.பி. அவர்கள் பூரண நலம் பெற்று, பழையபடி வலம் வரவேண்டும் என்று நானும் ஒரு ரசிகனாக பிரார்த்தனை செய்கிறேன்

நன்றி

வணக்கம்

மோகன்
திரைப்பட நடிகர்

Actor Mohans emotional statement about singer SPB

More Articles
Follows