தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து அவரின் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவர் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று தங்களது விருப்பத்தை தெரிவித்தனர்.
இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பி.க்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, “50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் பல மொழிகளில் தன்னுடைய இனிமையான குரலால் பாடி கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்த எஸ்.பி.பி.யின் உடல்நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அபாயகட்டத்தை தாண்டிவிட்டார் என்பதைக் கேள்விப்பட்டதிலிருந்து எனக்கு மகிழ்ச்சி.
தீவிர சிகிச்சையில் உள்ள எஸ்.பி.பி. சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்” என ரஜினி அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
Superstar Rajinis prayer for SP Balasubramanyam
https://twitter.com/rajinikanth/status/1295246003038064641
Get well soon dear Balu sir pic.twitter.com/6Gxmo0tVgS
— Rajinikanth (@rajinikanth) August 17, 2020