வா சாமீ… பிரசிடெண்ட் பின்றாருய்யா.. அனல் பறக்கும் ரஜினியின் ‘அண்ணாத்த’ ட்ரைலர்

வா சாமீ… பிரசிடெண்ட் பின்றாருய்யா.. அனல் பறக்கும் ரஜினியின் ‘அண்ணாத்த’ ட்ரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை சிவா இயக்க இமான் இசையமைத்துள்ளார்.

இதில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, ரெடின் கிங்ஸ்லீ, சதீஷ், பாண்டியராஜன், லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள அண்ணாத்த அண்ணாத்த பாடல் முதலில் வெளியானது. இப்பாடலை எஸ்பி பாலசுப்ரமணியம் பாடியிருந்தார்.

அதன்பின்னர் சாரல் காத்து.. மருதாணி… வா சாமீ ஆகிய பாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியானது.

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி ‘அண்ணாத்த’ படம் உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் இன்று அக்டோபர் 27ஆம் தேதி மாலை 6 மணிக்கு அண்ணாத்த ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இது பக்கா ரஜினி படம் என்று சொல்லலாம். ரஜினிக்கே உரித்தான காமெடி கலகலப்பு, செம ஸ்டைல், அனல் பறக்கும் ஆக்சன் என பட்டைய கிளப்பியிருக்கிறார்.

ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சிஸ்டர் சென்டிமெண்ட் காட்சிகளும் செமயாய் ஒர்க் அவுட்ஆகியுள்ளது, தங்கச்சிக்கு ஒன்னுன்னா துடிக்கும் பாசமிகு அண்ணனாக அண்ணாத்த வருகிறார்.

சூரக்கோட்டை கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக (பிரசிடெண்ட்) ரஜினி நடித்துள்ளார். இவரது கேரக்டர் பெயர் காளையன்.

ரஜினியின் முறைப் பெண்களாக குஷ்பூ மீனா நடித்துள்ளனர். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ரஜினியுடன் கூடவே சுத்தும் கேரக்டர்களில் சூரி சதீஷ் உள்ளனர்.

சூரக்கோட்டை வில்லனாக பிரகாஷ் ராஜ் நடிக்க கொல்கத்தா வில்லனாக அபிமன்யூ சிங் & ஜெகபதிபாபு நடித்துள்ளனர்.

ட்ரைலர் முழுக்க நகைச்சுவையும் ஆக்சனும் தெரிகிறது. எனவே இதில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினியின் கிராமத்து வாசனையை உணரலாம்.

1995ல் பாட்ஷா படத்தை பாத்துவிட்டு எப்படி ஆட்டோ டிரைவர்கள் செம கெத்தாக சுற்றினார்களோ.. அதே போல் தற்போது ‘அண்ணாத்த’ படத்த பாத்துட்டு காலர தூக்கி கெத்து கவுன்சிலர்கள் சுற்றுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

Superstar Rajinis Annaatthe Trailer makes storm on internet

#AnnaattheDeepavali

சூர்யா நடிச்ச ‘ஜெய் பீம்’ படம் பார்க்க இந்த காரணங்கள் போதுமா? இன்னும் வேணுமா?

சூர்யா நடிச்ச ‘ஜெய் பீம்’ படம் பார்க்க இந்த காரணங்கள் போதுமா? இன்னும் வேணுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த தீபாவளியில், அமேசான் ப்ரைம் வீடியோ சூர்யா நடிக்கும் ’ஜெய் பீம்’ திரைப்படத்தை கொண்டு வருகிறது.

அண்மையில் வெளியான ஜெய்பீம் படத்தின் டீஸரே இது ஒரு நீதிமன்றம் சார்ந்த கதை என்பதையும், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலான கதை என்பதையும் சொல்லியிருக்கிறது.

இப்படத்தில் சூர்யா வழக்கறிஞர் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குரலற்றவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க உண்மையைக் வெளிக்கொணர வழக்கறிஞர் சந்துரு அயராது பாரம் சுமக்கிறார்.
இத்தகைய சக்தி வாய்ந்த கதையம்சமே போதும், ஜெய் பீம் படத்தைத் தவறவிடக் கூடாது என்பதை உணர்த்த…. ஆனால் இத்துடன் முடிந்துவிடவில்லை. இந்தப் படத்தை தவறவிடக் கூடாது என்பதற்கு இன்னும் 5 காரணங்கள் இருக்கின்றன.

புதிய அவதாரத்தில் சூர்யா:

ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கட்டிப்போட்ட சூர்யா அதன் பின்னர் தன்னை ஒரு பாக்ஸராக, தொழில்முனைவராக என பல கதாபாத்திரங்களில் நிரூபித்தார். அவர் ஏற்ற கதாபாத்திரங்கள் அனைத்திலும் வெற்றி கண்டிருக்கிறார்.
ஒவ்வொரு முறை திரையில் வரும்போதும் அவர் நம்மை ஆச்சர்யபட வைக்கிறார். ஜெய் பீம் ட்ரெயலரில் நாம் சூர்யாவை, ஒரு பன்முகத்தன்மை கொண்ட நடிகரை அழுத்தமான வழக்கறிஞராகப் பார்க்கவுள்ளோம். ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக எந்த அளவுக்கும் அவர் செல்வார் என்பதை அறிய முடியும்.

ஆழமான நடிப்பு, அனல் பறக்கும் வசனம் என அசத்தியிருக்கிறார். நிச்சயம் இந்த புதிய கதாபாத்திரத்திலும் அவர் ரசிகர்களின் நெஞ்சை அள்ளுவார்.

சிறப்பான நடிகர் பட்டாளம்:

படத்தில் வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா உலா வரும் அதே வேளையில், பிரகாஷ் ராஜ், லிஜோ மோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், ராவ் ரமேஷ் எனப் பலரும் நடித்திருப்பார்கள்.
ஒரு நல்ல கதை பாதி வெற்றியைத் தரும். ஆனால் அதை கொண்டு சேர்க்க நல்ல நடிகர்கள் வேண்டும். அப்போது தான் உயிர் கிடைக்கும். ட்ரெய்லரைப் பார்க்கும் போதே நடிகர்கள் தங்கள் உழைப்பை முழுவீச்சில் பாய்ச்சியிருப்பதைக் காண முடியும்.

கேமராவுக்குப் பின்னால்.

படத்தின் முதல் காட்சி தொட்டு கடைசிக் காட்சி வரை கேமராவின் மாய வித்தை நம்மைக் கட்டிப்போடும். இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார் தா.செ.ஞானவேல். இவர் பத்திரிகையாளராக இருந்து திரைத்துறைக்கு வந்தவர். அவர் சூர்யாவின் கதாபாத்திரத்துக்காக நிறைய மெனக்கிடுதல் செய்துள்ளார். அவருடன் கேமராவைக் கையாண்டிருக்கும் எஸ்.ஆர்.கதிர் ஒரு தேர்ந்த கலைஞர்.

இசையமைப்பாளர் ஷான் ரால்டன், எடிட்டர் ஃபிலோமின் ராஜா என அனைவருமே உண்மையின் மாண்பை சொல்லும் இந்தப் படத்திற்கு மெருகேற்றியுள்ளனர்.

உணர்வுகளைத் தூண்டும் இசை:

ஜெய் பீம் படத்தின் முதல் பாடலான பவர் பாடலை அறிவு பாடியிருக்கிறார். பாடலுக்கு சீன் ரால்டன் இசையமைத்துள்ளார். அதிரடி பாடலான இது அனைவரையும் தாளம் போட்டு ஆட வைக்கும்.
தல கோதும் என்ற இரண்டாவது பாடல், பிரதீப் குமாரால் பாடப்பட்டுள்ளது. ராஜூமுருகன் எழுதியுள்ளார். மென்மையான மெலடிப் பாடலாக இது இதயத்தை வருடும். நீதிக்கான பயணத்தை நம் கண் முன்னே நிறுத்தும். இந்த இரண்டு பாடல்களும் மிகவும் அழுத்தமானவையே.

பரபரப்பான நீதிமன்ற காட்சிகள்:

நீதிமன்றக் காட்சிகளைக் காண்பதில் எப்போதுமே திரை ரசிகர்களுக்கு தனி ஆர்வம் இருக்கும். அதுவும் அழுத்தமான நீதிமன்றக் காட்சிகள் என்றால் கேட்கவா வேண்டும். ஜெய் பீமில் நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் இடையேயான வாதவிவாதங்கள் நீதிமன்ற அறைக் காட்சிகளாக ஆழமாக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ட்ரெய்லரில் நாம் பார்த்தபோது ஏற்பட்ட தாக்கம் படம் முழுவதுமே நமக்கும் ஏற்படும். ரசிகர்களை நிச்சயமாக சீட்டின் நுணியில் அமரவைத்து பார்க்க வைக்கும்.

திரைப்படத்தை தா.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். ஜோதிகா, சூர்யா இணைந்து அவர்களின் 2டி என்டர்டெய்ன்மென்ட் பேனரில் தயாரித்துள்ளனர். ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகிறது.

5 reasons we cant wait for Suriyas Jai Bhim coming up this Diwali

தல கணம் இல்லாத தளபதி.: வெற்றி வேட்பாளர்களை வாழ்த்தி அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்

தல கணம் இல்லாத தளபதி.: வெற்றி வேட்பாளர்களை வாழ்த்தி அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபலங்கள் பலருக்கும் அரசியலுக்கு வரும் ஆசை வருவதுண்டு. ஒரு சிலருக்கு அது நிறைவேறாமல் போகலாம்.

இதில் முதலில் சொன்ன வரிகளில் வருபவர் நடிகர் விஜய்.

விஜய்யை அவரது ரசிகர்கள் அடிக்கடி அரசியலுக்கு அழைத்து சுவரொட்டிகள் ஒட்டி வருவதுண்டு. அதை விஜய்யும் கவனித்துதான் வருகிறார்.

இன்றைய கால கட்டத்தில் அரசியலில் நுழைந்தால் அது எந்தளவு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் விஜய் ஆலோசித்துதான் வருகிறார்.

இந்த நிலையில் அவரது எண்ணத்திற்கேற்ப நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் முடிவுகள் அமைந்துள்ளன எனலாம்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்ட நிர்வாகிகள் பலர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த தேர்தலில் பல்வேறு பதவிகளுக்கு 161 பேர் போட்டியிட்டனர், இதில் 129 பேர் வெற்றி பெற்றுள்ளதால் விஜய் தரப்பு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.

எனவே பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் வெற்றி பெற்ற நிர்வாகிகளை சந்தித்து பேசி இருக்கிறார் விஜய்.

வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்ட விஜய் அதில் எவருமே கண்டுபிடிக்காத படி ஒரு ஓரத்தில் அமர்ந்துள்ளார்.

இந்த போட்டோவை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பொதுவாக இது போன்ற போட்டோக்களை எடுக்கும்போது ஒரு இயக்கத்தின் தலைவர் எல்லோருக்கும் நடுவில்தான் இருப்பார். ஆனால் விஜய் எங்கே இருக்கிறர்? என தேட வேண்டி உள்ளது. அவர் ஒரு ஓரமாக அமர்ந்து இருப்பதை பார்க்கும் ரசிகர்கள் ‘தல கணம் இல்லாத தளபதி’ என புகழ்ந்து வருகின்றனர்.

Actor Vijay took photo with TN Local body election winners

கபாலி காலர் ட்யூன்.. ரஞ்சித்தாசன் பெயர்..; என்ன சொல்கிறார் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ பட இயக்குனர்.?

கபாலி காலர் ட்யூன்.. ரஞ்சித்தாசன் பெயர்..; என்ன சொல்கிறார் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ பட இயக்குனர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சிறப்பான திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படமும் இதே கதைகருவில் தான் உருவாகியுள்ளது.

Passion Studios சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் தயாரிப்பில் பிரபு ஜெயராம் இயக்கியுள்ள “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படம், அக்டோபர் 29, Sonyliv தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.

படத்தின் முதல் பகுதி முழுக்க முழுக்க பொழுதுபோக்கு தன்மையுடன் கூடிய காதல் மற்றும் காமெடி கலந்ததும், இரண்டாம் பகுதி ஜாதியினால் ஏற்படும் பிரச்சனைகள் திவிரமாக சொல்வதாக படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் சிறப்பு திரையிடல் பத்திரிக்கையாளர்களுக்காக திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றது. இதனை தொடர்ந்து, படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது.

இந்த நிகழ்வில் பேசிய நாயகன் கார்த்திக் கூறியதாவது…

என்னுடைய முதல் படம் பீச்சாங்கை இந்தப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பிற்கும் நீங்கள் பெரிய ஆதரவு தந்துள்ளீர்கள் அதற்காக அனைவருக்கும் நன்றி
இயக்குநர் பிரபு ஜெயராம் கூறியதாவது….

கமர்ஷியலாக கதை சொல்ல நினைக்கும் இயக்குநரான ஒருவன், சீரியஸாக ஒரு கதை சொல்ல முயற்சிப்பதாக தான் இந்த திரைக்கதையை அமைத்தேன்.

இது 90 கிட்ஸ்களுக்கான படமாகத்தான் எடுத்திருக்கிறோம். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்று சொல்லவில்லை, இடஒதுக்கீட்டில் தேவை உள்ளோர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று இதை சொல்லியிருக்கிறோம்.

எல்லா ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை நான் வரவேற்கிறேன் அதைத்தான் இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறேன்.

இந்தப் படத்தில் கதாப்பாத்திரங்களின் பின்னணியை தான் சொல்லியிருக்கிறேன்.

(இந்த படத்தில் ரஞ்சித்தாசன் கேரக்டர் ஏன்..? கோட் சூட் போடுவேன்டா.. நான் முன்னுக்கு வருவேன்டா..? என்ற ரஜினி டயலாக் கபாலி காலர் ட்யூன் ஏன்? என FILMISTREET RAJESH கேள்வி கேட்கையில்…)

ரஞ்சித் தாசன் கதாப்பாத்திரம் என்பது, ஒரு அடிப்படை சமூகத்தில் இருந்து வந்து, கோபத்துடன் அவரது நியாயத்தை சொல்லும் பாத்திரத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது, ரஞ்சித் சார் பெயர் வைக்கலாம் என தோன்றியது.

அதைத்தவிர, மத்தபடி ரஞ்சித் சாருக்கும் இந்தப்படத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. இந்தப் படத்திற்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் தயாரித்துள்ள “என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படத்தை பிரபு ஜெயராம் இயக்குகிறார். RS கார்த்திக். ஐரா, பகவதி பெருமாள், ரோகினி, ஜூனியர் பாலையா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், தான்யா, எல்வின் சுபா, கயல் வின்சண்ட், பர்கத் பிரோஷா, மீரா மிதுன், மெட்ராஸ் மீட்டர் கோபால், விஸ்வந்த், நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர்.

Director Prabhu Jeyaram talks about his movie Yennanga Sir Unga Sattam

படத்தின் தொழில்நுட்ப குழு விபரம்
குணா பாலசுப்ரமணியம்- இசை
அருண் கிருஷ்ணா – ஒளிப்பதிவு
பிரகாஷ் கருணாநிதி- படதொகுப்பு
Teejay – கலை இயக்கம்
கார்த்திக் நேத்தா, ஜெகன் கவிராஜ், ரஞ்சித், M.S. முத்து, திவ்யா லக்‌ஷனா, ஸ்வேதா ராஜு – பாடல் வரிகள்
தேஜா- மேக்கப்
கிருஷ்ணன் சுப்ரமணியம்- ஒலிப்பதிவு
பென்னி தயால், வினீத் ஶ்ரீனிவாசன், குணா பாலசுப்ரமணியம், மால்வி சுந்தரேஷன், பத்மபிரியா ராகவன், அஹானா கிருஷ்ணன்- பாடகர்கள்
அருண் உமா- டப்பிங் இன்ஞ்னியர்
ராம் பிரசாத் – ஸ்டில்ஸ்
ஶ்ரீராம் -DI

டிசம்பரில் டும் டும் டும்.: வாழ்க்கையிலும் இணையும் ரன்பீர் கபூர் – ஆலியா பட் காதல்

டிசம்பரில் டும் டும் டும்.: வாழ்க்கையிலும் இணையும் ரன்பீர் கபூர் – ஆலியா பட் காதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹிந்தி சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்.

இவர்கள் இருவருமே கலையுலக நட்சத்திர வாரிசுகள் தான்.

நடிகர் ரிஷி கபூரின் மகன் நடிகர் ரன்பீர் கபூர்.

இயக்குனர் மகேஷ் பட்டின் மகள் நடிகை ஆலியா பட்.

இருவரும் தற்போது ‘பிரம்மாஸ்த்ரா’ என்ற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

கடந்த சில வருடங்களாகவே இருவரும் நெருக்கமாக காதலித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்களது திருமணம் டிசம்பர் மாதம் நடைபெறலாம் என பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஒப்புக் கொண்டுள்ள படங்களை கூட அதாவது திருமணத்திற்கு பிறகு நடித்துக் கொடுப்பதாக தெரிவித்துவிட்டார்களாம்.

Ranbir Kapoor, Alia Bhat wedding in December?

சச்சின் & தனுஷ் வாழ்க்கையில் நடந்த சம்பவம்.; புதுவித காதலைச் சொல்லும் ‘ஊர்வசி’

சச்சின் & தனுஷ் வாழ்க்கையில் நடந்த சம்பவம்.; புதுவித காதலைச் சொல்லும் ‘ஊர்வசி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்த் திரையுலகில் எத்தனையோ காதல் கதைகள் வந்துள்ளன.

காலம் , கலாச்சார மாற்ற ஏற்ப மனிதரிடையே எழும் காதலும் அதன் போக்கும் மாறியுள்ளது.

காதலனைவிட காதலிக்கு வயது அதிகமாக இருந்தால் ஒரு காலத்தில் வியப்பூட்டியது. இது இப்போது சகஜமாகி வருகிறது.

கிரிக்கெட்டர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் தனுஷ் தொடங்கி கணவனை விட வயதில் மூத்த பெண் மனைவியாகி இணைவது அதிகரித்து வருகிறது.

26 வயது வாலிபனுக்கும் 36 வயது விவாகரத்தான மென்பொருள் துறைப் பெண்ணுக்கும் இடையே நடக்கும் உண்மையான காதலைச் சொல்வது தான் ‘ஊர்வசி’ வெப் சீரிஸ் .

வயது வித்தியாசம் இருப்பதால் வேறுகாரணங்களால் ஏற்பட்ட காதல் அல்ல இது.

நியாயமாகவும் நேர்மையாகவும் ஒருவரை ஒருவர் மதித்து ஒருவருக்கொருவர் நேசம் காட்டும் காதலாக இது சொல்லப்படுகிறது.

சென்னையில் ஒரே அறையில் தங்கி இருக்கும் நான்கு நண்பர்களில் ஒருவர் தான் கதாநாயகன்.

வாடகை டாக்சி ஓட்டும் ஒருவனுக்கும் அடிக்கடி அந்த டாக்சியில் பயணியாக வரும் ஒருத்திக்கும் இடையே பரஸ்பரம் புரிதலும் அன்பும் காதலும் ஏற்படும் சூழல் வருகிறது.

இருவருக்குள்ளும் பூசல்கள் முரண்பாடுகள், ஏன் சண்டைகள் வரை செல்கிறது. பிரிவும் நேர்கிறது. அதன்பிறகு ஒருவரை ஒருவர் எப்படிப் புரிந்து இணைகிறார்கள் என்ப
தைப்பற்றி சொல்லும் கதை இது.

இந்த இணையத் தொடரை இயக்குபவர் எஸ் .கே.எஸ். கார்த்திக் கண்ணன். இவர் ஏற்கெனவே ‘திடல் ‘ படத்தை இயக்கியவர்.

ஏராளமான குறும்படங்கள் இயக்கியிருக்கிறார்.இவரது
‘ நிறம்’ என்ற குறும்படம் கோவா திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருது பெற்றது.

ஊர்வசி இணைய தொடரில் நாயகியாக டைட்டில் ரோல் ஏற்று ரேகா நாயர் நடிக்கிறார். நாயகனாக அஸ்வின் ஜெயப்ரகாஷ் நடிக்கிறார்.

அஸ்வினின் நண்பர்களாக கவுதம், வினோத், சைனா ஆகியோர் நடிக்கிறார்கள் .கதையில் முக்கியத்துவம் கொண்ட பாத்திரங்களில் குழந்தை நட்சத்திரங்கள் நேத்ரா, ஜெஸிகா நடிக்கிறார்கள்.

கேரளாவில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் கதை உருவாகியுள்ளது. கேரளாவில் பரவலாக பேசப்பட்டது .இதே போல் தமிழ் நாட்டிலும் நடந்துள்ளது. இந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்த வெப்சீரிஸ் உருவாகிறது.

காலமாற்றத்தில் காதலின் போக்கைச் சொல்லும் விதத்தில் இந்தத் தொடர் உருவாகிறது. இதை ஆர்ஜிஎஸ் சினிமாஸ் தயாரிக்கிறது.

ஒளிப்பதிவு சேகர் ராம் ஜெரால்டு, இசை பாடல்கள் ஸ்ரீ சாய் தேவ், எடிட்டிங் -ரோஜர், சண்டைக்காட்சிகள் – ஓம் பிரகாஷ் -கலை இயக்கம் சிவா என தொழில்நுட்ப கூட்டணி அமைத்து இத்தொடரை உருவாக்குகிறார்கள்.

Ashwin Jayaprakash and Rekha Nair joins for a web series titled Oorvasi

More Articles
Follows