தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘அரண்மனை 3’ படத்தின் வெற்றிக்கு பிறகு என்ன மாதிரியான படத்தை அடுத்து இயக்குவார் சுந்தர் சி என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
அடுத்த படம் பேய் படமா.? அல்லது காமெடி படமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
ஆனால் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் சுந்தர்.
வி.இசட்.துரை இயக்கத்தில் தலைநகரம் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சுந்தர். அடுத்ததாக இயக்கவுள்ள படத்தின் பணிகளைத் தற்போது துவங்கியுள்ளார்.
இந்த புதிய படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் கதாநாயகிகளாக மாளவிகா சர்மா, ஐஸ்வர்யா தத்தா, அம்ரிதா ஐயர் இணைந்து நடிக்கின்றனர். யுவன் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தை குஷ்புவின் அவ்னி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
கூடுதல் தகவல்கள்…
ஜீவாவும், ஜெய்யும் ஏற்கனவே சுந்தர்.சியின் இயக்கத்தில் கலகலப்பு 2 படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
நண்பன் படத்தில் ஜீவாவும் ஸ்ரீகாந்தும் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தனர்.
சுந்தர்.சி இயக்கிய உனக்காக எல்லாம் உனக்காக, ரிஷி, வின்னர் போன்ற படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sundar C is back With big Entertainer with Srikanth Jai and Jeeva