அவர்கள் ஸ்பைடர் மேனோ சூப்பர் மேனோ அல்ல..; ‘பொன்னியின் செல்வன்’ அப்டேட் அளித்த சுஹாசினி

அவர்கள் ஸ்பைடர் மேனோ சூப்பர் மேனோ அல்ல..; ‘பொன்னியின் செல்வன்’ அப்டேட் அளித்த சுஹாசினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இப்படம் உருவாகி வருகிறது.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்க விக்ரம் கார்த்தி சரத்குமார் ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதன் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது.

அது தொடர்பான புகைப்படம் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் லீக் ஆனது.

இன்று இயக்குனர் மணிரத்னத்தில் மனைவியும் நடிகையுமான சுஹாசினி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில்… “அவர்கள் ஸ்பைடர் மேனோ, சூப்பர் மேனோ அல்ல ஆனால், கேமரா மேன்கள், தங்கள் உருவத்தை மறையச் செய்வதற்கு அந்த ஆடைகள் பொருத்தமானவை,” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

Suhasini Mani Ratnam gives Ponniyin Selvan update

திட்டம் இரண்டில் கிடைத்த பாராட்டு.; பரவசத்தில் வி1 இயக்குனரும் நடிகருமான பாவல் நவகீதன்

திட்டம் இரண்டில் கிடைத்த பாராட்டு.; பரவசத்தில் வி1 இயக்குனரும் நடிகருமான பாவல் நவகீதன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்த கதாப்பாத்திரம் என்றாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் நடிகர்களில் பாவல் நவகீதனும் ஒருவர்.

’மெட்ராஸ்’ படத்தில் விஜி
என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர்.

‘குற்றம் கடிதல்’ படத்தில் வில்லத்தனம் கலந்த குணச்சித்திர வேடத்தில்
மிரட்டினார்.

அப்படங்களை தொடர்ந்து ‘மகளிர் மட்டும்’ படத்தில் தமிழ் பேசும் வட இந்திய வாலிபராக நடித்து பாராட்டு பெற்றார்.

இப்படி எந்த ஒரு வேடமாக இருந்தாலும், தனது நடிப்பு மூலம், அந்த கதாப்பாத்திரமாகவே மாறிவிடும் நடிகரான பாவல் நவகீதன்,
அடிப்படையில் இயக்குநர் என்றாலும், அவருக்குள் இருக்கும் நடிப்பு திறமையால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத
நடிகராகியுள்ளார்.

’வட சென்னை’, ‘பேரன்பு’ ஆகிய படங்களுக்குப் பிறகு தனது கனவான படம் இயக்குவதில் பாவல் நவகீதன் கவனம் செலுத்தி, ஒரு
படத்தை இயக்கினாலும், நடிகர் பாவல் நவகீதனை தமிழ் சினிமா விடுவதாக இல்லை.

எனவே, ‘வலிமை’, ‘பூமிகா’,
‘டாணாக்காரன்’, ‘திட்டம் இரண்டு’, ‘நவரசா’ இணைய தொடர் என பல படங்களில் நடித்து முடித்திருப்பவர்.

’ஸ்ரீதேவி சோடா
சென்டர்’ என்ற தெலுங்குப் படத்தில் முக்கிய வில்லன் வேடத்திலும் நடித்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் ‘திட்டம் இரண்டு’ படம் வரும் ஜூலை 30 ஆம் தேதி நேரடியாக சோனி லிவ்
ஒடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

இதில் பத்திரிகையாளர்களும், திரையுலக
பிரபலங்கள் பலரும் படம் பார்த்தனர்.

படம் பார்த்த அவனைவரும் பாவல் நவகீதனின் கதாப்பாத்திரத்தையும், அவருடைய நடிப்பையும் வெகுவாக பாராட்டி வருவதோடு, நாசர்,
ரகுவரன், பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்களைப் போல், அனைத்து வேடத்திற்கும் கச்சிதமாக பொருந்தும் நடிகராக பாவல் நவகீதன்
இருப்பதாக, படத்தின் விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

பத்திரிகைகளின் இந்த பாராட்டினால் உற்சாகமடைந்திருக்கும் பாவல் நவகீதனிடம் படம் குறித்து கேட்ட போது,…

”சிறிய வேடம், பெரிய
வேடம் என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை. ஒரு காட்சி வந்தாலும், ரசிகர்கள் பேசும்படி நடிக்க வேண்டும், என்பது தான் என் எண்ணம்.

‘திட்டம் இரண்டு’ படத்தின் கதை வித்தியாசமாக இருந்ததோடு, இதுவரை யாரும் சொல்லாத ஒரு கான்சப்ட்டாக இருந்ததாலும், என்
வேடம் படம் பார்ப்பவர்கள் மனதில் நிற்கும் விதத்தில் இருந்ததாலும் நடித்தேன்.

நான் எண்ணியது போலவே இன்று படம் பார்த்த
அனைவரும் என்னை பாராட்டுவதோடு, பத்திரிகைகள் என் கதாப்பாத்திரத்தையும், நடிப்பையும் குறிப்பிட்டு எழுதுவது மகிழ்ச்சியாக
இருக்கிறது.” என்றார்.

’வி1’ என்ற திரைப்படத்தை இயக்கிய பாவல் நவகீதன், மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும்,
நடிகராக கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல், தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

’திட்டம் இரண்டு’ படத்தை
தொடர்ந்து, இந்த வருடம் அவருடைய நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாக இருப்பதோடு, பல புதிய படங்களிலும் ஒப்பந்தமாகி
வருகிறார்.

எனவே, பத்திரிகைகளில் குறிப்பிட்டது போல், நாசர், ரகுவரன், பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்களின் வரிசையில் பாவல் நகவகீதன்
விரைவில் இணைவார் என்பது உறுதி.

Critics praises Pavel Navgeethan acting in Thittam Irandu

ரங்கன் வாத்தியாராக என்னை செதுக்கிய ரஞ்சித்துக்கு நன்றிகள்..; நெகிழும் ‘சார்பட்டா பரம்பரை’ பசுபதி

ரங்கன் வாத்தியாராக என்னை செதுக்கிய ரஞ்சித்துக்கு நன்றிகள்..; நெகிழும் ‘சார்பட்டா பரம்பரை’ பசுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கின்ற திரை ரசிகர்கள் கொண்டாடுகிற படமாக நீலம் பிக்சர்ஸ் & K9 ஸ்டுடியோ தயாரிப்பில் பா. இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ சென்னையின் வாழ்வியலையும் , பாக்சிங்கையும் களமாக கொண்ட யதார்த்தமான படைப்பை பார்த்து அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள்.

தான் எடுத்து கொண்ட கதையை, சொல் நேர்த்தி.. செயல் நேர்த்தியுடன் படைப்பதில் வித்தகர், பா.இரஞ்சித்.

ரங்கன் வாத்தியாராக என்னை செதுக்கியதற்கு அவருக்கு என் நன்றிகள் பல. என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன், நெருக்கமானவன்.

நண்பர் ஆர்யாவுடன் நடித்ததில் என்னிடம் மேலும் பெருமை சேர்ந்து கொள்கிறது.

என்னுடன் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், எந்த சமரசமும் இன்றி இப்படத்தை தயாரித்த நீலம் புரொடக்ஷன் & K9 ஸ்டுடியோவுக்கும் என் நன்றிகள்.

ஏறக்குறைய 22 ஆண்டுகள் என்னுடைய திரை பயணத்தில் என்னுடன் பயணித்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் , தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், சக கலைஞர்களுக்கும், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் , ஊடக நண்பர்களுக்கும் , சமூக வலை தளங்களுக்கும், குறிப்பாக உலகம் முழுவதும் இருக்கின்ற ரசிகர்களுக்கும் நன்றிகள் பல.

( நான் எந்த சமூக வலை தளங்களிலும் இல்லை என்பதால் இந்த செய்தியை பிஆர்ஓ ஜான்சன் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன். )

நன்றி,
அன்புடன்,
பசுபதி
நடிகர்.
30.7.2021

Actor Pasupathy thanked director Pa Ranjith for his role in Sarpatta Parambarai

சூர்யா ஆர்யா நயன்தாராவுக்கு ஓடிடி ரிலீஸ் செமயாய் ஒர்க் அவுட் ஆகுது போல…

சூர்யா ஆர்யா நயன்தாராவுக்கு ஓடிடி ரிலீஸ் செமயாய் ஒர்க் அவுட் ஆகுது போல…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்யா சாயிஷா நடித்த ‘டெடி’ படம் ஓரிரு மாதங்களுக்கு முன் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசானது.

அண்மையில் ஆர்யாவின் அடுத்த படமான ‘சார்பட்டா பரம்பரை’ அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.

இரு படங்களுமே சூப்பரான வரவேற்பை ரசிகர்கள் & குடும்பத்தினரிடையே பெற்றது.

ஆர்யாவைப் போல் நயன்தாராவின் படங்களுமே ஓடிடியில் ருலீசாகி வருகிறது.

ஆர்ஜே பாலாஜியுடன் நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ படம் 2020ல் தீபாவளிக்கு ஹாட்ஸ்டார் & டிவியில் நேரடியாக வெளியானது.

தற்போது நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படம் ஆகஸ்ட் 13ம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.

சூர்யா தயாரித்த ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படமும் சூர்யா தயாரித்து நடித்த ‘சூரரைப் போற்று’ படமும் ஓடிடி தளத்தில் வெளியானது.

இவை இரண்டும் வெற்றிப் பெற்றது.

தற்போது ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ஜெய் பீம்’ படம் ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Arya Suriya and Nayanthara’s success continues in OTT release

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்துடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயனின் படம்

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்துடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயனின் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள படம் ’டாக்டர்’.

இந்த திரைப்படம் ரிலீசுக்கு எப்போதோ தயாராக இருந்த நிலையில் சட்டமன்றத் பொதுத் தேர்தல் மற்றும் கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போனது.

இதன்பின்னர் ஓடிடியில் ரிலீஸ் என கூறப்பட்டது.

இந்த நிலையில் டாக்டர் பட டிவி உரிமையை பெற்றுள்ள சன் டிவி இந்த படத்தை தீபாவளி நாளில் ரிலீஸ் செய்ய (அதாவது டிவியில் ஒளிப்பரப்ப) உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது..

ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படமும் தீபாவளி அன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.

இதையும் சன் டிவி நிறுவனமே தயாரித்துள்ளது.

ஆக தீபாவளி திருநாளில் இரட்டை விருந்து இருப்பது உறதியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini film to clash with SK film

கமல் தலைமையில் சினேகன் -கன்னிகா திருமணம்.; பாரதிராஜா அமீர் நேரில் வாழ்த்து

கமல் தலைமையில் சினேகன் -கன்னிகா திருமணம்.; பாரதிராஜா அமீர் நேரில் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல கவிஞரும் நடிகருமான சினேகன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதன் மூலம் படுபிரபலமானார்.

அப்போதே கமலுடன் ஏற்பட்ட நட்பினால் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

இவர் கமல்ஹாசன் முன்னிலையில் இந்த தன் திருமணம் நடைபெற இருப்பதாக சினேகன் தெரிவித்து இருந்தார்.

அதன்படி இன்று ஜூலை 29-ஆம் தேதி காலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் சினேகன் -கன்னிகா ரவி திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் இயக்குனர் பாரதிராஜா, ஞானசம்பந்தன், அமீர் உள்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்தினர்.

விருதுநகர் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் நடிகை கன்னிகா ரவி.

சமுத்திரக்கனி அதுல்யா நடித்த ’அடுத்த சாட்டை’ உள்பட ஓரிரு படங்களிலும் நடித்துள்ளார். டிவி சீரியல் தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவர் சமூக வலைத்தளங்களில் தான் பயின்ற சிலம்பாட்ட வீடியோக்களை பதிவிடுவார். இதனால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bigg Boss snehan married Tamil actress Kannika Ravi with Kamal Haasan Blessings

More Articles
Follows