தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன் கௌதம் கார்த்திக் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.
ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
இந்த படத்தில் கௌதம் மேனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்று மார்ச் 18 ஆம் தேதி இரவு 10 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
இரண்டு நிமிடங்களுக்கு மேலாக ஓடும் இந்த ட்ரெய்லரில் சிம்புவின் ஆக்சன் காட்சிகளும் மாஸ் வசனங்களும் இடம் பெற்றுள்ளன.
ஏ ஜி ஆர் என்ற கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்துள்ளார்.. மணல் கொள்ளை அடிக்கும் மாபியா கேங்ஸ்டர் பற்றிய கதைக்களமாக இந்த படம் உருவாகியுள்ளது.
இதில் இங்கு எவன் ஆளனும்.. எவன் வாழனும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும் என சிம்பு டயலாக் பேசுகிறார்.
மேலும் மற்றொரு வசனத்தில்… மானை ஓநாய் கொல்லும்.. ஓநாயை சிறுத்தை கொல்லும்… சிறுத்தையை புலி கொல்லும்.. புளியை சிங்கம் கொல்லும்.. ஆனால் சிங்கத்தை கொல்ல எந்த ஒரு மிருகமும் பொறக்கலடா என்று வசனம் பேசுகிறார்.
இந்த ட்ரெய்லர் முடிவடையும் நேரத்தில் துரோகமும் துரோகியும் எனக்கு புதிது இல்லை என்கிறார் சிம்பு.
இந்த ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..
STR’s mass punch in Pathu Thala traier
*PATHU THALA-FILMISTREET* ❤🔥
The most awaited #PathuThala official trailer is here