தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருவதால், ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்த கூடாது என பெரும்பாலான தமிழர்கள் வலியுறுத்தினர்.
அதையும் மீறி சென்னையில் போட்டி நடைபெற்றதால், நிறைய அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.
அப்போது சிலர் மீது போலீஸ் தடியடி நடத்தினர்.
இதற்கு முன் நடிகர் சங்க போராட்டத்தின் போது மத்திய அரசு ரானுவத்தை அனுப்பினால் கூட அஞ்சமாட்டோம். காவிரிக்காக மானத் தமிழன் போராடுவான் என சத்யராஜ் ஆவேசமாக பேசியிருந்தார்.
இதனை கிண்டலடிக்கும் வகையில் போலீஸ்காரர்களால் சிலர் தாக்கப்படும் போது நடிகர் சௌந்தர ராஜா உள்ளிட்டவர்கள் கெஞ்சுவது போன்று ஒரு படத்தை பாஜக. வை சேர்ந்த எச். ராஜா ட்விட்டரில் ஒரு படத்தை போட்டுள்ளார்.
அதை போட்டுவிட்டு… இராணுவத்தை எதிர்கொள்ள தயங்காத கூட்டம். (படத்தை பார்க்கவும்) என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
அதாவது ரானுவத்திற்கே அஞ்சமாட்டோம் என கூறும் தமிழர் கூட்டம் எப்படி போலீசுக்கு பயப்படுகிறது? என்பதை பார்த்தீர்களா? என நக்கலாக பதிவிட்டுள்ளார்.
ஆனால் அந்த போட்டோ 2017ல் ஜல்லிக்கட்டு போராட்ட சமயத்தில் எடுக்கப்பட்ட போட்டோ என அதில் இருக்கும் நடிகர் சவுந்தர ராஜாவே கூறியுள்ளார்.
Soundara Raja Actor @soundar4uall 9m9 minutes ago
Replying to @HRajaBJP
என்ன சொல்ல ….இது மெரினா போராட்ட களத்தில் எடுத்த புகைப்படம் ..உங்க திறமை கண்டு வியக்கிறேன்…. வாழ்க ஜனநாயகம்