தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா ஊரடங்கால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தான் நாம் சினிமாவில் ரசித்த ஹீரோக்கள் யார்? நிஜ ஹீரோக்கள் யார்? என்பது மெல்ல மெல்ல தெரிய வந்துள்ளது.
தங்கள் உயிரை பயணம் வைத்து மருத்துவர்கள் பணியாற்றி வருகீன்றனர்.
இந்த நிலையில் ரியல் ஹீரோ நடிகர் சோனுசூட் தற்போது ரியல் ஹீரோவாக உயர்ந்துள்ளார்.
தன்னால் முயன்ற எல்லா உதவிகளையும் செய்து வருகிறார் சோனு.
மகள்களை மாடாக்கி விவசாயம் செய்த விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தார். மேலும் ஏழைக்குழந்தைகளைத் தத்தெடுத்தது உள்ளார்.
இந்தியாவில் மட்டுமல்லாமல் ரஷ்யா, பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள மக்களையும் மாணவர்களையும் இந்தியா அழைத்துவர விமான செலவை ஏற்றுக்கொண்டார்.
கேரளாவில் சிக்கித்தவித்த பீஹார் மாநில ஆயத்த ஆடைத் தொழிலாளர்களை விமானம் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு விமானம் ஏற்பாடு செய்தார்.
இதனையடுத்து பழங்குடியினப் பெண்ணுக்கு வீடும், கர்நாடகாவில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு காய்கறிக் கடையும் வைக்க உதவி செய்துள்ளார்.
இந்த நிலையில்தான், இதுவரை 32 ஆயிரம் பேர் உதவி கேட்டு கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
என்னால், முடிந்தவரை உதவி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.