தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆகஸ்ட் 5-ம் தேதி பின்னணி பாடகரும் நடிகரும் தயாரிப்பாளருமான எஸ். பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி உறுதியானது.
உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இசை பிரியர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். விரைல் குணமாகி வீடு திரும்பிவிடுவேன் என கூறியிருந்தார் எஸ்.பி.பி.
இன்று ஆகஸ்ட் 14ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவித்துள்ளது.
இதனையறிந்த இளையராஜா பாலு சீக்கிரம் எழுந்து வா.. உனக்காக காத்திருக்கிறேன் என உருக்கமான வீடியோ ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைந்து உடல் நலம் பெற வேண்டும் என முன்னணி நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் உள்ளிட்டோர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்காக பிரார்த்திக்குமாறு நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார்.
துக்கம் மனதை பிசைகிறது என இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் கூறியுள்ளார்.
இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், அனிருத், தினா, தமன், இயக்குநர் ஹரி, நடிகர்கள் பிரசன்னா, யோகி பாபு, நடிகைகள் குஷ்பூ, ராதிகா உள்ளிட்டோரும் அவர் நலம் பெற வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
இதற்கிடையில் எஸ்.பி.பி இறந்து விட்டதாகவும் வதந்திகள் பரவியது.
எனவே எஸ்.பி.பி.யின் மகனும் பாடகருமான எஸ்.பி.பி. சரண் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்.. என் தந்தையின் உடல்நலம் குறித்து அக்கறை கொண்டு விசாரித்தமைக்கு நன்றி. அவர் ஐசியூவில் வென்டிலேசனில் உள்ளார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது.
வதந்திகளை நம்பவேண்டாம். அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து வரும் தகவல்களை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்கிறோம். மீண்டும் நன்றி
என தெரிவித்துள்ளார் எஸ்.பி.பி. சரண்.
Singer SP Charan clarifies about his dad SPB health condition