800 காவலர்களுக்கு மாஸ்க் சானிடைசர் வழங்கி தடுப்பூசி பாடல் தந்த க்ரிஷ்

800 காவலர்களுக்கு மாஸ்க் சானிடைசர் வழங்கி தடுப்பூசி பாடல் தந்த க்ரிஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

singer krishநடிகர், இசையமைப்பாளர் க்ரிஷ், தன் பன்முக திறமையினால், தமிழ் சினிமாவில், புகழ் மிக்க படைப்பாளியாக, கவனம் குவித்து வருகிறார்.

சமீபத்தில் முருக கடவுள் குறித்து, ஆன்மிக பாடல் ஆல்பம் ஒன்றை உருவாக்கியிருந்தார்.

மிகப்பெரும் வெற்றியை குவித்த, அந்த ஆல்பம் பல முனைகளில் இருந்தும் பாராட்டுக்களையும் குவித்தது.

இந்த நிலையில் தற்போது நம் சமூகத்திற்கு அவசியமான, கோவிட் தடுப்பூசி குறித்த, விழிப்புணர்வை உருவாக்கும் வகையில், ஒரு அற்புதமான பாடலை உருவாக்கியுள்ளார்.

SP Dr. சிவக்குமார் IPS, இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

பாடல் குறித்து இசையமைப்பாளர் க்ரிஷ் கூறியதாவது….

மதிப்புமிக்க, அற்புதமான இந்த விழிப்புணர்வு பாடலில், பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

மனிதகுலம் வரலாற்றில் பல விதமான போர்களையும், போராட்டங்களையும் கடந்தே வந்திருக்கிறது.

ஆனால் தற்போதைய நமது போராட்டம், முற்றிலும் மாறுபட்டது. இப்போது காலம் நம் மீது தொடுத்திருக்கும் போர் மிகப்பெரும் சவால் அளிக்ககூடியது.

இந்தப் போரில் நாம் அனைவருமே போர் வீரர்கள் தான். நம்முடைய கேடயம் என்பது சுகாதாரமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாகும்.

மேலும் தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பதும், மாஸ்க் அணிவதும், இந்தப்போரில் நமது தலையாய கடமையாகும்.

ஆனால் இந்தப்போரில் வெல்ல, இவையனைத்தையும் விட முக்கியமானது, ஒவ்வொருவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்வதே ஆகும். தடுப்பூசியால் மட்டுமே நாம் இந்த கொடிய காலத்தை கடந்து செல்ல முடியும்.

இப்பாடல் இந்த சமூக கருத்தை வலியுறுத்தியே உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடலின் வரிகளை எழுதிய SP Dr. சிவக்குமார் IPS அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் இப்பாடலை தயாரித்த ஆற்காடில் உள்ள ‘Sri Kanishk Collections’ நிறுவனத்தாருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

இந்த அற்புதமான தடுப்பூசி விழிப்புணர்வு பாடலை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல், மாஸ்க் மற்றும் சானிடைஸர் ஆகியவற்றை 800 க்கும் மேற்பட்ட முன்கள காவல் துறை பணியாளர்களுக்கு வழங்கியுள்ளார் க்ரிஷ்.

Singer Krish awareness song for covid 19

சிம்புக்கு 1.. சிவகார்த்திகேயனுக்கு 2.. நயன்தாராவுக்கு 2.. அதுல்யாவுக்கு 1.. ஆனால் விஜய்சேதுபதிக்கு மட்டும் 5..

சிம்புக்கு 1.. சிவகார்த்திகேயனுக்கு 2.. நயன்தாராவுக்கு 2.. அதுல்யாவுக்கு 1.. ஆனால் விஜய்சேதுபதிக்கு மட்டும் 5..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiகொரோனா ஊரடங்கால் சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

வரும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டாலும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட வாய்ப்பே இல்லை.

செப்டம்பர் வரை தியேட்டர்களுக்கு தடை இருக்கலாம். அப்போது திறக்கப்பட்டாலும் மக்கள் கூட்டம் அவ்வளவாக இருக்காது.

மேலும் தடுப்பூசிகள் பற்றாக்குறை இருப்பதால் கொரோனா தொற்று பயமும் முழுவதுமாக நீங்கி விடவில்லை.

எனவே தியேட்டர்களுக்கு மக்கள் பழையபடி வருவார்கள் என்ற அச்சம் திரைப்பட தயாரிப்பாளர்கள் & தியேட்டர்கள் உரிமையாளர்களிடம் நிலவுகிறது.

இந்த நிலையில் முக்கிய படங்களை ரிலீஸ் செய்ய ஓடிடி தளங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

அந்தந்த படத்தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டதாகவும் சிலரிடம் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

தற்போது வரை தகவல்கள் படி.. (சில படங்கள் தியேட்டர்களில் வெளியாகவும் வாய்ப்புள்ளது.)

இதோ அதன் விவரம்..

ஐங்கரன் – ஜிவி பிரகாஷ்

மஹா – ஹன்சிகா & சிம்பு

எப்ஐஆர் ( விஷ்னு விஷால்)

நரகாசூரன் (அரவிந்த்சாமி)

பிரண்ட்ஷிப் (அர்ஜுன்)

முருங்கைக்காய் சிப்ஸ் (அதுல்யா)

ராங்கி (த்ரிஷா)

நயன்தாரா 2 படங்கள்..

ராக்கி (ரிலீஸ் உரிமை)

நெற்றிக்கண்

சிவகார்த்திகேயன் 2 படங்கள்

டாக்டர்

வாழ் (தயாரிப்பு)

விஜய்சேதுபதி 5 படங்கள்

துக்ளக் தர்பார்

லாபம்

மாமனிதன்

கடைசி விவசாயி

யாவதும் ஊரே யாவரும் கேளீர்

Vijay Sethupathi in 5 films to release in OTT

ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து..; அரசு அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி

ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து..; அரசு அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

+2 exam studentsமாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ CBSE பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக நேற்று பாரத பிரதமர் மோடி அறிவித்தார்.

எனவே தமிழகத்திலும் +2 தேர்வுகள் ரத்து செய்யப்படுமா? என மாணவர்கள் எதிர்ப்பார்த்தனர்.

கல்வியாளர்களுடன் தமிழக அரசு ஆலோசனையில் உள்ளதால் இதுபற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை

இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அந்த மாநில கல்வித்துறை அமைச்சர் புபேந்திர சின் சுதாசமா அறிவித்துள்ளார்.

இவர்களை தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்திலும் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் அந்த மாநில மாணவ மாணவிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழக மாணவர்களே காத்திருங்கள்…

Gujarat government cancels 12th exams

நடிகரும் கல்வியாளருமான ஐசரி கணேஷ் முதல்வரின் நிவாரண நிதிக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் உதவி

நடிகரும் கல்வியாளருமான ஐசரி கணேஷ் முதல்வரின் நிவாரண நிதிக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ishari Ganeshதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது.

கொரோனா பரவலை தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கால் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது எனலாம்.

இதனிடையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக மக்கள் நிவாரண நிதி அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

அதன்படி சாமானியன் முதல் பிரபலங்கள் வரை பலரும் நிதி அளித்து வருகின்றனர். இதுவரை நிதி வசூல் 200 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகரும் தயாரிப்பாளரும் வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவருமான டாக்டர் ஐசரி கணேஷ் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளார்.

அப்போது அவருடன் அவருடைய மனைவி ஆர்த்தி மற்றும் மகள் ப்ரீத்தா ஆகியோர் உடனிருந்தனர்.

Producer Ishari Ganesh donates Rs 1 crore to corona relief fund

இசைக்கு இளைஞர்.. என் மனதுக்குக் கிளைஞர்..; இளையராஜாவுக்கு கமல் சித்ரா வாழ்த்து

இசைக்கு இளைஞர்.. என் மனதுக்குக் கிளைஞர்..; இளையராஜாவுக்கு கமல் சித்ரா வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan ilayarajaஇசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

2.6.1943 இல் பிறந்தவர். இவரது இயற்பெயர் டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன். தேனி மாவட்டம் பண்ணப்புரத்தில் பிறந்தவர் இவர்.

1960களில் பல மேடை நாடகங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

தனது தம்பிகளுடன் இணைந்து பாவலர் பிரதர்ஸ் என இசை குழுவை ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான இசை கச்சேரிகளையும் நடத்தியுள்ளனர்.

இவரது 33 ஆவது வயதில் “அன்னக்கிளி” திரைப்படத்திற்கு இசையமைக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் இயக்குநர் பஞ்சுஅருணாச்சலம் இவரை இளையராஜா என்ற பெயருடன் அறிமுகப்படுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி இவருக்கு “இசைஞானி“ என்ற பட்டத்தை வழங்கினார்.

இந்திய அரசின் தேசிய விருதினை 1985-சாகர சங்கமம் (தெலுங்கு), 1987- சிந்து பைரவி (தமிழ்), 1989- ருத்ர வீணை (தெலுங்கு), 2009- பழஸிராஜா (மலையாளம்), 2016- தாரை தப்பட்டை (தமிழ்) போன்ற படங்களுக்காக 5 முறை பெற்றுள்ளார்.

இசைஞானிக்கு அவரது ரசிகர்கள், இந்திய திரையுலகினர் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பின்னணி பாடகி சித்ரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இளையராஜா இசையில் சித்ரா பாடிய பாடலை பாடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ( “கிழக்கு வாசல்” படத்திலிருந்து வந்ததே ஓ..குங்குமம்.. என்ற பாடலைப் பாடி வீடியோவாக ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.)

நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில்..

இசைக்கு இளைஞர் இளையராஜா.என் மனதுக்குக் கிளைஞர். உணர்வுகளில் உறவாய் இருப்பவர். சம்பவங்களை ஸ்வரங்களாய் மொழிபெயர்ப்பவர். பல கோடி மனங்களை கண்டக்ட் செய்யும் மேஸ்ட்ரோவிற்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Kamal birthday wishes to Ilayaraja

JUST IN புதுவையில் 3 நியமன MLAக்கள் விவகாரம்..; மத்திய அரசு வாதம்..; ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

JUST IN புதுவையில் 3 நியமன MLAக்கள் விவகாரம்..; மத்திய அரசு வாதம்..; ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுவை சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதிகளில் 10 தொகுதிகளை கைப்பற்றியது என்ஆர் காங்கிரஸ்.

இந்த கூட்டணியில் இருந்த பாரதிய ஜனதா 6 இடங்களில் வென்றது.

எனவே 10+6 எம்எல்ஏக்கள் 6 ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அடுத்த நாள் மே 8ல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரங்கசாமி சிகிச்சைக்காக , சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சூழ்நிலையில், புதுச்சேரி சட்டமன்றத்திற்கு கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆர்.பி.அசோக் பாபு ஆகிய மூவரை எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும் இந்த உத்தரவை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கக்கோரி புதுச்சேரி கரிக்கலம்பாக்கம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்கள், சீர்திருத்தவாதிகளை நியமன எம்எல்ஏக்களாக நியமிக்க வேண்டும் என்றும், ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்களை நியமித்துள்ளது தவறானது என்றும் தன் மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டனர்.

அதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினர்..

இந்நிலையில், அப்போது, புதுச்சேரி சட்டமன்றத்திற்கு நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

அரசுப் பணியில் இருப்பவர்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்க மட்டுமே தடை என மத்திய அரசு வாதம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Madras high court judgement on Pondicherry nominated MLAs

pondy mla

More Articles
Follows