சிம்பு நயன்தாரா மேரேஜ் நியூஸ்: இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியல…

சிம்பு நயன்தாரா மேரேஜ் நியூஸ்: இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியல…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu and Nayanthara marriage fake news தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவர் டி.ராஜேந்தர்.

இவரின் இளைய மகன் குறளரசனுக்கு திருமணம் ஆகிவிட்டது.

ஆனால் மூத்த மகனும் நடிகருமான சிம்புவுக்கு கடந்த சில ஆண்டுகளாக திருமண பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பல இடங்களில் பெண் பார்த்து வருகின்றனர்.

பல காரணங்களால் அவருடைய திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது.

இந்த நிலையில் சிம்புவின் தூரத்து உறவினர் பெண் ஒருவரை சிம்பு மணக்கவுள்ளதாக சில முன்னணி இணையத்தளங்களிலேயே செய்திகள் வெளியானது. (நம் தளத்தில் அப்படியொரு தவறான செய்தியை பதிவிடவில்லை)

இந்த நிலையில் சிம்புவின் தந்தை டிஆர் அவர்கள் சற்றுமுன் சூடான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…
எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை.

எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.
இப்படிக்கு,
டி.ராஜேந்தர் M.A
உஷா ராஜேந்தர்

அதுபோல கொரோனா ஊரடங்கில் வழிபாட்டு தலங்கள் மூடிக்கிடக்க நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கோயிலில் எளிமையாக திருமணம் செய்துவிட்டதாக சில செய்திகள் வெளியானது. (இதையும் நாம் பதிவிட்வில்லை)

இவையாவும் உண்மையல்ல. யார்? எதற்காக இப்படியொரு செய்தியை பதிவிடுகிறார்கள்? என்பதுதான் புதிராகவே உள்ளது.

Simbu and Nayanthara marriage fake news

அரசியலில் ரஜினி KING ஆக இருக்கனும்.. Kingmaker ஆக இருக்கக்கூடாது.. – குஷ்பூ

அரசியலில் ரஜினி KING ஆக இருக்கனும்.. Kingmaker ஆக இருக்கக்கூடாது.. – குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Khushbu says Rajini should be the king in Politics not the kingmaker மன்னன், அண்ணாமலை, பாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்திருக்கிறார் நடிகை குஷ்பு.

இவர் தற்போது சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்திலும் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரு பிரபல பத்திரிகைக்கு குஷ்பு அளித்துள்ள பேட்டியில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பேசியுள்ளார்.

அதில்…

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது உண்மை தான்.

மக்களும் 3வது தலைமையை எதிர்பார்க்கிறார்கள். ரஜினியின் அரசியல் சிந்தனைகள் பற்றி தெரியவில்லை.

அடுத்த வருடம் 2021 வரப்போகிற தேர்தல் நிச்சயமாக வித்தியாசமான ஒன்றாக இருக்கப் போகிறது.

திரைத்துறையினர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். ரஜினியை போல இளைய தலைமுறையினரும் வரவேண்டும்.

ரஜினி அரசியலில் கிங் மேக்கராக இருக்க கூடாது. அவர் கிங் ஆக இருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் அவருக்கு ஓட்டு போடுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை படத்தில் என்றுமே ராஜா (கிங்) நீ ரஜினி நீ.. என்று ரஜினியை பார்த்து குஷ்பு பாடியது சரிதான் போல…

Khushbu says Rajini should be the king in Politics not the kingmaker

போதையில் குமரியை கொஞ்சிய கோடீஸ்வரன் குளிக்காமல் கோயிலுக்கு போனால் மரியாதை.; சிவகுமார் மீது திருப்பதி தேவஸ்தானம் வழக்கு (வீடியோ)

போதையில் குமரியை கொஞ்சிய கோடீஸ்வரன் குளிக்காமல் கோயிலுக்கு போனால் மரியாதை.; சிவகுமார் மீது திருப்பதி தேவஸ்தானம் வழக்கு (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tirupati Devasthanam filed complaint against Actor Sivakumarஓவியர், நடிகர், மேடை பேச்சாளர் என் பன்முகம் கொண்டவர் சிவகுமார்.

அதே சமயம் சிவகுமாரின் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் சில நேரம் சர்ச்சையை கிளப்பும்.

அனுமதியில்லாமல் சிவகுமாரை செல்ஃபி எடுத்த ஒருவரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டது சர்ச்சையாகவே பின்னர் மன்னிப்பு கேட்டு புதிய செல்போனை வாங்கி கொடுத்தார்.

அதன்பின்னரும் ஒருமுறை செல்போனை தட்டிவிட்டார்.

இந்த நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பேசிய பேச்சு ஒன்றின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்…

கோயில்களில் இன்னும் தீண்டாமை இருக்கிறது. ஏழைகள் திருப்பதி கோயிலுக்கு போனால் 4 நாட்கள் தரிசனத்திற்கு காத்திருக்க வேண்டும்.

ஆனால் கோடீஸ்வரன் தண்ணியடித்துவிட்டு கொஞ்சும் குமரியுடன் விடிய விடிய இருந்துவிட்டு குளிக்காமல் கோயிலுக்கு போனால் கூட கும்ப மரியாதை கொடுக்கப்படுகிறது.

இதை சும்மா சொல்லவில்லை. ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கிறேன் என பேசியிருந்தார்.

தற்போது இந்த பேச்சுதான் அவர் மீது வழக்கு பதிய காரணமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் மாயன் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திருப்பதி மலையில் உள்ள இரண்டாவது நகர காவல் நிலையத்தில் நடிகர் சிவக்குமார் மீது புகார் செய்யப்பட்டது.

தேவஸ்தானம் அளித்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tirupati Devasthanam filed complaint against Actor Sivakumar

IAS படிப்புக்கு வைத்திருந்த 5 லட்சத்தை ஏழைகளுக்கு கொடுத்த நேத்ரா மோகன்.; கல்விச் செலவை அரசு ஏற்கும் என முதல்வர் உறுதி!

IAS படிப்புக்கு வைத்திருந்த 5 லட்சத்தை ஏழைகளுக்கு கொடுத்த நேத்ரா மோகன்.; கல்விச் செலவை அரசு ஏற்கும் என முதல்வர் உறுதி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

student nethraமதுரையில் மேலமடை பகுதியைச் சேர்ந்தவர் சலூன் கடைக்காரர் மோகன். இவருக்கு வயது 48.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரிசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை நிவாரணமக வழங்கினார்.

மேலும் பலர் இவரின் உதவியை நாட தனது மகள் நேத்ராவின் ஐஏஎஸ் படிப்புக்காக சேமித்து வைத்த ரூ.5 லட்சத்தையும் ஏழைகளுக்கு கொடுத்து உதவினார்.

இவரின் மகள் நேத்ரா தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார்.

நடிகர் பார்த்திபன் உட்பட பலரும் மோகனை பாராட்டினர். மேலும் அவரின் மகள் நேத்ரா கல்விக்கு உதவுவதாக அறிவித்தனர்.

மோகனின் இந்த நெகிழ்ச்சியான உதவியை அறிந்த பிரதமர் மோடி, மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிலையில் நேத்ராவின் உயர்கல்விச் செலவை தமிழக அரசு ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்…

முடிதிருத்தகம் நடத்தி வரும் மோகன், தனது மகளின் வேண்டுகோளுக்கிணங்க, படிப்புக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை, ஏழை, எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்க செலவிட்டதற்கு, தமிழக மக்கள் சார்பாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் எதிர்கால படிப்பிற்கு சேமித்து வைத்திருந்த பணத்தை, ஊரடங்கு காலத்தில், ஏழை, எளிய மக்களுக்கு செலவிட்டதை அங்கீகரிக்கும் வகையில், நேத்ராவின் உயர் கல்வி செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

நேத்ரா அனைத்து வகையிலும் சிறந்து விளங்கி, இதுபோன்ற பற்பல பாராட்டுதல்களையும், அங்கீகாரத்தையும் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் மேலும் பெருமை சேர்த்திட வேண்டும் எனவும் முதல்வர் வாழ்த்தியுள்ளார்.

மீண்டுமொரு வெட்டுக்கிளி தாக்குதல் இருக்கு..; இந்தியாவில் 15 மாநிலங்களுக்கு ஐ.நா. எச்சரிக்கை

மீண்டுமொரு வெட்டுக்கிளி தாக்குதல் இருக்கு..; இந்தியாவில் 15 மாநிலங்களுக்கு ஐ.நா. எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

locust attack in india 2020கடந்த மார்ச் மாதம் முதலே கொரோனா பாதிப்பால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா உயிர் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனிடையில் கடந்த மே மாதம் கிழக்கு ஆப்பிரிக்காவில் பெருகிய வெட்டுக்கிளிக் கூட்டம் பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு படையெடுத்து வந்தது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆயிரக்கணக்கான எக்டேர் பரப்பில் உள்ள பயிர்கள் சேதமடைந்துள்ளன.

தமிழகத்திலும் சில இடங்களில் இந்த வெட்டுக்கிளி தாக்குதல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஈரானிலும் வளர்ந்துவரும் வெட்டுக்கிளிகள் கூட்டம் ஜூன், ஜூலை மாதங்களில் இந்தியாவிற்கு படையெடுத்து வரும் என ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த தாக்குதல் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் இருக்கும் என தெரிய வந்துள்ளது.

கௌதம் மேனனின் ‘ஒரு சான்ஸ் கொடு பொண்ணு’..; மேகா ஆகாஷிடம் கெஞ்சும் சாந்தனு & கலையரசன்

கௌதம் மேனனின் ‘ஒரு சான்ஸ் கொடு பொண்ணு’..; மேகா ஆகாஷிடம் கெஞ்சும் சாந்தனு & கலையரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

oru chance kuduவிண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் 2ஆம் பாகம் என்ற பெயரில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தை இயக்கினார் கௌதம் மேனன்.

இந்த குறும்படம் பல்வேறு கிண்டல்களை உருவாக்கியது. பல மீம்ஸ்கள் உருவானது.

அவை சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டது.

தற்ப்போது கௌதம் வாசுதேவ் மேனன் தனது அடுத்த வீடியோவின் டீசரை வெளியிட்டு உள்ளார்.

இந்த குறும்படம் அல்ல பாடல்.

ஒரு சான்ஸ் கொடு பொண்ணு… என்ற இப்பாடலில் வீடியோ சாந்தனு பாக்யராஜ், மேகா ஆகாஷ், கலையரசன் போன்றோர் நடித்திருந்தனர்.

சாந்தனு ஒரு லவ்வர் பையனாகவும் கலையரசன் லோக்கல் பையனாக லுங்கியுடன் நடனமாடுகிறார்.

மேகா ஆகாஷ் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அழகாய் அமர்ந்திருக்கிறார்.

மேலும் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் நடனமாடும் காட்சியும் அதில் உள்ளது.

இந்த பாடலை கார்த்திக் இசையமைக்க, பாடலாசிரியர் கார்க்கி இதற்கு காதல் வரிகளை எழுதி இருக்கிறார்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள இந்த டீசர் 24 விநாடிகள் கொண்டது.

இந்த பாடலின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.. விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Attachments area

More Articles
Follows