5 வருசமாச்சு.. நிறைய பேர் பண்றாங்க..; பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் வாக்குமூலம்

5 வருசமாச்சு.. நிறைய பேர் பண்றாங்க..; பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் வாக்குமூலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில் சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கு முன்னதாக, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கொடுத்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

நங்கநல்லூரில் உள்ள ராஜகோபாலன் வீட்டிலிருந்த அவரது செல்போன், லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஆனால் அதிலுள்ள வாட்ஸ் அப் மேசேஜ்களை ராஜகோபாலன் டெலிட் செய்துள்ளார்.

ஆனாலும் சைபர் க்ரைம் போலீசாரின் உதவியுடன் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை போலீசார் திரும்ப மீட்டனர்.

இந்த விசாரணையில்… கடந்த 5 ஆண்டுகளாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மேலும் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார்.

இரவில் வாட்ஸ்அப்பில் சாட் செய்யும்படி மாணவிகளை கட்டாயப்படுத்தி இருக்கிறார்.

மேலும் மாணவிகளின் அந்தரங்க போட்டோக்களை அனுப்ப சொல்வாராம்.

இதே பள்ளியைச் சேர்ந்த மேலும் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இவை ராஜகோபாலன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ராஜகோபாலனை காவலில் எடுத்து விசாரிக்க அசோக்நகர் மகளிர் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் 94447 72222 என்ற எண்ணுக்கு புகார் அளிக்க முன்வர வேண்டும் என போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஸ்டாலின் ஐயா.. ராதாகிருஷ்ணன் வேண்டாம்.. இதெல்லாம் செய்யுங்க.. இல்லேனா என்னை தூக்குல கூட போடுங்க.. – மன்சூரலிகான்

ஸ்டாலின் ஐயா.. ராதாகிருஷ்ணன் வேண்டாம்.. இதெல்லாம் செய்யுங்க.. இல்லேனா என்னை தூக்குல கூட போடுங்க.. – மன்சூரலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mansoor ali khan actorஅய்யா மாண்புகு தமிழக முதலமைச்சர்
முத்தமிழறிஞரின் வித்தக புத்திரன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அய்யா அவர்களுக்கு நடிகர் மன்சூரலிகானின் மிகத்தாழ்மையான வேண்டுகோள்..

அய்யா எனை நீங்கள் பணயக்கைதியாக வைத்துக் கொண்டு இன்னும் பல்லாயிரக்கணக்கில் வருவார்கள் ஒரே ஒரு உத்தரவு இடுங்கள் இன்று முதல் கொரானா இல்லாத் தமிழகம்.

யாரும் முகக் கவசம் அணிய வேண்டாம்..

எல்லா மருந்துகள் ஊசிகள் அனைத்தையும் மூட்டைக் கட்டி எந்த நாட்டுக்காவது அனுப்பி விடுங்கள். மக்கள் விருப்பப்படி முன்புபோல் வாழலாம்.

வெளிநாடுகளிலிருந்து யாரும் வரலாம். எந்த ஈபாஸ் எறும்பு பாஸ் தேவையில்லை என்று உத்தரவு போடுங்கள்.

T.V.பத்திரிக்கை எல்லா ஊடகங்களிலும் எந்த கொரானா செய்தியும் போடாதீர்கள்.

முக்கியமாக இந்த செல்போனில் எடுத்தவுடன் ஒரு அறு அறுக்கறாங்களே அதை முதலில் தயவுசெய்து நிறுத்தச் சொல்லுங்கள்.

அந்த வசனத்தை கேட்டே பல பேர் செத்துட்டான் அய்யா.

அய்யா சென்றமுறை கொரானா வில் எந்த மருந்து ஊசியில்லாது கோடிக்கணக்காணோர் குணமானார்களா?

இல்லையா வெறும் கபசுரக்குடிநீர் சிற்றரத்தை அதிமதுரம் திப்பிலி இஞ்சி சுக்கு பனங்கற்கண்டுடன் காய்ச்சி குடித்து மக்கள் மகிழ்ச்சியாக வென்றார்கள்.

தமிழ்நாடு அரசின் கலைஞர் கொண்டுவந்த சித்த மருத்துவத் துறையை பயன்படுத்துங்கள்.

நாம் வெளிநாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யலாம்.

அய்யா உண்மையில் உலகமே உங்களை திரும்பி பார்க்கும் உச்சிமுகர்ந்து பாராட்டும்.

ஒரு மரணம் கூட சம்பவிக்காது. அப்படி நிகழ்ந்தால் என்னை தூக்கிலிடுங்கள்.

தாங்கள் மிசா காலத்தில் சிறையில் கடுமையாக கொடுமை செய்யப்பட்டு உயிர் பிழைத்து எதையும் தாங்கும் மாமனிதராய் இன்று துளிர்க்கிறீர்கள்.

மாமன்னன் அக்பர் 9 வயதில் அரியணை ஏறியவர் பலபேரிடம் ஆலோசனை கேட்பாராம். ஆனால் சரியாக சுயமுடிவெடுப்பாராம்.

அதுபோன்று தாங்கள் நிச்சியம் தமிழ்நாட்டை ஏன் உலகத்தையே காக்க இந்த உத்தரவு போடுங்கள்.

மக்கள் வெந்து மடிகிறர்கள்.. மருந்து மாபியாக்களும் பல நாட்டு முக்கியஸ்தர்களும் சேர்ந்து திட்டமிட்ட சதியில் இந்தியா பிணக்காடாகிக் கொண்டிருக்கிறது.

தடுங்கள் ப்ளீஸ். இந்த மருந்துகள் உட்கொண்டபிறகுதான் கரும் பூஞ்சை நோய் மக்களை பீடித்திருக்கிறது.

தமிழகத்தில் பல நாடுகளிலிருந்து வந்து முதலீடு செய்ய பல நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

கொரானா இல்லாத் தமிழகம்.. கொத்துக் கொத்தாய் மக்கள் கையில் பணம்.

இதில் தவறிருந்தால் என்னை மன்னியுங்கள்.

மக்கள் இதை ஆதரித்தால் iSupport MAN Sooralikhan என hastake செய்யுங்கள்.

அய்யா கடைசியாக ஒரு முக்கியமான வேண்டுகோள்.

இந்த ராதாகிருஸ்ணனை (சுகாதாரத் துறை செயலாளர்) மட்டும் பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள்.

உரிமையுடன்…

உவகையுடன் தமிழக மக்கள். இந்திய மக்கள் மீண்டெழ முதலமைச்சரின் உத்தரவை மக்கள் எதிர்பார்க்கிறர்கள்.

மேலும் ஆலயங்களை
இறைவனின் இல்லங்களை பூட்டி வைக்காதீர்கள்.

கோயில் மணியோசை கேட்கட்டும்..

பெரியாரின் பெயரன் ஸ்டாலின் நீண்ட நல்லாட்சி தரட்டும்.

உண்மையுடன்…

நடிகர் இயக்குனர் மன்சூரலிகான்

கூடுதல் தகவல்…

கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தடுப்பூசி குறித்து, அவதூறு கருத்துக்களை பரப்பிய காரணத்திற்காக நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து முன் ஜாமீன் கேட்டார். அந்த மனு தள்ளுபடி ஆனது.

இதன் பின்னர் இது தொடர்பான கோர்ட் விசாரணையில்… “நிபந்தனை அடிப்படையில் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்குகிறேன்.

அவர் கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்வதற்காக தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பெயரில் ரூ.2 லட்சம் காசோலை எடுத்து வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார் நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Mansoor Ali Khan requests TN cm Stalin

ரசிகர்களிடம் பிறந்த நாள் பரிசு கேட்ட நடிகர் கார்த்தி

ரசிகர்களிடம் பிறந்த நாள் பரிசு கேட்ட நடிகர் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthiநடிகர் கார்த்தி நடித்த ‘சுல்தான்’ படம் கடந்த ஏப்ரல் மாதம் தியேட்டர்களில் ரிலீசானது. இந்த படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது.

இன்று (25.05.2021) தனது 44வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் கார்த்தி.

இதை முன்னிட்டு பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் கார்த்தி தன்னுடைய ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில்…, “அன்புத் தம்பிகள் அனைவருக்கும் வணக்கம். இந்தக் கரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவிற்கு மிகக் கடுமையாக உள்ளது.

அரசாங்கமும் மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், வசிப்பிடத்தைவிட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளைத் தவறாமல் பின்பற்றி தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

இதுவே இந்தப் பிறந்த நாளுக்கு எனக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும்”

என கேட்டுக் கொண்டுள்ளார் கார்த்தி.

Karthi requests fans on his birthday

மத்திய அரசுக்கு கட்டுப்படாத பேஸ்புக், இன்ஸ்டா ட்விட்டர் தளங்களுக்கு மே 26 முதல் தடை?

மத்திய அரசுக்கு கட்டுப்படாத பேஸ்புக், இன்ஸ்டா ட்விட்டர் தளங்களுக்கு மே 26 முதல் தடை?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

fb twitterகொரோனா காலத்தில் சமூக வலைத்தளங்கள் இல்லை என்றால் இந்த சமூகம் இயங்குமா? என்பது கேள்விக் குறியாகி உள்ளது.

அந்தளவிற்கு ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிராக பதிவுகள் பகிரப்படுவதாக அடிக்கடி புகார்கள் எழுகின்றன.

மேலும் ஓடிடி தளங்களில் ரிலீசாகும் படங்கள் வரைமுறை இல்லாமல் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.

எதிர்ப்பு அதிகமானால் இதன்பின்னர் சம்பந்தப்பட்ட தளங்கள் அந்த பதிவை நீக்கும்.

இதனையடுத்து சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த கடந்த பிப்ரவரியில் ஒழுங்குமுறை விதிகளை மத்திய அரசு வெளியிட்டது.

அதாவது… “சமூக வலைத்தளங்களில் வரும் பதிவுகள் தொடர்பான புகார்களை விசாரிக்க தனி குழு வேண்டும்.

இதில் மத்திய அமைச்சர்கள் அதிகாரிகள் இடம் பெறுவார்கள்.

இவர்கள் சமூக வலைத்தளங்களில் வரும் தவறான பதிவுகளை கவனித்து அதன் மீது நடவடிக்கை எடுக்க சொல்வார்கள்.

உடனே சம்பந்தப்பட்ட வலைத்தளங்கள் அந்த பதிவை 2 வாரங்களில் நீக்க வேண்டும்.

ஓடிடி, அமேசான், டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட தளங்களுக்கும் இந்த விதி பொருந்தும்.

இவ்வாறு மத்திய தகவல் தொழில்நுட்ப துறை மூலம் புதிய விதியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த அவகாசம் இன்றோடு முடிவடைகிறது.

மத்திய அரசின் புதிய கொள்கையை மற்ற தளங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்தியாவின் “கூ” செயலி மட்டுமே இதை ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவும் விதித்தது மத்திய அரசு. காலக்கெடு இன்று மே 25 தேதியுடன் முடிவடைகிறது.

ஆனால் மத்திய அரசின் விதிகளை அமல்படுத்த ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் 6 மாதம் அவகாசம் கேட்டிருந்தன.

ஒருவேளை மத்திய அரசு கூடுதல் அவகாசம் கொடுக்கவில்லை என்றால் இந்தியாவில் நாளை முதல் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.

நாளை விடியட்டும் பார்ப்போம்..

Twitter and FB to be blocked in india ?

நடுங்கிய படக்குழுவினருக்கு தல தந்த சர்ப்ரைஸ்..; அஜித் அண்ணி கொடுத்த ‘வலிமை’ அப்டேட் இதோ

நடுங்கிய படக்குழுவினருக்கு தல தந்த சர்ப்ரைஸ்..; அஜித் அண்ணி கொடுத்த ‘வலிமை’ அப்டேட் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Valimaiபோனி கபூரின் தயாரிப்பில் அஜீத் தற்போது நடித்துள்ள படம் ‘வலிமை’.

யுவன் இசையமைத்து வரும் இந்தப் படத்தை எச். வினோத் இயக்குகிறார்.

நாயகியாக ஹூமா குரேஷி் நடிக்க வில்லனாக கார்த்திகேயா நடிக்கிறார்.

இதில் அஜித்தின் அண்ணியாக ஜானகி என்பவர் நடிக்கிறாராம்.

அவர் வலிமை அப்டேட் கொடுத்துள்ளார்.

அதில்…

இந்த பட சூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்ற போது ஒரு நாள் இரவில் செம குளிராக இருந்தது.

படக்குழுவினரின் நடுக்கத்தை பார்த்த அஜித் தன் கேரவனில் சிக்கன் சூப் சமைத்து படக்குழுவினருக்கு தந்து நடுக்கத்தை போக்கினாராம்.

என தல புகழ் பாடுகிறார் ஜானகி அண்ணி.

Valimai actress shares hot updates

கடவுள்கள் நல்லது செய்வார்கள் என தீர்க்கமாக நம்பும் நாம்……..; மனைவி் மரணம் பற்றி அருண்ராஜா உருக்கம்..!

கடவுள்கள் நல்லது செய்வார்கள் என தீர்க்கமாக நம்பும் நாம்……..; மனைவி் மரணம் பற்றி அருண்ராஜா உருக்கம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arunraja kamaraj with wifeகடந்த வாரம் கொரோனா பாதிப்பால் தன் மனைவி சிந்துஜாவை இழந்தவர் பாடலாசிரியர் இயக்குனர் நடிகர் அருண்ராஜா காமராஜ்.

இந்த நிலையில் தனது மனைவி மரணம் குறித்து அவர் உருக்கமாக முகநூலில் பதிவு செய்திருப்பதாவது:

“என் விழிகளின் வழியே அவளின் சுவாசம் நசுக்கி எறிப்பட்டதைக் கண்ட நொடி முதல், நமைச் சுற்றி பரவிக்கிடக்கும் அப்பேராபத்தின் தீவிரம் எனையும் இறுக்கி சுழற்றி இழுத்துக்கொள்ள துடித்தது..
எத்தனை உள்ளங்கள் உதவிகள் அன்புள்ள ஆறுதல்கள் பிரார்த்தனைகள் அலைச்சல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மீட்டு விட போராடியும் நச்சு அவள் நாசியினுள் புகுந்து சுவாசத்தை உருக்குலைத்து இயக்கத்தை முடக்கி இன்று இன்னும் எத்தனை எத்தனை உயிர்கள் கிடைக்கும் என்று அவளையும் என்னை விட்டுப்பிரித்துவிட்டு சென்றது..

நச்சு பாசமறியாது, ஏழ்மையறியாது, அத்யாவசிய அநாவசியங்கள் அறியாது.. இவையெலாம் நமக்கான வாழ்க்கைக்கான அளவீடுகளே அன்றி நச்சுகிருமியின் முன் நாம் அனைவரும் சமமே.. சக மனிதர்களோடு, மனிதத்தோடு வெறுப்பு ,வன்மம் ,காழ்ப்பு இதை வளர்த்துக் கொள்ள மட்டுமே கற்றுக் கொடுக்கப்பட்டு அதையே ஓர் வாழ்வியலாக்கி வழிந்து ஓடிக்கொண்டிருக்கிறோமோ என்ற சுயபரிசோதனைகளை மேற்கொண்டோமென்றால் இந்த நச்சு நம் பொது எதிரியாகி இந்த போர்க்களம் தன் தீர்வை நோக்கி நகரலாம்.

பாதிப்பும் பங்களிப்பும் இங்கு நம்மை மட்டுமே தான் சுழலும்… இங்கு வெற்றி என்பது நம் நண்பர்கள் உறவுகள் மட்டும் காக்கப்படுவது அல்ல.. ஒவ்வொரு உயிரும் தான் நம் அரண்.. இந்த நச்சின் முமு எதிர்வினை நமக்கான ஒருங்கிணைப்பே அன்றி நமக்கான வேறெதுவும் அல்ல.. நாம் இங்கே வாழப்பிறந்தோம் , “வாழ்தல் என்றுமே யாரை எதிர்க்க வேண்டும்” என்று குறுகிவிடாமல் “எதை எதிர்க்க வேண்டும்” என்ற ஓர் புரிதலுக்குள் செல்லுமாயின் எவ்வித நச்சும் மனிதத்தையோ மனித ஒற்றுமை மேன்மையையோ எதுவும் செய்துவிட முடியாது என நான் நம்புகிறேன்.

வாழ்தல் என்றும் மக்கள் மக்களுக்காக மக்களுடனே மட்டுமே, நாம் ஒற்றுமையின்றி் ஒரு பொது எதிரியை எதிர்கொள்வது என்பது மேலும் மேலும் எதிரியை வலுப்பெற வைக்கும்… நம்மால் மனித உயிர்களை மீட்டு எடுத்து வர முடியாது. நாம் வாழ்வது நமை கொண்டாட துடிக்கும் உள்ளங்களுக்காகவே அன்றி பந்தாடத் துடிக்கும் நச்சுக்களுக்காக அல்ல..

பல்லாயிரம் பல லட்சம் பறிகொடுத்தும் இந்த எதிரியை நாம் வீழ்த்தவில்லையெனின் இந்தப்போர் நினைவில் கூட எண்ணிப்பார்க்க எதுவுமின்றி அழிவுகளாகவே எஞ்சி நிற்குமோ என்ற ஓர் அச்சம் நமை கொஞ்சமாவது செயல்பட வைத்தால் நாம் இழப்புகளை தவிர்க்கலாமோ!! அந்த அளவிற்கு ஓர் புரிதலை நமக்கு நாம் கொடுத்துக்கொள்ளும் அவசியம் உணர வேண்டுமோ!!!.. எல்லாம் இருந்தும் எதுவுமில்லாதது போல் ஓர் வெறுமையைப் பரிசளித்துவிட்டு கோடுங்கோல் புரிகின்ற ஓர் நச்சு, அதை நாம் பரிகாசமாக்க நினைத்து பலரை பறிகொடுக்கிறோமோ.

வீசும் காற்றில் விசம் பரவிவிட்டது.. இன்னும் அதை உள்ளத்தால் ஒன்றுகூடி எதிர்த்து விரட்ட முடியவில்லை எனில், நாம் தனித்தனி தீவுகளானோம் எனில் வெல்லபோவது மீண்டும் நச்சு தான் , வீழப்போவது ஒன்றாய் நின்று எதிர்க்காதவர்களாகிய நாம் தான்.. நாம் யாரை எதிர்க்க வேண்டும் என்பது மனிதனை மனிதனே எதிரியாக்கி வேடிக்கைப் பார்க்கும் மனநிலை.. இங்கே ஒட்டுமொத்த மனிதகுலத்திற்குமான பொது எதிரி வந்தும் தனித்தீவுகளாகவே வாழ்கிறோமோ என்ற ஓர்அச்சம் ஆட்கொண்டுள்ளது..

கண்ணில் படாத கடவுள்கள் நல்லது செய்வார்கள் என தீர்க்கமாக நம்பும் நாம் அதே கடவுள்கள்கூட நம் ஒற்றுமையில்லா மனநிலைக் கொண்டு நமை நச்சிடம் இருந்து காப்பாற்ற முடியாது என்பதை அறிந்தவர்களாகத்தானே இருக்கக்கூடும்.
..
தினசரி வாழ்வு என்றுமே போராட்டமாகத்தான் இங்கே பல கோடி மனிதங்களுக்கு இருந்து கொண்டு வருகிறது.. அப்போது வாழ்வு நம் வரையறுத்துக்கொண்ட அளவீடுகளுக்குள் மட்டுமே சுழன்றது.

ஆனால் இன்று அந்த அளவீடுகள் மாறி ,வாழ்வதே பெரும் சவால் என்று வந்து நின்றும் அதை நாம் பொருட்படுத்தவில்லை எனில் வீசும் காற்றில் பரவிய நச்சு நம் சுவாசம் விட்டு நீங்க நமையே பலியாக கேட்டுக்கொண்டே இருக்கும்… இன்பம் வேண்டுமானால் அவரவர் மனதிற்கு ஏற்றார் போல் மாறலாம் , இழப்பு அப்படி அல்ல , அனைத்தையும் உலுக்கிவிடும். நம் இனத்தை நாமே வேரறத்தோம் என்ற வரலாற்றை அள்ளிப் பூசிக்கொள்ள ,, அறியாமலும் துணிந்துவிட வேண்டாம்..

நமைசுற்றி பரவிய நச்சுக்காற்று நமை பொசுக்கி எறிவதற்குள் அதை வேரறுக்க குறைந்தபட்சம் நம் சார்ந்தவர்களுக்கு தவி்ர்க்க வேண்டிய , கட்டாயம் தவிர்க்கவேண்டிய காரண காரியங்களை ஒரு அடுத்த தலைமுறைக்கான புரிதலாய் எடுத்துரைத்து வழிநடத்தி நமை சுற்றி உள்ள கடைசி உயிர்மூச்சு வரை நச்சு பரவாமல் தடுத்தாலே மட்டும் இங்கு நம் கனவுகள் குறிக்கோள்கள் இன்பங்கள் வாழ்தல் மீட்டெடுக்கப்படும்..

அலட்சியங்களே நம் முதல் எதிரி.. சிலரின்இந்த சிறு அலட்சியங்கள் கூட மிகவும் அக்கறையுடன் இந்நிலையைக் கையாளுபவர்களையும் பாதிக்கும்.. நச்சுக்கிருமியின் ஆயுதம் நமது அலட்சியங்களே.. கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை பிறகு பார்த்துக் கொள்ள நமக்கு வாழ்நாள் அவகாசம் உள்ளது… கண்ணுக்கு தெரியாத எதிரியை வேரறுங்கள்.

பல்லாயிரக்கணக்கானோரின் பிரார்த்தனைகளும் அன்பும் இரங்கல்களும் சகோதரத்துவ வார்த்தைகளும் வலிபட்டு நிற்கும்.

என்னைப்போன்றோரின் வடுவிற்கு ஆறுதலே .. அதற்கு நன்றிக்கடனாய் இந்த நிலை யாரையும் ஆழ்த்தி அந்தரத்தில் விட்டுவிடக்கூடாது இழப்புகள் என்றும் ரணங்களாகிவிடக் கூடாது என்றெண்ணியே என் நன்றிப்பதிவு இது. நமை சுற்றி உள்ள ஒவ்வோர் உயிரும் சுவாசிக்கும் காற்றில் பரவிய நச்சை முற்றிலுமாக அழிக்க,நாம் தான் அதை பரவ விடாமல் தடுக்க வேண்டும்… வரும் வரை தெரியாது இழப்பின் கோரம்… அன்புடன் மன்றாடுகிறேன் … மிக மிக அத்யாவசியம் எனில் அதனை நோக்கி செல்லலாம் இல்லை எனில் உங்கள் உறவுகளை பாதுகாக்கும் அரணாக நீங்கள் தான் மாற வேண்டும் .. நான் தவறவிட்டதை இன்னும் எத்தனயோ லட்சம் பேர்கள் தவறவிட்டதை தயவு கூர்ந்து வேறு யாரும் தவறவிட வேண்டாம்.. “வெற்றிகளில் அதே போல் நாமும் வெற்றி பெறலாம்” என்ற உத்வேகம் இருக்கலாம், அதைக் கொண்டாட உறவுகள் காத்திருப்பார்கள்.. ஆனால் இழப்புகளில் போட்டி போடாதீர்கள்.
இங்கே அசட்டு தைரியங்களும், அர்த்தமற்ற பயங்களுமே உயிர்வேட்டை ஆடிக்கொண்டு இருக்கிறது.. என்னை தேற்றிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என்னையும் என் துணைவியாரையும் மீட்டு எடுக்கப் போராடிய அத்துனை முன்கள போர்வீரர்களும் என் வாழ்நாள் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

இவ்வாறு அருண்ராஜா காமராஜ் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

Arun Raja Kamaraj’s emotional post in social media

More Articles
Follows