‘ஜெய்பீம்’ பார்த்து விட்டு செங்கனியின் முன்னாள் காதலர் என்ன சொன்னார் தெரியுமா.?

‘ஜெய்பீம்’ பார்த்து விட்டு செங்கனியின் முன்னாள் காதலர் என்ன சொன்னார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ படம் நவம்பர் 2 அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த படத்தை பார்த்த அனைவருமே பாராட்டி வருகின்றனர். இது தியேட்டர்களில் வெளியாகியிருந்தால் இதை சூர்யா ரசிகர்கள் பெருமளவில் கொண்டாடி இருப்பார்கள் என தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ‘ஜெய் பீம்’ படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் சித்தார்த் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது…

‘ஜெய் பீம்’ படம் முழுவதும் அழுது கொண்டிருந்தேன். குற்ற உணர்ச்சியாகவும், அவமானமாகவும் உள்ளது.

தயாரிப்பாளர்கள் ஜோ மற்றும் சூர்யாவுக்குத் தலைவணங்குகிறேன். தன்னைப் பற்றி மட்டுமே திரையில் காட்டாத ஒரு படத்தை ஒரு பெரிய நடிகரால் எடுக்க முடியும் என சூர்யா நிரூபித்துகாட்டியுள்ளார்.

இயக்குநர் த.செ.ஞானவேலுக்கு நன்றி. நடிகை லிஜோமோல் ஜோஸ் தன் தோள்களில் படத்தை தாங்கியிருக்கிறார். ஒட்டுமொத்தப் படமும் அவர் தோளில் அமர்ந்துள்ளது.

செங்கனி வாழ்க்கையை அவரது கண்களே சொல்கின்றன. வாழ்த்துக்கள் மணிகண்டன். ஒவ்வொரு நடிகரும், படக்குழுவினரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.

‘ஜெய் பீம்’ படத்தை நாம் எடுத்தது மிகவும் பெருமையாக இருக்கிறது. இருளர் பழங்குடியின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை விழிப்புணர்வை இந்தப் படம் ஏற்படுத்தும். என்னவொரு வெற்றி. ஜெய்பீம் என்றால் அன்பு. ஜெய்பீம் என்றால் ஒளி”.

இவ்வாறு சித்தார்த் பதிவிட்டுள்ளார்.

எல்லாம் சரி.. செங்கனியின் முன்னாள் காதலர்? என தலைப்பில் உள்ளதே என்றுதானே கேட்கிறீர்கள்..

மலையாளத்தில் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் இந்த லிஜோமோல் ஜோஸ்.

இவர் தான் தமிழில ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்ற படத்தில் சித்தார்த்துக்கு காதல் மனைவியாக நடித்திருந்தார். அதாவது ஜி.வி.பிரகாஷுக்கு அக்காவாக நடித்து பாராட்டு பெற்றவர்.

சரியாக ஒரு மாதத்திற்கு முன்புதான் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி அருண் ஆண்டனி என்பவரை லிஜோமோல் ஜோஸ் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கேரளாவில் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது.

(இப்போ சொல்லுங்க லிஜா மோலின் முன்னாள் ரீல் கணவர் சித்தார்த் தானே)

Sengani ex lover praises jai bhim movie

sivappu manjal pachai

10 மாதங்களில் 30 நகரங்கள்..; அஜித்தின் BIKE TOUR MAP வரைப்படம் இதோ

10 மாதங்களில் 30 நகரங்கள்..; அஜித்தின் BIKE TOUR MAP வரைப்படம் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் அடுத்தாண்டு 2022 பொங்கலுக்கு ரிலீசாகிறது.

இந்த படத்தில் தன் பணிகளை முடித்து கொடுத்துவிட்டு பைக்கில் இந்தியா முழுவதும் சுற்றி வருகிறார்.

அண்மையில் தாஜ்மஹால் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம், அதன்பின்னர் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகா எல்லை, அங்குள்ள பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இவை அனைத்தும் சமூகவலைதளங்களில் வைரலாகின.

ராஜஸ்தான் அருகே ஒரு மலையின் உச்சியில் அஜித் நிற்கும் படங்கள் நமக்கே மரண பயத்தை உண்டாக்கியது.

இந்த நிலையில் தல அஜித்தின் நண்பரும், சக பைக் ரைடருமான சுப்ரஜ் வெங்கட் என்பவர் தன் டிவிட்டரில் பதிவில் அஜித் பயணம் செய்த இந்தியா ரூட் வரைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் கடந்த 10 மாதங்களாக 3 கட்டமாக அஜித் சென்ற 30 நகரங்களின் வரைப் படத்தையும் எந்த வழியாக அந்த ஊர்களை அடைந்தனர் என்பதையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அஜித் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Thala Ajith’s bike tour map goes viral

‘அண்ணாத்த’ அணி இறங்கி வந்தும் அடங்காத நயன்தாரா..; அடுத்தவன் கெட்டால் நமக்கென்ன? அதானே..

‘அண்ணாத்த’ அணி இறங்கி வந்தும் அடங்காத நயன்தாரா..; அடுத்தவன் கெட்டால் நமக்கென்ன? அதானே..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் இமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த.

இதில் ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சூரி, பாண்டியராஜன், சத்யன், சதீஷ், வேலராமமூர்த்தி, ஜெகபதிபாபு, அபிமன்யுசிங், லிவிங்ஸ்டன், கொளப்புள்ளி லீலா, அர்ஜய், கபாலி விஸ்வந்த், பாலா, ரெடின் கிங்கிஸ்லி, (மறைந்த) நடிகர் தவசி, ஜார்ஜ் மரியன் என கோடம்பாக்கத்தின் பாதி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படம் நாளை தீபாவளிக்கு வெளியாகவுள்ளதால் இந்த படத்தின் புரோமோசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சன் டிவியில் நாளை மதியம் அண்ணாத்த சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இதில் இயக்குனர் சிவா, ஒளிப்பதிவாளர் வெற்றி, இசையமைப்பாளர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நடிகர் நடிகைகளில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி, பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இதன் புரோமோக்கள் ஜாலியாக உள்ளது.

ஒருவேளை ரஜினிகாந்த் உடல்நிலை நன்றாக இருந்தால் அவர் கூட கலந்துக் கொண்டு இருப்பார் போல. எந்திரன் மற்றும் 2.0 படத்திற்காக டிவி புரோமோக்களில் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டார். (அது தனி இண்டர்வியூ என்பது குறிப்பிடத்தக்கது.)

ஆனால் இந்த நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்துக் கொள்ளவில்லை.

நடிகைகளில் குஷ்பூ மீனாவுக்கு இல்லாத ரசிகர் பட்டாளாமா? நயன்தாராவுக்கு இருக்கிறது?

குஷ்பூக்கு கோயில் கட்டிய கூட்டம் கூட தமிழ்நாட்டுல இருக்காங்க. அப்படியிருக்கையில் இத்தனை பிரபலங்கள் கலந்துக் கொண்டும் நயன்தாரா கலந்துக் கொள்ளாதது என்னவோ.?

அண்மையில் நயன்தாரா தயாரித்து நடித்த நெற்றிக்கண் பட புரோமோசன் நிகழ்ச்சிகளில் விஜய் டிவிக்காக கலந்துக் கொண்டார்.

சொந்த காசு போட்டு படம் எடுத்தா மட்டும் நயன் கலந்துக் கொள்வாரா? அதுசரி.. அடுத்தவன் எக்கேடு கெட்டு போனா நமக்கென்ன? இதான் நயன்தாரா பாலிசி போல…

தனக்கு வந்தா மட்டும் ரத்தம்.. அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி கதைதான்..

Nayanthara’s no promotion policy creates controversy

கோலிவுட்டை குழப்பிய கௌதம் மேனன்.; அடங்காத செல்வனாக மாறிய ‘அன்புசெல்வன்’

கோலிவுட்டை குழப்பிய கௌதம் மேனன்.; அடங்காத செல்வனாக மாறிய ‘அன்புசெல்வன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் குமார் இயக்கத்தில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவாகும் ‘அன்புசெல்வன்’ படத்தின் முதல் பார்வை விவகாரம் குறித்த விளக்கம்

அன்புச் செல்வன் படக்குழுவினருக்கு இடையே உள்ள சில பிரச்சனைகள் காரணமாக, இயக்குநர் கெளதம் மேனன் ஒரு அதிர்ச்சியான பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த லிங்க் இதோ…

JUST IN நான் நடிக்காத படத்தில் எனக்கே போஸ்டரா.? ரஞ்சித்திடம் கௌதம் மேனன் கேள்வி. https://www.filmistreet.com/cinema-news/gautham-menons-shocking-reaction-to-his-new-film-poster/

செவண்டி எம்எம் ஸ்டுடியோவின் தயாரிப்பாளர் எம்.மகேஷ், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலையீட்டின் மூலம் இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்பார் என தெரிவித்துக் கொள்கிறோம் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

கவுதம் வாசுதேவ் மேனனின் எபிசோடுகள் அடங்கிய இந்த படத்தின் முதல் ஷெட்யூல் ஏற்கனவே முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த லிங்க் இதோ…

https://twitter.com/seventymmstudio/status/1455854667934535684?s=12

Reason behind Gautham Menon’s reaction on Anbu Selvan first look

தொடரும் ரஜினியிசம் : மாயாஜாலில் மட்டும் 90 காட்சிகள்..; அகிலளவில் அசரவைக்கும் அண்ணாத்த ரிலீஸ்

தொடரும் ரஜினியிசம் : மாயாஜாலில் மட்டும் 90 காட்சிகள்..; அகிலளவில் அசரவைக்கும் அண்ணாத்த ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் இமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த.

இதில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி, பாண்டியராஜன், சத்யன், சதீஷ், வேலராமமூர்த்தி, ஜெகபதிபாபு, அபிமன்யுசிங், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பாதி கோடம்பாக்கமே நடித்துள்ளது.

இப்படம் நாளை தீபாவளிளை முன்னிட்டு தமிழ், தெலுங்கு மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீசாகிறது.

உலகளவில் 1195 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் 620க்கும் மேற்ப்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது.

இதனிடையில் இந்த படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் ஏரியா வாரியாக எத்தனை தியேட்டர்களில் வெளியாகிறது என்ற விவரங்களை அடுத்தடுத்து வெளியிட்டு கோலிவுட்டை ஆச்சரியப்படுத்தி வருகிறது.

அதன்படி..

கோவை 80 தியேட்டர்கள், செங்கல்பட்டு ஏரியாக்களில் 75 தியேட்டர்கள்.

திருநெல்வேலி, கன்னியாகுமரி ஏரியாவில் 30 தியேட்டர்களில் வெளியாகிறது.

சேலம், மதுரை, ராமநாதபுரம் ஏரியாக்களில் 70 தியேட்டர்களிலும், தென் ஆற்காடு ஏரியாவில் 50க்கும் அதிகமான தியேட்டர்களிலும், வட ஆற்காடு ஏரியாவில் 42க்கும் அதிகமான தியேட்டர்களிலும் வெளியாகிறது.

சென்னை ஏரியாவில் 32 தியேட்டர்களில் வெளியாகிறது.

சென்னை கடற்கரை சாலையில் உள்ள மாயாஜால் திரையரங்கில் நாளை மட்டும் 84-90 காட்சிகளில் திரையிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினி அரசியலுக்கு வரவில்லை என அறிவித்துவிட்டார். இதனால் அவர் படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்காது.

அரசியலை வைத்து தான் ரஜினி தன் படங்களுக்கு விளம்பரம் தேடினார் என என பலரும் சொன்ன நிலையில் உலகம் முழுவதும் இத்தனை தியேட்டர்களில் ஒரு படம் ரிலீஸ்? அதுவும் கொரோனா காலத்திலும் இப்படி அரங்கு நிறைந்த காட்சிகளா? என வியக்க வைக்கிறார் இந்த அண்ணாத்த.

ஆக 45 ஆண்டுகளாக ரஜினியிசம் இன்னும் தொடர்ந்து வருவது இங்கே கவனிக்கத்தக்கது.

Rajinikanth’s Annaatthe TN theatre release details

திருப்பதிக்கு நடந்தே சென்று நடிகர்கள் விஷால்-ரமணா தரிசனம்

திருப்பதிக்கு நடந்தே சென்று நடிகர்கள் விஷால்-ரமணா தரிசனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, மிர்ணாளினி உள்ளிட்டோர் நடித்துள்ள எனிமி திரைப்படம் நாளை நவம்பர் 4 தீபாவளியை முன்னிட்டு ரிலீசாகிறது.

இந்த நிலையில் நேற்று இரவில் கீழ்திருப்பதியிலிருந்து மேல்திருப்பதிக்கு மலையில் நடந்தே சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர் நடிகர்கள் விஷால் ரமணா.

அதன்படி இன்று அதிகாலை திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர்.

கொரோனா பிரச்னையால் கடந்தாண்டு வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லையாம். எனவே தற்போது தனது வேண்டுதலையும், நேர்த்திகடனையும் செலுத்தியிருக்கிறார் விஷால்.

விஷால் தரிசனம் செய்துள்ளபோது நடிகையும், ஆந்திர மாநில எம்எல்ஏவுமான ரோஜா செல்வமணியும் திருப்பதி வந்துள்ளார்.

இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.

Vishal visits Tirupati ahead of his film Enemy’s release tomorrow on Diwali

More Articles
Follows