தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் விதித்தது.
இதனையடுத்து மறைந்த ஜெயலலிதாவைத் தவிர மீதமுள்ள 3 பேரும், 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
தற்போது சசிகலாவின் தண்டனைக் காலம் நிறைவு பெறவுள்ளது.
எனவே சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார்? என்று கேள்வி எழுந்தது.
விரைவில் விடுதலையாகவுள்ள நிலையில் கடந்த மாதம் அபராத தொகையை செலுத்தினார் சசிகலா.
அதன்படி ஜனவரி 27 காலை 10 மணி அளவில் சசிகலா விடுதலை செய்யப்படுகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது கர்நாடக சிறைத்துறை.
இந்தநிலையில் நேற்று ஜனவரி 20ஆம் தேதி சசிகலாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
உடனடியாக சிறை வளாகத்திலுள்ள டாக்டர்கள் அவருக்கு சிகிச்சையளித்தனர்.
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது என தகவல்கள் வந்துள்ளன. இந்த செய்திகளை நம் தளத்தில் பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று ஜனவரி 21ஆம் தேதி சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
வருகிற 27ம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
அவருக்கு கர்நாடகா விக்டோரியா அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடைபெற்றது
காய்ச்சல், நுரையீரல் தொற்று இருந்ததால் சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாம்.
கொரோனா உறுதியானதால் குறைந்தபட்சம் ஒருவாரம் சசிகலா மருத்துவமனையில் இருப்பார் எனத் தகவல் வந்துள்ளது.
Sasikala tests positive for COVID19