தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சமுத்திரகனி, சசிகுமார் இணைந்துள்ள நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ரிலீசுக்கு ரெடியாக உள்ளது
முதல் பாகத்தில் நடித்த சசிகுமார், பரணி, நமோ நாராயணா இதிலும் நடித்துள்ளார்கள் இவர்கள் தவிர அஞ்சலி, அதுல்யா, திருநங்கை நமீதா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் பாடல் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் சமுத்திரகனி பேசியதாவது…
போராளி படத்திற்கு பிறகு நானும், சசிகுமாரும் தனித்தனி பாதையில் பயணம் செய்தோம்.
நாடோடிகள் 2ம் பாகம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து கதை தயார் செய்தே பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
சரியான வாய்ப்பு இப்போது தான் அமைந்துள்ளறது.
இன்றைய அரசியல் அவலம், சமூக சூழல் என எல்லா அம்சங்களும் படத்தில் இருக்கிறது. நிச்சயம் இந்த படம் அதிர்வலைகளை உண்டாக்கும்.
7 பேர் விடுதலைக்காக தீக்குளித்த செங்கொடியின் பெயரில் அஞ்சலி, சமூக போராளியாக நடித்திருக்கிறார்.
சசிகுமார் ஜீவா என்கிற போராளியாக நடித்திருக்கிறார். திருநங்கை நமீதா வழியாக அந்த மக்களின் வேதனைகள் சொல்லப்படுகிறது.”
என பேசினார் சமுத்திரக்கனி.
Samuthirakani talks about Nadodigal 2 and team effect