தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய்பல்லவி.
இவர் சூர்யாவுடன் நடித்துள்ள என்ஜிகே திரைப்படம் நாளை ரிலீசாகவுள்ளது.
இந்நிலையில் இவர் ரூ. 2 கோடி சம்பளம் கொடுக்க வந்த ஒரு விளம்பரத்தில் நடிக்க மறுத்துள்ளார்.
அது பற்றி அவர் கூறியதாவது…
நான் ஒரு டாக்டர் என்பதால் கெமிக்கல் கொண்டு தயாரிக்கப்படும் அழகு பொருட்களெல்லாம், உடலுக்கு எவ்வளவு ஆபத்தானவை என்பது நன்றாகவே தெரியும்.
அப்படியிருக்கும்போது, முக அழகு கிரீம் ஒன்றில் நடிக்க கேட்டனர்.
பணத்துக்காக, உடலுக்கு ஆபத்தான ஒரு விஷயத்துக்கு நாமே ஏன் மாடலாக இருக்க வேண்டும் என நினைத்தேன்.
எனவே விளம்பரத்தில் நடிக்க மறுத்து விட்டேன். எனக்கு இரண்டு கோடி ரூபாய் தருவதாகச் சொன்னார்கள்.
எனக்கு வாழ்க்கையில் பெரிய தேவைகள் இல்லை. அதனால், பணம் ஒரு பொருட்டல்ல.“ என தெரிவித்துள்ளார்.
Sai Pallavi rejects fairness advertisement worth Rs 2 crore