தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் இளைஞர்களுடன் சில புல்லுருவிகள் கலந்துவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனால் இந்த புரட்சி போராட்டம் முடிவு பெறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர் பொதுமக்கள்.
இந்நிலையில் மக்களின் நன்மதிப்பை பெற்ற, கலெக்டர் சகாயம் தன் கருத்தை பதிவிட்டுள்ளார். அதில்…
இனி எந்த நடிகரையும், செலிபிரட்டிகளையும் உள்ளே அனுமதிக்காதீர்கள் …
அது நடிகர் விவேக்கோ, ஹிப் ஹாப் ஆதியோ, யாராக இருந்தாலும் சரி … உங்களுடன் சரிசமமாகப் பேச அனுமதிக்காதீர்கள்.
இந்த நடிகர்கள், எவரையும் விட மாணவச் செல்வங்களாகிய நீங்களே உயர்ந்தவர்கள்.
வெற்றிக்கு மிக அருகில் வந்து விட்டீர்கள்.
காளையை,காட்சிப்படுத்தும் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியவுடன்,நீங்கள் வெற்றியடைந்தவர்களாவீர்கள்.
அதுவரை மார்க்கண்டேய கட்ஜுவோ,நடிகர்களோ உங்களுள் புகுந்து குழப்ப விடாதீர்கள்..
கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இது போன்றதொரு மாபெரும் போராட்டம் நடந்ததில்லை.
தமிழக இளைஞர்களாகிய நீங்களே எதிர்காலத்தில் இந்த உலகிற்கே வழிகாட்டியாக இருக்கப் போகிறீர்கள்..
என்றும் வெற்றி இனி உங்கள் வசம்…
தோழமையுடன் – சகாயம் IAS
என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Sagayam IAS advice to Students Jallikattu Protest