தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் விஜய் பெயரில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியை தேர்தல் ஆணையத்தில் அவரது தந்தை எஸ்ஏசி பதிவு செய்துள்ளார்.
கட்சி தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என பதிவு விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் இதை நடிகர் விஜய் மறுத்து ஒரு விளக்கம் அளித்திருந்தார்.
அப்பா தொடங்கியுள்ள அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடா்பும் கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடா்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்“
இவ்வாறு நடிகர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்கள் தீடீரென எஸ்ஏ. சந்திரசேகரை சந்தித்து இந்த கட்சியின் அவசியம் என்ன? இது விஜய்க்கு தெரியாதா? என்று பல கேள்விகளை அடுக்கினர்.
எஸ்ஏசி அளித்த பேட்டியில்…
நான் உங்களை அழைக்கவில்லை. நீங்களாக வந்து விட்டீர்கள். எனக்கு பேச நேரம் இல்லை என்றே தொடங்கினார்.
விஜய்க்கும் எனக்கும் கருத்து வேறுபாடு இல்லை. மற்றவர்களின் கற்பனைக்கு பதில் சொல்ல முடியாது.
கட்சி தொடங்கியது விஜய்க்கு தெரியலன்னு அவர் சொல்வாரு. 1993ல் அவரது பெயரில் ரசிகர் மன்றமாக ஆரம்பமானது. பின்னர் நற்பணி மன்றமாக மாறியது. பிறகு மக்கள் இயக்கமாக மாறியது.
அரசியல் கட்சி எனக்கு அவசியம். ஆனால் இப்போதைக்கு அதற்கான அவசியத்தை சொல்ல எனக்கு நேரமில்லை.
நிறைய மைக் முன்னாடி பேசி எனக்கு பழக்கமில்லை. இப்போ டைம் இல்லை. தனியாக வாருங்கள் சொல்றேன்..
இவ்வாறு எஸ்ஏ சந்திரசேகர் பதிலளித்தார்.
SA Chandrasekar reaction for Acto Vijays statement