தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல இசைக்கலைஞர் (வில்லிசை கலைஞர்) 94 வயதான சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வின் காரணமாக சென்னை கே.கே. நகரில் காலமானார்.
அவரின் வாழ்க்கை பதிவு…
இவர் 1928 ம் வருடம் திருநெல்வேலி சத்திர புதுக்குளத்தில் பிறந்தார்.
இவர் சுதந்திர போராட்ட காலத்தில் மக்களிடையே ஆன்மிகம், தேச பக்தியை வளர்த்தவர்.
மேலும் 40 வருடங்களாக வில்லுப்பாட்டு கச்சேரியினை நடத்தி வந்தார்.
இவர் வில்லுப்பாட்டினை மறைந்த பழம்பெரும் திரைப்பட நடிகர் என்.எஸ் கிருஷ்ணனிடம் கற்றார்.
இவர் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும் எளிய வகையில் வில்லுப்பாட்டின் வாயிலாக வழங்கினார்.
மேலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தன் வில்லுப்பாட்டினால் மக்களை கவர்ந்தவர்.
1975ம் ஆண்டு கலைமாமணி விருதும், சங்கீத நாடக அகாடமி விருதினையும் பெற்றார்.
2021ல் மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ விருதினை வழங்கி கவுரவித்தது.
நடிகர் நாகேஷின் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு நகைச்சுவை பகுதிகளை சுப்பு ஆறுமுகம் எழுதியுள்ளார்.