தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரசின் தொற்றின் பரவல் அதிகரித்து வருவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ஒரு பக்கம் இரவு நேர ஊரடங்கும் மறுபக்கம் தடுப்பூசி பணிகளும் நடைப்பெற்று வருகிறது.
அனைவரும் தடுப்பூசி போட்டு கொட்டில் சமூக நோய் எதிர்ப்பாற்றால் உருவாகும் எனவும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும் எனவும் மருத்துவ வல்லுனர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
வருகிற மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அனுமதி உத்தரவு போட்டுள்ளது.
அதன்படி இன்று ஏப்ரல் 28 மாலை 4 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என, அரசு அறிவித்துள்ளது.
தற்போது முன்பதிவும் துவங்கியுள்ளது.
இதற்கு, https://www.cowin.gov.in என்ற, இணையதளத்திற்குள் சென்று, ‘ரிஜிஸ்டர் மை செல்ப்’ என்பதை அழுத்த வேண்டும்.
அதன்பின்னர், மொபைல் போன் எண் பதிவு செய்து, பெயர், வயது உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
ஆதார் எண் உள்ளிட்ட, அரசு அங்கீகரித்த அடையாள அட்டை எண்ணை பதிந்து, தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்..
எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வோம்.
*ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு..*
Registration for 18+ to begin on CoWin Portal