அனைவரும் தடுப்பூசி போட்டால் சமூக நோய் எதிர்ப்பாற்றால் உருவாகும்..; ரிஜிஸ்டர் செய்ய வேண்டிய இணையதளம் இதோ

அனைவரும் தடுப்பூசி போட்டால் சமூக நோய் எதிர்ப்பாற்றால் உருவாகும்..; ரிஜிஸ்டர் செய்ய வேண்டிய இணையதளம் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரசின் தொற்றின் பரவல் அதிகரித்து வருவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஒரு பக்கம் இரவு நேர ஊரடங்கும் மறுபக்கம் தடுப்பூசி பணிகளும் நடைப்பெற்று வருகிறது.

அனைவரும் தடுப்பூசி போட்டு கொட்டில் சமூக நோய் எதிர்ப்பாற்றால் உருவாகும் எனவும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும் எனவும் மருத்துவ வல்லுனர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

வருகிற மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அனுமதி உத்தரவு போட்டுள்ளது.

அதன்படி இன்று ஏப்ரல் 28 மாலை 4 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என, அரசு அறிவித்துள்ளது.

தற்போது முன்பதிவும் துவங்கியுள்ளது.

இதற்கு, https://www.cowin.gov.in என்ற, இணையதளத்திற்குள் சென்று, ‘ரிஜிஸ்டர் மை செல்ப்’ என்பதை அழுத்த வேண்டும்.

அதன்பின்னர், மொபைல் போன் எண் பதிவு செய்து, பெயர், வயது உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.

ஆதார் எண் உள்ளிட்ட, அரசு அங்கீகரித்த அடையாள அட்டை எண்ணை பதிந்து, தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்..

எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வோம்.

*ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு..*

Registration for 18+ to begin on CoWin Portal

அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்

அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா 2வது அலை பல உயிர்களை கொன்று குவித்து வருகிறது.

இதனால் இந்திய நாடே செய்வதறியாமல் திணறி வருகிறது.

மஹாராஷ்டிரா, குஜராத், சட்டிஸ்கர், டெல்லி, மத்திய பிரதேசம், தமிழகம் என பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை நீடித்து வருகிறது.

மேலும் அரசு மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த திலையில், நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களும், முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

VMI provide oxygen cylinders to corona patients in TN

அசுரனை அடுத்து தெலுங்கில் ரீமேக்காகும் ‘கர்ணன்’.; தனுஷ் கேரக்டரில் இவரா.?

அசுரனை அடுத்து தெலுங்கில் ரீமேக்காகும் ‘கர்ணன்’.; தனுஷ் கேரக்டரில் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bellamkonda srinivasதாணு தயாரிக்க வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் ‘அசுரன்’.

இதன் தெலுங்கு ரீமேக்கை சுரேஷ் புரோடக்‌ஷன்ஸோடு இணைந்து தயாரித்திருக்கிறார் தாணு.

‘நாராப்பா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ் நடித்திருக்கிறார்.

இந்தாண்டு மே 14ல் ரிலீசாகும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இதன் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தாணு & தனுஷ் வெற்றிக் கூட்டணியின் அடுத்த படமான் ‘கர்ணன்’ படமும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாம்.

இதற்கான உரிமையை தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் இருந்து தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷ் என்பவர் பெற்று இருக்கிறாராம்.

நாயகனாக அவரது மகன் பெல்லம்கொண்டா சாய் ஶ்ரீநிவாஸ் நடிக்கவிருக்கிறாராம்.

இந்த நாயகன் இதற்கு முன்பே ‘சுந்தரபாண்டியன்’, ‘ராட்சசன்’ ஆகிய படங்களின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருக்கிறார்.

தற்போது, ‘கர்ணன்’ தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார்.

இப்பட இயக்குநர் யார் என்பது விரைவில் முடிவாகும்.

இதுவரை 8 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் சாய் ஶ்ரீநிவாஸ்.

மேலும் ராஜமெளலி இயக்கிய ‘சத்ரபதி’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து பாலிவுட்டிலும் அறிமுகமாகவுள்ளார் சாய் ஶ்ரீநிவாஸ் என்பது கூடுதல் தகவல்.

Karnan telugu remake updates

தனுஷ் முடிவையும் மீறி ‘ஜகமே தந்திரம்’ பட ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த புரொடியூசர்

தனுஷ் முடிவையும் மீறி ‘ஜகமே தந்திரம்’ பட ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த புரொடியூசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jagame Thandhiramகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’.

ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வெகுநாட்களாக இப்பட ரிலீஸ் குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இறுதியாக ஜுன் 18ல் ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் என உறுதி செய்துள்ளார் படத்தயாரிப்பாளர்.

‘ஜகமே தந்திரம்’ ஓடிடியில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியானபோது, தனுஷ் & கார்த்திக் சுப்புராஜ் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இதனால் தனுஷ் – தயாரிப்பாளர் சசிகாந்த் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Jagame Thandhiram release date announced

வைரமுத்துவின் 100 பாடல்களை தொடர்ந்து வெண்பா-வின் அடுத்த அதிரடி ‘டீல் ல வுடாத’

வைரமுத்துவின் 100 பாடல்களை தொடர்ந்து வெண்பா-வின் அடுத்த அதிரடி ‘டீல் ல வுடாத’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கற்றது தமிழ்’, ‘சிவகாசி’, ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் வெண்பா.

இவர் குழந்தை பருவத்தில் தனியார் டிவி..க்களில் விஜே-ஆக பணிபுரிந்துள்ளார்.

தற்போது வளர்ந்து குமரியான பிறகு ஹீரோயினாக பல படங்களில் நடித்து வருகிறார்.

‘காதல் கசக்குதய்யா’, ‘பள்ளி பருவத்திலே’, ‘மாயநதி’ உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

தற்போது நந்தா பெரியசாமி இயக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் கௌதம் கார்த்திக்கின் தங்கையாக நடித்து வருகிறார்.

இவருடன் சிவாத்மிகா, சரவணன், சேரன், சிங்கம் புலி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அண்மையில் வெளியான ‘அல்வா’ என்ற குறும்படத்திலும் நடித்திருந்தார் வெண்பா.

விரைவில் வெளியாகவுள்ள ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் ஜிவி. பிரகாஷ் உடன் நடித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்துவின் ‘நாட்படு தேறல்’ பாட்டு உலகின் முதல் முயற்சியாக உருவாகியுள்ளது. இதல் 100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள், 100 இயக்குநர்கள் என்ற திட்டத்தோடு 100 பாடல்களைக் கவிஞர் வைரமுத்து உருவாக்கியுள்ளார்.

தொலைக்காட்சித் தொடர்களைப்போல இது வாரம் ஒருமுறை ஒளிபரப்பாகும் பாட்டுத் தொடராகும். ஏப்ரல் 18 முதல் ஒவ்வொரு ஞாயிறும் கலைஞர் தொலைக்காட்சி, இசையருவி இரண்டிலும் நாட்படு தேறல் ஒளிபரப்பாகி வருகிறது.

‘இந்த இரவு தீர்வதற்குள்ளே… என்று தொடங்கும் ஒரு பாடல் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது. இதில் வெண்பா நாயகியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் ‘டீல் ல வுடாத’ என்ற அடுத்த இசை ஆல்பத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் வெண்பா.

பீட்டர் என்பவர் நாயகனாக நடிக்க லோகித் ஜித் இயக்கியுள்ளார்.

இப்பாடலின் டீசர் நாளை வெளியாகவுள்ள நிலையில் முழுப்பாடல் வீடியோ ஏப்ரல் 30ல் ரிலீசாகிறது.

Venbas 2nd album song titled Deel la udatha Teaser from tomorrow

IMG_20210427_192504

‘அடங்காமை’ பட மோஷன் போஸ்டரை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளியிட்டார்

‘அடங்காமை’ பட மோஷன் போஸ்டரை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

adangaamai motion posterதிருக்குறள் கருத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அடங்காமை’

நட்பில் மறைந்துள்ள விரோதத்தையும் துரோகத்தையும் படம் பிடித்துக் காட்டும் வகையில் உருவாகி வரும் திரைப்படம் ‘ அடங்காமை’

இப்படத்தை வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன் .புலேந்திரன்,ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரிக்கிறார்கள்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பவர் ஆர் கோபால். இவர், திரையுலகில் 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றுள்ளவர். தன் முதல் படமாக ‘மங்களாபுரம்’ என்ற படத்தை இயக்கியவர். இது இவருக்கு இரண்டாவது படம்

இலங்கையைச் சேர்ந்த சரோன் நாயகனாக நடித்திருக்கிறார். ஆந்திராவில் பிரபல விளம்பர மாடலான பிரியா கதாநாயகி. மற்றும் யாகவ் முரளி, கார்த்திக் கண்ணா,முகிலன்
முக்கியமான பாத்திரம் ஏற்றுள்ளார்கள்..
சிறுவயதிலிருந்து ஒன்றாகப் பழகிய மூன்று நண்பர்கள் ஆளுக்கொரு ஒரு லட்சியத்தோடு வளர்கிறார்கள் .அதன்படி அவர்களில் ஒருவன் டாக்டராகவும் இன்னொருவன் நடிகனாகவும் மற்றொருவன் அரசியல்வாதியாகவும் மாறுகிறார்கள்.

டாக்டரை வளர்த்தெடுத்த பாதிரியார் மர்மமாகக் கொலை செய்யப்படுகிறார் .அதுமட்டுமல்ல டாக்டரின் காதலியின் அக்காவும் கொலை செய்யப்படுகிறாள். கொலைக்கான மர்மம் புரியாமல் குழம்பிப் போய் நண்பர்களின் உதவியை நாடுகிறான் மூவரில் ஒருவனான டாக்டர். ஆனால் உடனிருக்கும் அவர்களால்தான் இந்தச் சதி நடந்துள்ளது என்று பிறகே தெரிய வருகிறது .அவர்களை எப்படிப் பழிவாங்குவது ?பழகிய நட்பில் பழிவாங்குதல் அறமல்ல என்று அவன் அஞ்சித் தயங்குகிறான்; யோசிக்கிறான். ஆனால் அவன் எதிர்பார்த்த தீர்ப்பு எதிர்பாராத வகையில் இயற்கை மூலம் கிடைக்கிறது .இப்படிப் போகிறது ‘அடங்காமை’ படத்தின் கதை.

படம் பற்றி இயக்குநர் கோபால் பேசும்போது ,

“திருக்குறள் வாழ்வியல் நெறிகளை இரண்டே வரிகளில் கூறும் அற்புதமான நூல். அதிலும் குறிப்பாக ‘அடக்கமுடைமை’ அதிகாரத்தில் முதலில் வரும் ‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் ‘என்ற குறள் 100 பேருந்துகளில் 95 பேருந்துகளிலாவது இடம்பெற்றிருக்கும் .ஏன் இந்த வாழ்வியல் சிந்தனை மட்டும் எல்லாவற்றிலும் இருக்கிறது என்பதை யோசித்த போது அதை வைத்து
ஒரு கதையை உருவாக்கினேன். அதுதான் இப்போது படமாக உருவாகியிருக்கிறது.

இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் 27ஆம் தேதி வெளியாகிறது. அதேநேரத்தில் அடக்கமாக இருத்தல் இப்போதைய கொரோனா காலத்தில் மிகவும் வலியுறுத்தப்படும் ஒன்றாகும். அதனால்தான் இப்போது வீடுஅடங்காமையே அத்தனை துன்பங்களுக்கும் காரணம் என்று எச்சரித்து ஊரடங்கு போட்டு அரசாங்கமே பிரச்சாரம் செய்கிறது.

எனவே அடங்காமையை எச்சரித்து கொரோனா விழிப்புணர்வு குறித்து ஒரு மோஷன் போஸ்டரையும் நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். அதில் கைகள் தொடுதல் மூலம் நோய் வரும் அபாயத்தைக் கூறி

‘நிலைமை அறிவோம்;மடமை தவிர்ப்போம் ;அரசின்அறிவுரை ஏற்போம்’ என
எச்சரித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம்.

இந்த’ அடங்காமை’ படம் வேகமாக வளர்ந்துவருகிறது”என்கிறார் இயக்குநர்.

தயாரிப்பாளர்களில் ஒருவரான பொன் .புலேந்திரன் டென்மார்க்கில் இருந்து இந்த படத்தயாரிப்பில் பங்கேற்று இருக்கிறார். தமிழ் திரையுலகின் மீது அபிமானமும் ஆர்வமும் கொண்ட இவர், இப்படத்தினைத் தொடர்ந்து மேலும் படத் தயாரிப்பில் ஈடுபட இருக்கிறாராம் .

திருக்குறளை மையமாக வைத்து உருவாகும் இத் திரைப்படம் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகிறார் புலேந்திரன்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு P.G. வெற்றி, பாடல் இசை கியூரன் மென்டிசன்., திரை இசை M.S ஸ்ரீகாந்த், எடிட்டிங் துரைராஜ், பாடல்கள் ஏ.ரமானிகாந்தன், கெறால்ட் மென்டிசன்,
நடனம் சீதாபதிராம். சண்டைக்காட்சிகள் முரளி, வசனம் ஏ.பி.சிவா.’அடங்காமை ‘ இறுதிக்கட்ட வேலைகளுடன் வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்த ‘அடங்காமை’ படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகரன் இன்று வெளியிட்டார்.அவர் பேசும்போது,

” பொதுவான வழக்கமாகப் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் படத்தின் டைட்டிலை மட்டும் மோஷன் போஸ்டர் ஆக வெளியிடுவார்கள். இதில் படத்தின் பெயருடன் கொரோனா பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த மோஷன் போஸ்டரை
உருவாக்கியிருக்கிறார்கள். இப்போது மக்களுக்குத் தேவை விழிப்புணர்வு தான். இந்த போஸ்டரை வெளியிட்டதன் மூலம் நானும் அந்த விழிப்புணர்வுப் பணியில் பங்கு எடுத்துக் கொள்கிறேன் “என்று கூறிப் படக்குழுவினரை வாழ்த்தினார்.

Director SAC released Adangaamai motion poster

More Articles
Follows