தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராஜா தேசிங்கு இயக்கியுள்ள ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’ பட இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசுகையில்..
“ஸ்ரீ சபரி ஐயப்பன் திரைப்பட இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கும் அனைத்து பெருமக்களுக்கும் வணக்கம்.
இந்த படத்தின் டிரைலர் ஒரு வசனம்வருகிறது, பெண்கள் சபரிமலைக்கு போக கூடாது என்று யார்? சொன்னது என்று. அதேபோல், இசையமைப்பாளர் பேசும் போது, பெண்கள் சபரிமலைக்கு போகலாம் என்று சொன்னார். உண்மை தான், சபரிமலை இந்தியாவின் புதிதமான மலை.
இஸ்லாமியர்களுக்கு மெக்கா புனிதமான இடம், கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலம் புனிதமான இடம். அதுபோல், ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை புனிதமானது.
அந்த சபரிமலை புனிதத்தை பாதுகாப்பதற்காக, ஐயப்பன் வழிபாடு வெறும் வழிபாடு இல்லை. மற்ற வழிபாடு போல் இல்லை. இந்த வழிபாடு என்பது நம்மை நாம் ஐயப்பனாக மாறுவது. சபரிமலை சாஸ்தா தான் இந்த வழிபாடு, விரதம் அனைத்தையும் நமக்கு வகுத்து கொடுத்தது. மற்ற விரதம் போல் சாதாரண விரதம் இல்லை. உடல், மனம் என அனைத்தும் பக்குவமாக இருப்பதோடு, ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அதுமட்டும் அல்ல, இறைவனிடம் சரணாகதியடைய வேண்டும். பக்தி இல்லாமல் இந்த உலகம் இல்லை.
நம்முடைய எந்த ஒரு காரியம் என்றாலும் இறைபக்தியோடு செய்தால் வெற்றி கிடைக்கும். திருக்குறளே பக்தியோடு தான் தொடங்கும். பெரியபுராணமும், கம்ப ராமாயணமும் கடவுள் வாழ்த்தோடு தான் ஆரம்பிக்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்ல கூடிய நாத்திகர்கள் இருக்கிறார்கள்.
ஆனால், நம்ம கடவுல்களை தான் அவர்கள் இல்லை என்று சொல்வார்கள். மற்ற மத கடவுல்களை அப்படி சொல்வதில்லை, அவர்களுடைய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு துவக்கி வைப்பார்கள், முடித்து வைப்பார்கள். அதனால் தான் ஐயப்பன் பார்த்தார்.
நாத்தீகம் பேசுபவர்கள் கருப்பை அவர்களுடைய வண்ணம் என்று சொல்கிறார்கள். அதை ஐயப்பன் பக்தி வண்ணமாக மாற்றி விட்டார். மாலை போடுபவர்கள் கருப்பு உடை அணிகிறார்கள், இப்போது அது ஐயப்பன் வண்ணமாக மாறிவிட்டது. அதுபோல் சிவப்பு வண்ணத்தை பார்த்தால் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தியே என்று வணங்குகிறார்கள்.
33 வருடங்களுக்கு பிறகு ஐயப்பன் படம் வருகிறது. இதை மக்கள் கொண்டாட வேண்டும், ஐயப்பன் பக்தர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். இந்த நேரத்தில் நான் இந்து சமயநிலைத்துறை அமைச்சருக்கு, அரசுக்கும் ஒரு கோரிக்கை வைக்கிறேன்.
எங்கேயோ இருக்கிற நாட்டுக்கு செல்ல பிற மதத்தினருக்கு நிதி உதவி செய்யும் அரசு, தமிழகத்தில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் ஐயப்பன் பக்தர்களில் மாவட்டத்திற்கு இரண்டாயிரம் பேரை தேர்வு செய்து அவர்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டும்.
ஸ்ரீ சபரி ஐயப்பன் திரைப்படத்தின் டிரைலர் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. இந்த படத்தின் மூலம் ஐயப்பனின் பெருமை உலகறிய செய்வதோடு, இந்து மதத்தின் பெருமையும் பேசப்படும் என்று நான் நம்புகிறேன். படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.
நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு படக்குழுவினர் ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’ படத்தின் நினைவு பரிசுகளை வழங்கி கெளரவித்தனர். மேலும், திருத்தணி முருகன் கோவிலில் படக்குழுவினருக்கு சிறப்பு அர்ச்சணை செய்யப்பட்ட பிரஷாதத்தை கோவில் குருக்கள் வழங்கினார்.
Red and Black colors became Gods Color says Arjun Sambath