*அதிகரிக்கும் திரையரங்குகள் .. மகிழ்ச்சியில் சாயம் படக்குழு ..!*

*அதிகரிக்கும் திரையரங்குகள் .. மகிழ்ச்சியில் சாயம் படக்குழு ..!*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாயம் திரைப்படம் கடந்த பிப்ரவரி 4 அன்று தமிழகமெங்கும் 90 திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பே தென் மாவட்டங்களில் இருந்து இயக்குனருக்கு மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்தது. அத்தனை எதிர்ப்புகளையும் மீறி பல திரையரங்குகளில் படம் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது சாயம் திரைப்படம்.

தென்மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வண்ணம் படத்தில் காட்சிகள் இருப்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று படத்தை பார்த்து வருகின்றனர். இதனால் பல தியேட்டர்களில் காட்சிககள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் ரிலீஸ் அன்று திரையிடப்படாத பல தென் மாவட்ட தியேட்டர்கள் கடந்த திங்கள் முதல் படத்தை திரையிட துவங்கியுள்ளனர். படத்தின் வெற்றியை உணர்ந்த மதுரை சண்முகா (மாப்பிள்ளை விநாயகர் ), வத்தலகுண்டு சீனியப்பா, திருநெல்வேலி, சுரண்டல் மற்றும் கடையம் ஆகிய இடங்களில் ஒரு தியேட்டர் என தியேட்டர் உரிமையாளர்களே தாமாக முன்வந்து கடந்த ஞாயிறு முதல் சாயம் படத்தை தனது தியேட்டரில் வெளியிட்டு வருவதே இந்த வெற்றிக்கு உதாரணம்.

இது போல தமிழகத்தில் பல காட்சிகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் சாயம் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Reason behind Saayam movie team happiness

சிவகார்த்திகேயன் அனுதீப் தமன் இணையும் பட சூட்டிங் அப்டேட்

சிவகார்த்திகேயன் அனுதீப் தமன் இணையும் பட சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suresh Productions-Sree Venkateswara Cinemas LLP-Shanthi Talkies வழங்கும், ப்ளாக்பஸ்டர் ஹிட் “ஜதி ரத்னதாலு” புகழ் அனுதீப் KV இயக்கத்தில், இசையமைப்பாளர் தமன் இசையில், சிவகார்த்திகேயன் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் “SK 20” படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் இன்று இனிதே துவங்கியது.

2022 புத்தாண்டு கொண்டாட்டமாக சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘SK 20’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனை தொடர்ந்து படக்குழு இன்று (பிப்ரவரி 10, 2022) இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது. காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரியில் ஒரே கட்டமாக படமாக்கப்படவுள்ளது. இந்த படப்பிடிப்பில் நடிகர் சத்யராஜ் முதலாக முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள்.

தற்போதைக்கு ‘SK 20’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘ஜதி ரத்னதாலு’ படம் மூலம் புகழ் பெற்ற அனுதீப் KV இயக்குகிறார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பிரமாண்டமாக இப்படம் உருவாகிறது.

Suresh Productions சார்பில் சுரேஷ் பாபு (சிவாஜி கணேசன் நடித்த “வசந்த மாளிகை” பட பிரபல தயாரிப்பாளர் புகழ் D.ராமாநாயுடு அவர்களின் மகன்)
நாராயண்தாஸ் நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் SVCLLP (Sree Venkateswara Cinemas LLP) மற்றும் Shanthi Talkies அருண் விஷ்வா ஆகியோர் இணைந்து இப்படத்தை வழங்குகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயனின் படத்திற்கு S.S.தமன் இசையமைப்பது இதுவே முதல்முறை, இது ‘SK 20’ படத்திற்கு ரசிகர்களிடம் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

SK 20 A Telugu – Tamil Bilingual Film Launched today at Karaikudi

விஜய்யின் ‘பீஸ்ட்’ PAN WORLD படமா.? பற்ற வைத்த சிவகார்த்திகேயன் அனிருத் நெல்சன்

விஜய்யின் ‘பீஸ்ட்’ PAN WORLD படமா.? பற்ற வைத்த சிவகார்த்திகேயன் அனிருத் நெல்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் ரிலீஸ் செய்திட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் “அரபி குத்து” பிப்ரவரி மாதம் 14 ஆம் நாள் காதலர் தினத்தை ஒட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார்.

இது பற்றிய அறிவிப்பில்… கோலமாவு கோகிலா & டாக்டர் பட பாடல்கள் ப்ரோமோ போல இந்த பாடலுக்கும் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இந்த ப்ரோமோ வீடியோவில் சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சன் ஆகியோருடன் மற்றும் விஜய்யின் குரலும் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த பாடலை PAN WORLD ‘பான்-வேர்ல்டு’ பாடலாக உருவாக்கியுள்ளனர் சிவகார்த்திகேயன். நெல்சன் அனிருத் கூட்டணியினர்.

இந்தியாவில் ஒரே படம் பல மொழிகளில் உருவானால் அதற்கு பான் இந்தியா (PAN INDIA) படம் என்பர். அதுபோல் அந்த பட ஹீரோவை பான் இந்தியா ஹீரோ என்பார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan and Anirudh hints about beast business

கேஜே. யேசுதாஸுக்கு பிறகு பாடகர் வேல்முருகனுக்கு கிடைத்த கௌரவம்

கேஜே. யேசுதாஸுக்கு பிறகு பாடகர் வேல்முருகனுக்கு கிடைத்த கௌரவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் விருதகிரீஸ்வரர் ஆலய குடமுழுக்கு கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திரைப்பட பின்னணி பாடகர் நாட்டுப்புற இசை பாடகருமான டாக்டர் வேல்முருகன் அவர்களுக்கு தர்மபுரம் ஆதினத்தால் “கிராமிய இசை கலாநிதி” என்கிற பட்டத்தையும் தர்மபுரம் அதினத்தின் உடைய ஆஸ்தான பாடகராகவும் அறிவித்துள்ளது.

இதற்கு முன்பாக டாக்டர். யேசுதாஸ் அவர்கள் இந்த பொறுப்பில் இருந்து வந்தார்.

அவர்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு நாட்டுப்புற பாடகரை தர்மபுரம் ஆதினம் சிவாலயங்களுக்கு ஆஸ்தான பாடகராக அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

“ஆன்மிக காவலர் ” அகர்சந்த் அவர்கள் “தொழிலாளர் துறை அமைச்சர் ” சி. வெ. கணேசன், “இயக்குனருமான இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் “கே. பி. அசோக் குமார் அவர்களின் முன்னிலையில் திரைப்பட பின்னணி பாடகர் நாட்டுப்புற இசை பாடகர் டாக்டர்.

வேல்முருகன் அவர்களுக்கு “கிராமிய இசை கலாநிதி “எனும் பட்டத்தை வழங்கி தங்கப்பதக்கத்தை அளித்து தர்மபுரம் ஆதினம் நாட்டுப்புற இசை கலைக்கு ஒரு கவுரவத்தை அளித்துள்ளது.

Singer Vel Murugan gets new recognition

‘சீயான்’ விக்ரம் மகன் துருவ் எழுதி பாடிய ராப் சாங் வைரல்

‘சீயான்’ விக்ரம் மகன் துருவ் எழுதி பாடிய ராப் சாங் வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சீயான்’ விக்ரம் நடிப்பில் உருவான ‘மகான்’ படத்தில் இடம்பெற்ற ‘மிஸ்ஸிங் மீ ..’ எனத் தொடங்கும் ராப் பாடலை பாடி, நடிகர் துருவ் விக்ரம் பாடகராக அறிமுகமாகிறார்.

‘சீயான்’ விக்ரம் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘மகான்’ திரைப்படம் பல சாதனைகளை படைக்கவிருப்பது உறுதியாகி உள்ளது.

இத் திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து ரசிகர்களின் உற்சாகத்துடன் சரியான அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.

இந்த திரைப்படம் ‘சீயான்’ விக்ரமின் 60வது படம் என்பதுடன், இந்தப் படத்தில் அவருடைய மகனும், நடிகருமான துருவ் விக்ரமுடன் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் உலகளவில் வெளியாகிறது.

இதற்கு ஒரு நாள் முன்னதாக நடிகர் துருவ் விக்ரம் முதன்முதலாக சொந்த குரலில் பாடிய ‘மிஸ்ஸிங் மீ ..’ எனத் தொடங்கும் ராப் பாடல் வெளியாகிறது.

துள்ளலான நடனத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி இருக்கும் ‘ மிஸ்ஸிங் மீ…’ என்ற பாடலை பாடலாசிரியர் விவேக்குடன் இணைந்து நடிகர் துருவ் விக்ரமும் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

‘சீயான்’ விக்ரம் நடிப்பில் உருவான ‘மகான்’ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார்.

இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்தப்படத்தில் ‘சீயான்’ விக்ரமுடன் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘மகான்’ திரைப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது. தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாகிறது. கன்னடத்தில் இந்த படத்திற்கு ‘மகா புருஷா’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

மகான் = தனக்கென சில இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு தனிமனித சுதந்திரத்துடன் லட்சிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இதன்போது அவரது குடும்பத்தை விட்டு அவர் வெளியேற வேண்டிய சூழல் உருவாகிறது. கோடீஸ்வரனாக வேண்டும் என்ற தனது கனவு நனவான பிறகு, தன்னுடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள வாரிசு இல்லையே..! என்ற இழப்பை உணர்கிறார். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி நல்லதொரு தந்தையாக வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடர்ந்தாரா.. என்பதை பரபரப்பான அதிரடி மிகுந்த படைப்பாக ‘மகான்’ உருவாகியிருக்கிறது.

எதிர்பாராத தொடர் நிகழ்வுகளின் வழியாக நாயகனது வாழ்க்கை எப்படி பயணிக்கிறது என்பதை ஆக்சன் திரில்லருடன் விவரிக்கிறது ‘மகான்’ படத்தின் திரைக்கதை.

‘மிஸ்ஸிங் மீ..’ என தொடங்கும் பாடலுக்கான இணைப்பு…: https://www.youtube.com/watch?v=G5ur_C-L7ZU

Dhruv Vikram’s missing me rap song goes viral

மண்ணை கவ்வியது ‘வீரமே வாகை சூடும்’..; விஷால் விழித்துக் கொள்வாரா..??

மண்ணை கவ்வியது ‘வீரமே வாகை சூடும்’..; விஷால் விழித்துக் கொள்வாரா..??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால்.

ஆனால் இவரது சமீபத்திய படங்களின் ரிசல்ட் இவரை பின்னணிக்கு கொண்டு போகும் வகையில் உள்ளது.

விஷால் தயாரித்து அவரது நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படம் கடந்த வாரம் பிப்ரவரி 4ல் ரிலீசானது.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியானது.

பலமுறை இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி மாற்றி அறிவிக்கப்பட்டது.

2022 ஜனவரி பொங்கலுக்கு என அறிவித்தனர். பின்னர் தெலுங்கில் மட்டும் ரிலீஸ் என அறிவித்தனர்.

அதன்பின்னர் குடியரசு தினமான ஜனவரி 26ல் ரிலீஸ் என்றனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் குழப்பமானது.

ஆனால் பிப்ரவரி 4ல் வெளியானது.

மேலும் படத்திற்கு போதுமான விளம்பரங்களும் இல்லை. இதுவும் படத்திற்கு பெரும் பின்னடைவானது.

இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இதனால் திரையரங்குகளில் கூட்டம் இல்லை.

சரி தமிழகத்தில் தான் இந்த நிலை என்றால்… தெலுங்கு, கன்னட மாநிலங்களிலும் படத்திற்கு கூட்டம் இல்லவே இல்லையாம்.

இத்துடன் ஆந்திரா, தெலுங்கானாவில் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான ஆக்சன், சக்ரா, அயோக்கியா, எனிமி என எந்தப்படமும் பெரிய வெற்றியை பெறவில்லை.

அந்த அந்த படத் தயாரிப்பாளர்களுக்கு கணிசமான நஷ்டத்தை ஏற்படுத்தின.

இந்த நிலையில் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படமும் தோல்வி வரிசையில் இணைந்துள்ளது.

இனியாவது விஷால் விழித்துக் கொள்வாரா..??

Will Vishal concentrate on story selection ?

More Articles
Follows