தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி ரஜினி ரசிகர்களின் உற்சாகத்தை எகிற வைத்துள்ளது.
சன் பிக்சர்ஸ் மிகப்பிரம்மாண்டமாக இந்த படத்தை தயாரித்துள்ளது.
இதில் ரஜினியுடன் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மறைந்த எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் இறுதியாக பாடிய ‘அண்ணாத்த, அண்ணாத்த வர்றேன்…’ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இது ரஜினியின் அறிமுக பாடலாக படத்தில் இடம்பெற்றுள்ளது.
‘அண்ணாத்த, அண்ணாத்த வர்றேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு, அண்ணாத்த, அண்ணாத்த வர்றேன் நடையில, உடையில கொல, கொல மாஸு என்பதாக அந்த பாடல் உள்ளது.
பாடலாசிரியர் விவேகா இந்த பாடலை எழுதியிருக்கிறார்.
வழக்கம்போல ரஜினிகாந்த் – எஸ்.பி.பி காம்போவில், அண்ணாத்த பட பாடலாக வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.
இது பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் கடைசி பாடல் என்பதால் ஒரு பக்கம் நெகிழ்ச்சியும் சூப்பரான பாடல் என்பதால் மறுபக்கம் மகிழ்ச்சியும் கலந்த வண்ணம் ரசிகர்கள் பாடலை கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினி உருக்கமாக ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில்…
“45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Rajinikanth’s emotional post about SPB