தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த்.
இவர் இன்று டிசம்பர் 12 தன் 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இதனைமுன்னிட்டு ரஜினிக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், முதல் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
எனவே வழக்கம் போல அவரது பிறந்தநாளை ரசிகர்கள் மிகப்பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தில் நிறைய தியேட்டர்களில் ரஜினி படங்களை பிரத்யேகமாக திரையிட்டு வருகின்றனர்.
கிட்டதட்ட தமிழகத்தின் அனைத்து சேனல்களிலும் ரஜினி படங்கள் ஒளிப்பரப்பாகி வருகின்றன.
சமூக வலைதளங்களில் #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட்டாகி வருகிறது.
இந்த நிலையில், தனது 72ஆவது பிறந்தநாளில் அனைவரும் வியக்கும் வகையில் ஒரு சிறந்த காரியத்தை தொடங்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
ஏழை குடும்பங்கள் மற்றும் சமூகத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக ரஜினிகாந்த பவுண்டேசன் என்ற அமைப்பை ரஜினிகாந்த் தொடங்கியுள்ளார்.
இந்தத் திட்டம் வழக்கறிஞர் எம்.சத்ய குமாரால் நிர்வகிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்டுள்ளார்.
Rajinikanth foundations will train 100 students for TNPSC exams