JUST IN மருத்துவமனையில் ரஜினி.. சென்னைக்கு புறப்பட ரெடியான ரசிகர்கள்.: வெளியான பரபரப்பு தகவல்கள் இதோ..

JUST IN மருத்துவமனையில் ரஜினி.. சென்னைக்கு புறப்பட ரெடியான ரசிகர்கள்.: வெளியான பரபரப்பு தகவல்கள் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தான் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தை தன் பேரனுடன் பார்த்த்தாகவும் அவன் மிகவும் ஹாப்பியாக இருப்பதாகவும் ரஜினி இன்று காலை தன் குரலில் பதிவு செய்திருந்தார்.

இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்துக் கொண்டிருக்க திடீரென இன்று இரவு 9 மணியளவில் ரஜினிகாந்த் திடீரென சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் பறந்தன.

ஒவ்வொரு பக்கமும் பல்வேறு கற்பனைகளுடன் வதந்திகள் பறக்க ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

சில ஊடகங்கள் இந்த செய்தியை வேறுவிதமாக பரப்பத் தொடங்கியது.

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் சென்னையை நோக்கி புறப்படுவதா? என புரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.

இதனிடையில் ரஜினி மனைவி லதா “ யாரும் பயப்பட தேவையில்லை. இது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான்” என தெரிவித்தார்.

இந்த நிலையில் ரஜினியின் பிஆர்ஓ ரியாஸ் “தான் போயஸ் கார்டன் சென்று ரஜினியின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். கவலைப்பட வேண்டாம். எல்லாம் நார்மல்தான்.” என தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி அறிந்த பிறகு ரஜினிகாந்த் ரசிகர்கள் மன அமைதி (சமாதானம்) ஆவார்கள் என நம்புகிறோம்.

Rajini wife latha and PRO Riaz talks about Rajini health

‘அண்ணாத்த’ ரஜினிக்கு அசராமல் எதிர்த்து நிற்கும் ‘எனிமி’-ஸ் விஷால் – ஆர்யா

‘அண்ணாத்த’ ரஜினிக்கு அசராமல் எதிர்த்து நிற்கும் ‘எனிமி’-ஸ் விஷால் – ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் நவம்பர் 4 தீபாவளி வெளியீடாக வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

இதனால் படத்தினை தமிழகத்தில் மட்டும் 800-900க்கும் மேற்ப்பட்ட தியேட்டர்களின் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மற்ற படங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்குமா? என்ற கேள்வி கோலிவுட்டில் எழுந்துள்ளது.

ஆனாலும் எனிமி படம் வந்தே தீரும் என அப்பட தயாரிப்பாளர் வினோத் ஒரு ஆடியோவில் பதிவிட்டு இருந்தார். மேலும் அண்ணாத்த படத்தால் தன் படத்திற்கு போதிய தியேட்டர்கள் கிடைக்க விடாமல் சிலர் பஞ்சயாத்து செய்வதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டு இருந்தார்.

விஷால் – ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் ‘ எனிமி’. இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார்

மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S வினோத்குமார் தயாரிக்கிறார் . கதாநாயகியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார் .முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ்,மம்தா மோகன்தாஸ் ,தம்பி ராமையா , கருணாகரன் ,மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள் .

பாடல்களை தமன் இசையமைக்க RD ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார் .சண்டைக்காட்சிகள் – ரவிவர்மா . படத்திற்கான பின்னணி இசையை சாம் CS இசையமைக்கிறார் . படத்தொகுப்பினை ரெய்மான்ட் டெரிக் க்ரஸ்ட்டா மேற்கொள்கிறார்.

இந்த படம் தீபாவளிக்கு வெளியீடாக தியேட்டர்களில் வெளியாகி ரஜினியின் அண்ணாத்த படத்துடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்களுக்கு வேண்டிய போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்பதாலும் எதிர்பார்க்கும் லாபம் பாதிக்கும் என்பதாலும் சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தை நவம்பர் 25க்கு தள்ளி வைத்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Annaatthe Enemy movies will clash in theatres for Diwali 2021

தாத்து.. தாத்து… ‘அண்ணாத்த’ பார்த்து விட்டு ரஜினியை விடாத பேரன்..; காத்திருந்த கலாநிதி மாறன்!

தாத்து.. தாத்து… ‘அண்ணாத்த’ பார்த்து விட்டு ரஜினியை விடாத பேரன்..; காத்திருந்த கலாநிதி மாறன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 4ல் உலகமெங்கும் ரிலீசாகிறது.

அமெரிக்காவில் மட்டும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 700க்ம் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீசாகிறதாம்.

இந்த நிலையில் நேற்று அக்டோபர் 27ல் ‘அண்ணாத்த’ படத்தை தன் பேரன் மற்றும் குடும்பத்தினருடன் பார்த்துள்ளார் ரஜினி.

இதனை குறிப்பிட்டு தனது பேரன் வேத் கிருஷ்ணா (சௌந்தர்யாவின் மகன்) அடைந்த மகிழ்ச்சியை தன் சமூக வலைதளத்தில் குரலாக பதிவு செய்துள்ளார் ரஜினிகாந்த்.

அதில் ரஜினி பேசியுள்ளதாவது…:

‘நான், ஐஸ்வர்யா, செளந்தர்யா, மாப்பிள்ளை விசாகன், சம்பந்திகள் என அனைவரும் ‘அண்ணாத்த’ படம் பார்த்தோம்.

என் அருகிலேயே உட்கார்ந்து படம் பார்க்க வேண்டும் என கூறி என் பேரன் வேத் உட்கார்ந்து கொண்டான்.

நான் நடித்த படங்களில் அவன் திரையரங்கில் பார்க்கும் முதல் படம் இது.

முழுப் படத்தையும் ரசித்துப் பார்த்தான் அவன். படம் முடிந்தவுடன் என்னைக் கட்டியணைத்து 3-4 நிமிஷம் விடவே இல்லை.

அவன் ரொம்ப சந்தோஷமாகிவிட்டால் “தாத்து தாத்து” என்றுதான் சொல்வான். “தாத்து ஐ யம் ஸோ ஹாப்பி, தேங்க் யூ” என்று சொன்னான். எனக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது.

படம் பார்த்துவிட்டு இரவு 10 மணிக்கு மேல் திரையரங்கை விட்டு வெளியே வந்தேன். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் கலாநிதி மாறன் சார் வெளியே நின்றார். “என்ன சார், இந்த நேரத்தில் நீங்கள் வந்துள்ளீர்கள்” என்றேன்.

“இல்லை உங்களைப் பார்க்க வேண்டும் அல்லவா” என்றார். அவ்வளவு பிஸியான மனிதர். அவர் அங்கே வந்து நிற்க வேண்டிய அவசியமில்லை. மேன்மக்கள், மேன்மக்களே”.

இவ்வாறு ரஜினி அதில் பேசி அண்ணாத்த குறித்து தெரிவித்துள்ளார்.

Rajinis grand son review for Annaatthe movie

மனித உரிமை வழக்குகளுக்கு ஃபீஸ் வாங்காத நீதிபதி சந்துரு கதையை அக்னிப் பிரவேசம் செய்யும் சூர்யா

மனித உரிமை வழக்குகளுக்கு ஃபீஸ் வாங்காத நீதிபதி சந்துரு கதையை அக்னிப் பிரவேசம் செய்யும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெய் பீம் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகவிருக்கிறது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தில் தான் ஏன் முதன்முறையாக ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்தேன் என்பதை சூர்யா விளக்கியுள்ளார்.

வழக்கறிஞர் சந்துரு அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் துணிச்சல்மிக்கவர்.

“நான் இந்தப் படத்தில் நடிக்க ஆரம்பிப்பதற்கு வெகு நாட்களுக்கு முன்னதாகவே, நீதிபதி சந்துரு ஐயாவை சந்தித்தேன். இயக்குநர் த.செ.ஞானவேல் தான் அதற்கு ஏற்பாடு செய்தார்.

என்னிடம் நீதிபதி சந்துரு பற்றி கூறும்போது அவர் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்றனர்.

அவரைப் பற்றிய நிறைய உத்வேகம் தரும் செய்திகளைக் கூறினார். அவர் வழக்கறிஞராக இருந்த காலத்தில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளுக்கு வக்கில் ஃபீஸ் பெற்றதில்லை என்பதைத் தெரிவித்தனர். அவரிடம் பேசியும், அவரைப் பற்றி, அவரது இளமைக் கால துடிப்பைப் பற்றி பேசியும், படித்தும் தெரிந்து கொண்டேன்.

அவருடைய கதை இந்த உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றுசேர வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம்.

நீதிபதி சந்துரு போன்றோர் போற்றுதலுக்கு உரியவர்கள். ஆனால் அவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்கான உரிய மரியாதையை செய்யவில்லை. நாங்கள் அவருடைய கதையைச் சொல்லி இளம் மனதில் அக்கினிப் பிரவேசம் செய்ய எண்ணினோம். அதன் சாட்சிதான் ஜெய் பீம்.

இத்திரைப்படத்திற்காக நாங்கள் உயர் நீதிமன்ற வளாக செட் போட்டுள்ளோம். இது தமிழ்த் திரைப்படத்தில் இதுவரை யாரும் செய்திராதது. எனவே, இவையெல்லாம் சேர்ந்துதான் என்னை முதல்முறையாக வழக்கறிஞர் கதாபாத்திரத்தை ஏற்கவைத்தது” என்றார்.

ஜெய் பீம் திரைப்படம் சிந்தனையைத் தூண்டும் கதைக்களம் கொண்டது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலானது. தமிழகத்தில் 1990களில் நடந்த சம்பவங்களைக் கொண்டு த.செ.ஞானவேல் கதையை உருவாக்கியுள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, நடித்துள்ளார் சூர்யா. படத்தினை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார்.

’ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டர் ஃபிலோமின்ராஜா. கலை இயக்குநர் கதிர்.

‘ஜெய் பீம்’ திரைப்படம் நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகிறது.

Jaibhim story inspired by a legal case fought by retired High Court Judge Chandru

நம்பிக்கை வைத்தவருக்கு கைகொடுத்த சூர்யா: 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலாவுடன் கூட்டணி

நம்பிக்கை வைத்தவருக்கு கைகொடுத்த சூர்யா: 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலாவுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று அக்டோபர் 27ல் நடிகர் சிவகுமார் தனது 80-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். எனவே பல்வேறு பிரபலங்கள் சிவகுமாரை அவரு இல்லத்தில் சந்தித்து வாழ்த்தினர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகுமாரின் மகன்களும் நடிகர்களுமான சூர்யா கார்த்தி இருவரும் செய்திருந்தனர்.

இந்த பிறந்தநாள் விழாவில் இயக்குநர் பாலாவும் கலந்துக் கொண்டு புகைப்படம் எடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சூர்யா, மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்கவுள்ளதை ட்வீட் செய்துள்ளார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது:

“என்னை விட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர். ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர். 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான். அப்பா ஆசீர்வதிக்க, மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன். அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்”.

இவ்வாறு தெரிவித்துள்ளார் சூர்யா.

பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘நந்தா’ படம் 2001-ம் ஆண்டு வெளியானது. அதன் பின்னர் பாலா இயக்கத்தில் உருவான ‘பிதாமகன்’ படத்தில் விக்ரம் உடன் இணைந்து நடித்திருந்தார் சூர்யா.

நடிகர் சூர்யாவுக்கு இப்படியொரு நடிப்பு திறமையா? என கோலிவுட்டே வியக்குமளவுக்கு நடிக்க வைத்தவர் பாலா தான் என்றால் அது மிகையல்ல. அதன்பின்னர்தான் சூர்யாவிற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சுமார் 20 வருடங்களுக்கு பிறகு இவர்கள் இணைகின்றனர்.

ஆர்யா விஷால் நடித்த அவன் இவன் படத்தில் பாலாவுக்காக கெஸ்ட் ரோலில் தோன்றினார் சூர்யா.

தற்போது பாலா இயக்கவுள்ள படத்தை சூர்யாவே தயாரிக்கவுள்ளார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

சமீபகாலமாக பாலாவின் படங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லை. மேலும் விக்ரம் மகன் துருவ் நடித்திருந்த வர்மா படத்தை பாலா இயக்கியிருந்தார். முழுப் படத்தை பார்த்தபின் தனக்கு பிடிக்கவில்லை என தயாரிப்பாளர் ரிலீஸ் செய்யாமல் நிறுத்தினார்.

அதன்பின்னர் பாலா படங்கள் இயக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் பாலாவுடன் சூர்யா இணைவது இங்கே கவனிக்கத்தக்கது.

Actor Suriya and director Bala team up again after 2 decades

EXCLUSIVE WARNING : பாஃலோயர்ஸ் இருக்காங்களா? சான்ஸ் தர்றேன்.; தரம் கெடும் தமிழ் சினிமா

EXCLUSIVE WARNING : பாஃலோயர்ஸ் இருக்காங்களா? சான்ஸ் தர்றேன்.; தரம் கெடும் தமிழ் சினிமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைவாணர் என்எஸ்கே கால சினிமாவில் ஒருவருக்கு பல திறமைகள் இருந்தால் மட்டுமே சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தன. அதாவது நடிக்க தெரியனும்.. பாட தெரியனும்.. வீர பயிற்சிகள் தெரிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட தகுதிகள் தேவைப்பட்டன.

மேலும் சிகப்பாக இருக்க வேண்டும். நல்ல அழகாக இருக்க வேண்டும் எனவும் எழுதப்படாத விதிமுறைகள் இருந்தன.

பின்னர் எம்ஜிஆர் சிவாஜி கால சினிமாக்களிலும் இது தொடர்ந்து கொண்டே இருந்தன.

பின்னர் நாளடையில் அதாவது 1960களில் பாடகர்கள் அறிமுகமாகினர். நடிகர்கள் பாட்டுக்கு வாய் அசைத்தால் போதும் என்ற நிலை உருவானது. இதனால் நடிகர்களுக்கு லேசான பணிச்சுமை குறைந்தன.

அதன்பின்னர் 1970 மற்றும் 1980களில் பிற மொழி நடிகர் நடிகைகள் மற்ற மொழி படங்களில் நடித்தாலும் அவர்களுக்கு மொழி தெரியாவிட்டாலும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டிகள் அதிகளவில் வரத் தொடங்கினர்.

மேலும் ஸ்டண்ட் கலைஞர்கள் டூப் போட தொடங்கினர். இதனால் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் கூடுதலாக பணிச்சுமை குறைந்தன.

ரஜினிகாந்த் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு வரை சிகப்பு தோல் நடிகர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தன. அதனை ரஜினி முறியடித்தார். கருப்பு நிற மனிதர்களாலும் சாதிக்க முடியும் என நிரூபித்தார்.

இதனால் விஜயகாந்த் சரவணன் பார்த்திபன் உள்ளிட்ட பல திறமையானவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. ராதிகா, மாதவி உள்ளிட்ட மாநிற நடிகைகளுக்கும் வாய்ப்புகள் வந்தன.

இப்படியாக சினிமாவிற்கான தகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கின.

1990களில் சினிமாவின் வாரிசுகள் ஆதிக்கம் அதிகரிக்க ஆரம்பித்தன. ஒரு பிரபலத்தின் வாரிசு என்ற அடையாளமே போதுமானதாக கருதப்பட்டது.

2000 கால கட்டங்களில் பணம் இருந்தால் படம் எடுக்கலாம். அந்த நபரே நாயகனாக நாயகியாக நடிக்கலாம் எனவும் தமிழ் சினிமா மாறியது.

இதனிடையில் திறமைக்கான மதிப்புகள் குறைந்து நடிகைகளின் அட்ஜஸ்ட்மெண்ட்களும் அதிகரிக்க ஆரம்பித்தன.

2010 கால கட்டங்களில் மொழி தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு வகையில் அவர் மக்களிடையே பிரபலமாக இருந்தால் போதும் சினிமாவில் வாய்ப்புகள் வரத்தொடங்கியது.

மேலும் சின்னத்திரை நடிகர்களுக்கும் சினிமாவில் வாய்ப்புகள் பெருக ஆரம்பித்தன.

தற்போது 2020 ஆண்டை கடந்துவிட்டோம். சோஷியல் மீடியாக்களின் ஆதிக்கம் உச்சத்தில் உள்ளன.

யூடிப் பிரபலம்… டிக்டாக் பிரபலம்.. ட்விட்டர் பிரபலம்.. பேஸ்புக் பிரபலம்… இன்ஸ்ட்ரா பிரபலம் உள்ளிட்டோருக்கு சினிமாவில் வாய்ப்புகள் பெருக தொடங்கியுள்ளது..

அண்மையில் ஒரு திறமையான இளம் நடிகை இயக்குனரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார். அதற்கு உனக்கு இன்ஸ்ட்டாகிராமில் எவ்வளவு பாஃலோயர்ஸ் இருக்காங்க? என கேட்டுள்ளார். அதற்கு அவரோ 20,000க்கும் குறைவாகவே உள்ளது என சொல்லியுள்ளார்.

அது போதுமானதாக இல்லை. இன்ஸ்ட்டாவில் 50000 பாலேஃயர்ஸ் இருந்தால் சினிமா சான்ஸ் ரெடியாக இருக்கு என்றாராம்.

அட்ட்ட்டா… இதுவல்லவோ தமிழ் சினிமாவிற்கான தகுதி… தயாரிப்பாளர்களே… இயக்குனர்களே… தமிழ் சினிமாவை வாழ விடுங்க.. தகுதியற்ற சினிமாவாக கோலிவுட்டை மாற்றிவிடாதீர்கள்.

சோஷியல் மீடியாக்கள் மூலம் பிரபலமாகி சில திறமையானவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவது தவறில்லை. ஆனால் இங்கே பாஃலோயர்ஸ் மட்டுமே ஒரு சினிமாவிற்கான தகுதியாக மாறிவிடுமா என்ன? அதுவும் பாஃலோயர்ஸ் ஏற்ற பணம் கொடுத்து பெறுபவர்களும் இங்கே அதிகளவில் உள்ளனர்.
எனவே சிந்திப்பீர்.. சிறப்பான தமிழ் சினிமா வளர வழி கொடுப்பீர்.

கூடுதல் தகவல்…

பிரபலமான நடிகைகளின் இன்ஸ்டாகிராமில் பாஃலோயர்கள் பற்றிய தகவல்…

இந்திய அளவில் நடிகைகளில் பிரியங்கா சோப்ரா 69.6 மில்லியன் பாஃலோயர்ஸ்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

ராஷ்மிகா மந்தனா. – 23 மில்லியன் பாஃலோயர்ஸ்

காஜல் அகர்வால். – 20 மில்லியன் பாஃலோயர்ஸ்

சமந்தா – 19.2 மில்லியன் பாஃலோயர்ஸ்

ஸ்ருதிஹாசன் மற்றும் டாப்ஸீ – 18 மில்லியன் பாஃலோயர்ஸ்

filmi street exclusive warning for Tamil Cinema

More Articles
Follows