தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளார் ரஜினிகாந்த்.
அவரது கட்சி பெயர் மக்கள் சேவை கட்சி என்றும் அவரது சின்னம் ஆட்டோ என்றும் தகவல்கள் வந்தன.
ஆனால் கட்சி தலைமை உறுதி செய்யும் வரை ரசிகர்கள் காத்திருக்குமாறு ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை வெளியிட்டது.
எனவே டிசம்பர் 31ஆம் தேதி இதற்கான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பூத் கமிட்டி அமைப்பதற்கான வேலைகளை ரஜினி முடுக்கிவிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதாவது.. ஒரு கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்த பூத் கமிட்டி அவசியமானது.
இந்த கமிட்டி உறுப்பினர்கள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று கட்சியின் செல்வாக்கை உயர்த்த பாடுபடுவர். வாக்காளர்களை தவறாமல் வாக்களிக்க வருகை புரிய வைப்பதில் பூத் கமிட்டியின் செயல்பாடுகள் மிக முக்கியமானதாக ஆகும்.
இதுவரை தமிழகம் முழுவதும் 47000 பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் 20000 பூத் கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தி உள்ளதாம்.
வரும் 25ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமித்து, அதற்கான பட்டியலை தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்தில் பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழலை ஒழிக்கவே நமது அரசியல் கட்சி எனவும் ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
Rajini warns his fans and his political party members