தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் 150 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
லைக்கா நிறுவன தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை பெயரில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் இவை.
இந்த வீடுகளை ஈழத்தமிழர்க்கு வழங்கும் விழா வருகிற ஏப்ரல் 9ம் தேதி யாழ்ப்பாணத்தில் நடக்கிறது.
இதில் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு வீடுகளை வழங்கவிருக்கிறார் என்பதை முன்பே பார்த்தோம்.
இந்நிலையில் ரஜினி இலங்கை செல்லக்கூடாது என பல்வேறு தரப்பினர் கூறிவருகின்றனர்.
மேலும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனும் இது குறித்து கூறியுள்ளார்.
இலங்கை சென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினி சிக்கலில் சிக்கிக் கொள்வார். எனவே அவர் செல்வதை தவிர்க்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
Rajini should not go to Srilanka for Lyca function says Thirumavalavan