தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’.
இமான் இசையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
இந்த படத்தில் ரஜினியுடன் குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா, நயன்தாரா, சதீஷ், சூரி, ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
ரஜினி உடல்நிலை & கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ஜனவரி மாதம் இதன் சூட்டிங் நிறுத்தப்பட்டது.
பின்னர் சிறப்பு அனுமதியுடன் ஐதராபாத்தில் பலத்த பாதுகாப்புடன் செட் போடப்பட்டு படப்பிடிப்பை நடத்தினர்.
தன் காட்சிகளை முடித்துவிட்டு மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினி.
அங்கு மருத்துவ பரிசோதனை முடித்து 2 வாரங்கள் ஓய்வில் இருந்தார்.
இதன் பின்னர் சென்னை வந்த ஓரிரு தினங்களில் இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார்.
“தனது அரசியல் பிரவேசத்திற்காக மாற்றம் செய்யப்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தை கலைப்பதாக அறிவித்தார்.
இதே நிர்வாகிகள் ரஜினி ரசிகர் நற்பணி மன்றங்களில் தொடர்ந்து மக்கள் பணி ஆற்றுவார்கள்.
இனி எதிர்காலத்திலும் அரசியலுக்கு வரப்போவதில்லை.” என அறிக்கை வெளியிட்டார்
இந்த நிலையில் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நாளை மறுநாள் (ஜூலை 14) மேற்கு வங்கம் செல்கிறாராம் ரஜினி.
அங்கு 4 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இத்துடன் தான் நடிக்கவேண்டிய காட்சிகளை நிறைவு செய்கிறார் ரஜினி.
‘அண்ணாத்த’ படம் நவம்பர் 4ல் தீபாவளிக்கு ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
*ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
நான்தான்டா என் மனசுக்கு ராஜா..*. இந்த பாடல் ஏனோ தற்போது நினைவுக்கு வருகிறதே…
Rajini is leaving for West Bengal on July 14 for the final shoot of Annaatthe