தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆன்மிக ஈடுபாடு நாம் அறிந்த ஒன்றுதான்.
இந்நிலையில் இன்று காலை ஆந்திராவில் உள்ள மந்த்ராலயம் சென்று வந்துள்ளார் ரஜினி.
இந்த மந்த்ராலயம் ஆந்திர, கர்னூலில் உள்ள துங்கபத்ரா ஆற்றங்கரையில் உள்ளது.
மந்த்ராலயம் சென்ற ரஜினி, அங்குள்ள ராகவேந்திரரை வழிபட்டார்.
ரஜினியின் திடீர் வருகையை முன்னிட்டு அவருக்கான விசேஷ அர்ச்சனைகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்பின்னர் அங்குள்ள மடாதிபதியிடம் ஆசி பெற்றுள்ளார் ரஜினி.
அந்த வீடியோ தற்போது இணையங்களில் வெளியாகியுள்ளது.
அதில் மடாதிபதி ரஜினியிடம், நீங்கள் இங்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். பணி நிமித்தமாக அவசரமாக எங்காவது செல்கிறீர்களா?
ஏனென்றால், இங்கு செய்யப்படும் நற்பணிகளையும், சம்ஸ்கிருத பள்ளி, கோசாலை, பாடசாலை ஆகியவற்றை நீங்கள் பார்வையிட வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.
அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், அவசரம் எல்லாம் இல்லை. நான் மற்றொரு இடத்துக்கு போக வேண்டும்.
இங்கே பொதுமக்கள் கூடுவதற்குள் நான் வெளியே செல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் ரஜினி.
Rajini has visited Manthralayam today at Andhra Pradesh