தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பாலும் பல நாடுகளின் ஊரடங்காலும் ஒட்டுமொத்த உலகமே முடங்கியுள்ளது எனலாம்.
இதில் திரை உலகமும் விதிவிலக்கு அல்ல.
கோடிகளில் புரளும் சினிமாத் துறை இந்த ஊரடங்கால் முற்றிலும் செயல் இழந்துள்ளது.
இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நலிவடைந்த தயாரிப்பாளர்கள் 750 பேருக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என மூத்த தயாரிப்பாளர் கே.ராஜன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவரின் கோரிக்கையை ஏற்று ரஜினியினம் 750 + 250 தயாரிப்பாளர்களுக்கு 20 டன் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
இந்த செய்தியை நம் தளத்தில் முதன்முதலாக வெளியிட்டு இருந்தோம்.
தயாரிப்பாளர் கே. ராஜன் மற்றும் தயாரிப்பாளர் திருமலை என்பவரும் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ரஜினியின் இந்த உதவி தற்போது தயாரிப்பாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே. சுரேஷ் கூறியுள்ளதாவது…
தயாரிப்பாளர்கள் ரஜினியின் நிவாரணம் உதவி பெறுவது தன்மான இழுக்கு. அவர்கள் இதை பெற கூடாது.
வசதியான தயாரிப்பாளர்கள் மற்ற தயாரிப்பாளர்களுக்கு ரூ. 50000 அல்லது ரூ. 1 லட்சம் கொடுத்து உதவியிருக்கலாம்.” என தெரிவித்துள்ளார்.
மற்றொரு தயாரிப்பாளர் சுரேஷ் என்பவர்… தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்குகிறவர் நடிகர் ரஜினி. அவரிடம் அரிசி பருப்பு வாங்குவது கேவலமானது. அது சரியானது அல்ல.
லாரன்ஸ் செய்த உதவியை போல அவர் பெரும் தொகையை கொடுத்திருக்கலாம். அதை தயாரிப்பாளர்கள் பிரித்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
நடிகரும் தயாரிப்பாளரும் பாபு கணேஷ் அவர்கள் கூறியுள்ளதாவது…
ரஜினிகாந்த் இது போன்ற நிவாரணங்களை கொடுப்பதற்கு பதிலாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக குறைவான சம்பளம் பெற்றுக் கொண்டு ஒரு படத்தில் நடித்து கொடுக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
Rajini donation to Film Producers became controversy