தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாகுபலி 2 படத்தை முடித்துவிட்டு ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (RRR) படத்தை இயக்கி வருகிறார் ராஜமௌலி.
இந்த நிலையில் ராஜமவுலி குடும்பத்தினருக்கு கடந்த ஜூலை 29 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
எனவே குடும்பத்தினருடன் ராஜமௌலி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
தற்போது 14 நாட்கள் சிகிச்சைக்கு பின்பு அவர்களது பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதியானது.
இது குறித்து ராஜமௌலி கூறியுள்ளதாவது..
“2 வார தனிமையில் இருந்தேன். பரிசோதனை செய்து பார்த்ததில் எங்கள் அனைவருக்கும் தொற்று இல்லை.
பிளாஸ்மா தானம் செய்யத் தேவையான ஆண்டிபாடிக்கள் எங்கள் உடலில் உருவாகியுள்ளதா? என்பதை தெரிந்துக் கொள்ள டாக்டர்கள் எங்களை 3 வாரங்கள் காத்திருக்கச் சொல்லியுள்ளனர்” என பதிவிட்டுள்ளார்.