தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முதற்கட்டமாக நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து துறை மக்களும் தங்கள் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
சமூக சேவை மனப்பான்மை கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் 3 கோடி ரூபாயை முதற்கட்டமாக கரோனா நிவாரண நிதிக்காக கொடுத்தார்.
அதன்பின்னர் 25 லட்ச ரூபாயை தூய்மைப் பணியாளர்களுக்காக அளித்துள்ளார். பின்னர் விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு 15 லட்ச ரூபாய் நிவாரண தொகையாக கொடுத்தார்.
இதன்பின்னர் நடிகங் சங்கம், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலருக்கும் நிதியை அளித்துக் கொண்டே இருக்கிறார்.
அவரின் உதவியை நாம் அவ்வளவு எளிதாக பட்டியலிட முடியாது.
இந்த நிலையில் அடுத்த வேளை உணவுக்கே கஷ்டப்படும் ஆதரவற்ற பெரியோர் மற்றும் உணவின்றி தவிக்கும் ஏழை குழந்தைகளுக்கு உணவளிக்க முடிவெடுத்துள்ளார்.
தொகை பற்றாக்குறை காரணமாக தன் தம்பி எல்வினிடம் தன் எண்ணத்தை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து லாரன்ஸ் கூறியதாவது..
என் தம்பி எல்வின் ஆலோசனைப்படி என் குரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் உதவியை கேட்டேன்.
கேட்ட உடனே 100 மூட்டை அரிசிகளை சுதாகர் சார் மூலமாக அனுப்பினார். அவருக்கு நன்றி.
மேலும் எனது வேண்டுகோளை கமல், அஜித், விஜய், சூர்யா ஆகியோரிடமும் தெரிவித்துள்ளேன்.
இவையில்லாமல் நிறைய நடிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களிடம் தெரிவித்துள்ளேன்.
யாராக இருந்தாலும் பணமாக கொடுக்காமல் நிவாரண பொருட்களாக கொடுக்க வேண்டுகிறேன்.
இந்த முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
LARENCCE CHARIRABLE TRUST
2/4 1ST CROSS STREET. 3RD AVENUE, ASHOK NAGAR
CHENNAI 83. PHONE 877 8338209
என தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.
Raghava Lawrence request to Kollywood top Actors