JUST IN சனி & ஞாயிறு முழு ஊரடங்கு.. மற்ற நாட்களில் அரை நாள் ஊரடங்கு.; புதுச்சேரியில் ஆளுநர் அதிரடி

JUST IN சனி & ஞாயிறு முழு ஊரடங்கு.. மற்ற நாட்களில் அரை நாள் ஊரடங்கு.; புதுச்சேரியில் ஆளுநர் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா 2வது அலை வைரஸை கட்டுப்படுத்த புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் ஊரடங்கு கட்டுபாடுகளை விதித்துள்ளார்.

ஆளுநரின் உத்தரவில்…

புதுச்சேரி முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு.

மற்ற நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) கடைகள், அங்காடிகள் பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் அனுமதி.

* தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வயது 18 ஆக குறைக்பட்டுள்ள நிலையில் தேவையான அளவு தடுப்பூசிகளை கொள்முதல் செய்தல்.

* ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துவது பரிசோதனை முடிவுகளை விரைவுபடுத்துவது அதற்குத் தேவையான மருத்துவக் கருவிகளை கூடுதலாக கொள்முதல் செய்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்களின் ஒத்துழைப்போடு செயல்படுத்துவது.

* மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவப் பணிகளுக்காக தேவையான அளவு ஆட்களை நியமனம் செய்தல். மருத்துவப் பணியாளர்களை சுழற்சி முறையில் பணியமர்த்துவது மருத்துவப் பணியாளர்கள் , பிற அதிகாரிகளுக்கு எளிதான பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்களை வழங்குவது.

* மத்திய அரசின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது.

கபசுர குடிநீர் வழங்குவது உள்ளிட்ட இந்திய மருத்துவ வழிமுறைகளை ஊக்கப்படுத்துவது ஆம்புலன்ஸ் ஊர்திகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது.

கொரோனா அழைத்துச் செல்ல தனியான ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பயன்படுத்துவது.

*அறிகுறிகள் காணப்படும் நபர்களை மருத்துவப் பணியாளர்களின் பரிசோதனையைத் தொடர்ந்து மருத்துவமனை அல்லது கொரோனா பாதுகாப்பு மையங்களில் சேர்க்க வேண்டும் .

அதன் மூலம் தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். உணவு மற்றும் பிற தேவைகள் மருத்துவமனைகளில் வழங்கப்பட வேண்டும்.

*புதுச்சேரி முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்துவது மற்ற நாட்களில் கடைகள் அங்காடிகள் பகல் 2 மணி மட்டுமே இயங்கும் அனுமதிக்கப்பட்ட கடைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் .

பகல் 2 மணிக்குப் பிறகு , உணவு விடுதிகளில் உணவு எடுத்துச் செல்ல மட்டும் அனுமதிக்கப்படும்.

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதிக்கப்படுவர் .

*வழிபாட்டுத் தலங்களில் ஊர்வலங்கள் தேரோட்டங்கள் முதலியவை தடை செய்யப்படுகிறது.. கொரோனா வழிமுறைகளோடு வழிபாடு அனுமதிக்கப்படும்.

பாண்லே கடைகள் மூலம் குறைந்த விலையில் முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி நாளை முதல் வழங்கப்படும்

இவ்வாறு ஆளுநர் தமிழிசை அறிவித்துள்ளார்.

Puducherry Lieutenant Governor Tamilisai announced complete lockdown on Sat and Sunday

சன்டே லாக்டவுன்.. நைட் ஷோ கேன்சல்.. தியேட்டர்கள் நிலை குறித்த ஆலோசனை முடிவு இதோ..

சன்டே லாக்டவுன்.. நைட் ஷோ கேன்சல்.. தியேட்டர்கள் நிலை குறித்த ஆலோசனை முடிவு இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tirupur subramaniamகொரோனா 2வது அலை காரணமாக இரவு பத்து மணி முதல் அதிகாலை நான்கு மணி வரை கட்டாய ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் இரவுக்காட்சி திரையிட முடியாது.

ரசிகர்கள் அதிகளவில் திரையரங்குகளுக்கு வரும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை முழுமையான ஊரடங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஏப்ரல் 20 முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது.

இந்த நெருக்கடி சூழல் குறித்து விவாதிக்க தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் இன்று நடைபெற்றது.

அதன்படி …அரசு அறிவுறுத்தலின்படி தொடர்ந்து திரையரங்குகள் இயக்க முடிவு.

தொடர்ந்து அரசு வழிகாட்டுதலின்படி திரையரங்குகள் இயங்கும் எனவும் புதிய அரசு (மே 2 வாக்கு எண்ணிக்கை நாள்) உருவான பிறகு இரவு காட்சிகளை மீண்டும் திரையிட அவரிடம் கோரிக்கை வைக்கப்படும்.

இவ்வாறு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Theatre owners desicion on night show cancel

காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா..; குணமடைய ஸ்டாலின் வாழ்த்து

காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா..; குணமடைய ஸ்டாலின் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rahul gandhi mk stalin (2)காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி மக்களவை எம்.பி.யான ராகுல் காந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதியாகியுள்ளது.

ராகுல் காந்திக்கு தற்போது வயது 50் ஆகிறது.

இதுபற்றி அவரின் டுவிட்டரில்…

“கொரோனா பாதிப்புக்கான லேசான அறிகுறிகள் ஏற்பட்டன.

இதனை தொடர்ந்து பரிசோதனை செய்து கொண்டேன்.

அதில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி, பாதுகாப்புடன் இருங்கள் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

MK Stalin wishes Rahul Gandhi a speedy recovery

நகைச்சுவை நடிகர்களில் துருவ நட்சத்திரம் விவேக்.. பொது வாழ்விலிருந்து விலகும் முடிவை தடுத்தார்.. – தமிழருவி மணியன் இரங்கல்

நகைச்சுவை நடிகர்களில் துருவ நட்சத்திரம் விவேக்.. பொது வாழ்விலிருந்து விலகும் முடிவை தடுத்தார்.. – தமிழருவி மணியன் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார்.

இந்நிலையில், நடிகர் விவேக்கிற்கு இரங்கல் தெரிவித்து தமிழருவி மணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “ஓராண்டுக்கு முன்பு முன்னணி இதழில் விவேக் வழங்கிய நேர்காணலில், நம் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு இல்லை.

‘தமிழருவி மணியன் என்ற நேர்மையாளருக்கு என்ன அங்கீகாரத்தை இவர்கள் தந்து எந்தப் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தனர்?’ என்று கேட்டிருந்ததைக் கண்டு நான் வியந்தேன்.

அவருக்கும் எனக்கும் அன்றுவரை நேரடித் தொடர்பு இருந்ததில்லை. நான் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நன்றி சொன்னேன்.

ஒருநாள் சாலிகிராமத்திலுள்ள விவேக் வீட்டிற்குச் சென்றிருந்தேன். மனம் நெகிழ்ந்து வாசலில் வரவேற்றார். ஒருமணி நேரம் இருவரும் பேசினோம். அவருடைய பல்துறை அறிவாற்றலும், மனிதநேயமும், சமூக நலனில் அவருக்கு இருக்கும் உண்மையான அக்கறையும், தூய்மையான அரசியல் இந்த மண்ணில் மீண்டும் மலரவேண்டும் என்ற அவருடைய ஏக்கமும் எனக்கு வியப்பை ஏற்படுத்தின.

சந்திப்பின் முடிவில், அவருடைய நினைவாக வைத்துக்கொள்ளும்படி ஒரு விலையுயர்ந்த பேனாவை எனக்களித்தார்.

‘அன்பைத்தவிர வேறு எதையும் எவரிடத்தும் நான் பெறுவதில்லை’ என்று மறுத்துவிட்டேன்.

பொய்த்தனமும் போலியும் மலிந்த அரசியலிலிருந்து முற்றிலும் நான் விலகுவதாக அறிவித்த அறிக்கையை வாசித்த விவேக் “ஒரு பேனாவைக்கூட பெற மறுக்கும் ஒருவர் பொது வாழ்விலிருந்து விலகுவதென்று எடுத்த முடிவைத் திரும்பப் பெறவேண்டும்” என்று ட்வீட் செய்து தொலைப்பேசியிலும் என்னை அழைத்து ‘விலக வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார்.

என்னுடைய ‘வழிப்போக்கனின் வாழ்க்கை அனுபவங்கள்’ நூலைக் கடந்த ஆண்டு கொரோனா சூழலில் வாசித்துக் கொண்டிருப்பதாகப் பதிவிட்டதோடு தொலைப்பேசியிலும் அழைத்துப் பேசிய விவேக், ‘கொரோனாவின் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தவுடன் நாம் அவசியம் சந்திக்கவேண்டும். நிறையப் பேசவேண்டும்’ என்றார்.

ஆனால், கருணையற்றக் காலம் நொடிப்பொழுதில் அந்த அற்புதமான கலைஞனை, நெறி சார்ந்து வாழ்ந்த நல்லவனை, இயற்கையை நேசித்த இனிய பண்புகள் கொண்டவனை, மனித நேயம் மிக்கவனை, சிரிக்கவைத்து சிந்தனையைத் தூண்டியவனை, நம்மிடமிருந்து பறித்துக்கொண்டது. நகைச்சுவை நடிகர்களில் துருவ நட்சத்திரமாகத் துலங்கியவர் விவேக்”

என்று உருக்கமாகத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் தமிழருவி மணியன்.

Tamilaruvi Manian condolence message to Actor Vivek

vivek Tamilaruvi manian

‘ஷீரோ’ என்ற மலையாள த்ரில்லர் படத்தில் சன்னி லியோன்

‘ஷீரோ’ என்ற மலையாள த்ரில்லர் படத்தில் சன்னி லியோன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sunny leone shero (2)உலக சினிமா ரசிகர்களை தன் கவர்ச்சியால் கிறங்கடித்தவர் நடிகை சன்னி லியோன்.

இவர் ஒரு முறை கேரளா வந்த போது பிரபலமான திருச்சூர் பூரம் திருவிழாவை மிஞ்சும் அளவுக்கு கூட்டம் கூடியது.

ஓரிரு மலையாள படங்களிலேயே இதை கிண்டலடித்து வசனங்கள் வந்துள்ளன.

தமிழ் சினிமாவில் வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார் சன்னி.

மலையாளத்தில் மம்மூட்டி உடன் ‘மதுர ராஜா’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார் சன்னி லியோன்.

மேலும் ‘ரங்கீலா’ மலையாளப் படத்தில் நடித்தார்.

இந்நிலையில், Shero (ஷீரோ) என்ற சைக்கலாஜிகல் த்ரில்லர் படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமானார் சன்னி.

இந்த படத்தை ஸ்ரீஜித் விஜயன் இயக்குகிறார்.

இந்த படம் மலையாளத்தில் உருவாகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் இப்பட சூட்டிங்குக்காக கேரளா வந்திருக்கும் சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராமில் பியூட்டி ஆஃப் கேரளா என (இயற்கை பின்னணி) தன் போட்டோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

Actress Sunny leone to play lead role in malayalam thriller movie Shero

இந்தியாவிலேயே அதிகளவில் கொரோனா தடுப்பூசிகளை வீணடித்த தமிழ்நாடு..!

இந்தியாவிலேயே அதிகளவில் கொரோனா தடுப்பூசிகளை வீணடித்த தமிழ்நாடு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Covid Vaccine (2)உலகமெங்கும் கொரோனா வைரஸின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு தற்போது அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பே களப்பணியாளர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டுக்கு இதுவரை 47,03,590 கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் மற்றும் 8, 82,130 கோவாக்சின் வந்துள்ளன.

ஆக மொத்தம் 55 லட்சத்து 85 ஆயிரத்து 720 தடுப்பு மருந்துகள் வந்துள்ளன.

தற்போது வரை 48 லட்சத்து 7 ஆயிரத்து 148 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
கையிருப்பு 4.1 லட்சம் உள்ளது.

அதன்படி சுமார் 3 லட்சம் தடுப்பு மருந்துகள் வீணாகியுள்ளன.

இந்த நிலையில் இந்தியாவிலேயே அதிகமான தடுப்பூசிகள் தமிழ்நாட்டில்தான் வீணாகி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதுவரை 12.1% தடுப்பு மருந்துகள் தமிழ்நாட்டில் வீணாகி உள்ளதாம்.

கொரோனா தடுப்பூசிகள் 10 டோஸ் அல்லது 20 டோஸ் என்று ஒரு குப்பியில் (பாட்டில்) வரும்.

ஒரு பாட்டிலை திறந்த பிறகு 4 மணி நேரத்திற்குள் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

ஒருவேளை பாட்டிலை திறந்த அன்று தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அவற்றை எடுத்து வைக்க கூடாது.

எடுத்து வைத்தாலும் அவற்றை அடுத்த நாள் உபயோகிக்க முடியாது.

இவ்வாறாக தமிழ்நாட்டில் 12.1% சதவீத தடுப்பு மருந்துகள் வீணாகி உள்ளன.

44 lakh vaccine doses wasted; TN tops list with 12.19%

More Articles
Follows