தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா 2வது அலை வைரஸை கட்டுப்படுத்த புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் ஊரடங்கு கட்டுபாடுகளை விதித்துள்ளார்.
ஆளுநரின் உத்தரவில்…
புதுச்சேரி முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு.
மற்ற நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) கடைகள், அங்காடிகள் பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் அனுமதி.
* தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வயது 18 ஆக குறைக்பட்டுள்ள நிலையில் தேவையான அளவு தடுப்பூசிகளை கொள்முதல் செய்தல்.
* ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துவது பரிசோதனை முடிவுகளை விரைவுபடுத்துவது அதற்குத் தேவையான மருத்துவக் கருவிகளை கூடுதலாக கொள்முதல் செய்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்களின் ஒத்துழைப்போடு செயல்படுத்துவது.
* மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவப் பணிகளுக்காக தேவையான அளவு ஆட்களை நியமனம் செய்தல். மருத்துவப் பணியாளர்களை சுழற்சி முறையில் பணியமர்த்துவது மருத்துவப் பணியாளர்கள் , பிற அதிகாரிகளுக்கு எளிதான பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்களை வழங்குவது.
* மத்திய அரசின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது.
கபசுர குடிநீர் வழங்குவது உள்ளிட்ட இந்திய மருத்துவ வழிமுறைகளை ஊக்கப்படுத்துவது ஆம்புலன்ஸ் ஊர்திகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது.
கொரோனா அழைத்துச் செல்ல தனியான ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பயன்படுத்துவது.
*அறிகுறிகள் காணப்படும் நபர்களை மருத்துவப் பணியாளர்களின் பரிசோதனையைத் தொடர்ந்து மருத்துவமனை அல்லது கொரோனா பாதுகாப்பு மையங்களில் சேர்க்க வேண்டும் .
அதன் மூலம் தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். உணவு மற்றும் பிற தேவைகள் மருத்துவமனைகளில் வழங்கப்பட வேண்டும்.
*புதுச்சேரி முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்துவது மற்ற நாட்களில் கடைகள் அங்காடிகள் பகல் 2 மணி மட்டுமே இயங்கும் அனுமதிக்கப்பட்ட கடைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் .
பகல் 2 மணிக்குப் பிறகு , உணவு விடுதிகளில் உணவு எடுத்துச் செல்ல மட்டும் அனுமதிக்கப்படும்.
திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதிக்கப்படுவர் .
*வழிபாட்டுத் தலங்களில் ஊர்வலங்கள் தேரோட்டங்கள் முதலியவை தடை செய்யப்படுகிறது.. கொரோனா வழிமுறைகளோடு வழிபாடு அனுமதிக்கப்படும்.
பாண்லே கடைகள் மூலம் குறைந்த விலையில் முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி நாளை முதல் வழங்கப்படும்
இவ்வாறு ஆளுநர் தமிழிசை அறிவித்துள்ளார்.
Puducherry Lieutenant Governor Tamilisai announced complete lockdown on Sat and Sunday