தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புதுச்சேரி அரசு சார்பில் ரூ.10,100 கோடிக்குத் தயார் செய்து அனுப்பப்பட்ட திட்ட வரையறைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
எனவே அதன் அடிப்படையில் புதுச்சேரியின் முதல் அமைச்சரும், நிதித்துறை அமைச்சருமான என் ரங்கசாமி 2020-2021 ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை கவர்னர் உரையுடன் தொடங்கிது.
புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முதலாக கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழில் கவர்னர் உரையை வாசித்தார்.
இன்றைய பட்ஜெட் சிறப்பம்சங்கள்..:
புதுச்சேரியில் 9,924 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.
இதில் பட்ஜெட்டில் மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.6,190 கோடியாக உள்ளது.
இந்த நிதிநிலை அறிக்கையில், ரூ.2140 கோடி சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கும், ரூ.1715 கோடி கடன் மற்றும் வட்டிக்கும், ரூ.1591 கோடி மின்சாரம் வாங்கவும், ரூ.1290 கோடி முதியோர் ஓய்வூதியத்திற்கும், ரூ.1243 கோடி பொதுத்துறை நிறுவனங்களுக்கு மானியம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர்மட்டத்தைப் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உயர்த்த பிரதான் மந்திர் திட்டத்தின் கீழ் தடுப்பணைகள் கட்டப்பபடும்.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்படும்.
காரைக்கால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 60 லட்சம் ரூபாய் செலவில் 6 புதிய கிணறுகள் அமைக்க உள்ளது.
விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் ஏக்கருக்கு ரூபாய் 5,000 மானியம் வழங்கப்படும்.
புதுச்சேரியில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன, விவசாயிகளுக்கு 10 ஆயிரம் தேக்கு, சந்தன மரங்கள் வழங்கப்படும்.
பசுமை புதுச்சேரி திட்டத்தின் கீழ் செங்குத்து தோட்டம் உருவாக்கப்படும்.
ஆரோக்கியமான கன்றுகள் வளர்ப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
விவசாயத்தில் ஈடுபடும் மகளிர் மற்றும் சுயஉதவிக்குழுவினுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
புதிய உழவர் சந்தைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கறவை மாடுகள் பாராமரிக்கவும், கூட்டுறவு சங்கங்களில் அல்லாதவர்களுக்கு 75 விழுக்காடு மானியத்தில் தீவனம் நடப்பாண்டு வழங்கப்படும்.
இலவச அரிசி வழங்க ரூ.197.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் தொடர்ந்து இயக்குவதற்கான சத்திய கூறுகள் ஆராயப்படும்.
100% கல்வி அறிவு பெற்ற மாநிலமாக மாற்ற அரசு பாடுபடும்.
மாணவர் இடை நிற்றலை தவிர்க்க கல்வி கற்க தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும்.
இதற்காக கல்வித்துறைக்கு ரூ.742 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
புதுச்சேரி மாநிலத்தில் மின் பற்றாக்குறை இல்லை. 24 மணி நேரமும் மின் இணைப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும்.
மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்த்தி வழங்க நடவடிக்கை.
கடலில் மீன்பிடிக்கும் போது உயிரிழந்தால் அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
புதுச்சேரியில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடன்பெற்றுள்ள விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி.
கிழக்கு கடற்கரை சாலையில் சாலையில் அனைத்து வசதிகள் உள்ளடக்கிய வேளாண் நவீன வளாகம் அமைக்கப்படும்.
புதுச்சேரியில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த வரும் செப். 23 மற்றும் 24ந்தேதி தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்.
திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலை சுற்றி, தேரோடும் நான்கு வீதிகளையும் செப்பனிட ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
5 கோடி ரூ. செலவில் கட்டப்படும் நீச்சல் குளம் இந்த ஆண்டு திறக்கப்படும்.
2 கோடி ரூபாய் செலவில் பாகூரில் புதிய பேருந்து நிலையம், ஏனாமில் 7 கோடி மதிப்பில் ஏ.என்.எம். பள்ளி அமைக்கப்படும்.
மாகி பகுதியில் 19 கோடி ரூபாய் செலவில் கடலோர காவல் நிலையம், தங்கும் விடுதி அமைக்கப்படும்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் ஆடுகள் வாங்க கடன் வழங்கப்படும்.
கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்படும்.
அரிசி, பருப்பு, எண்ணெய், தானியங்கள் உள்ளிட்டவைகளை நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும்.
புதுச்சேரியில் மூட்டப்பட்டுள்ள நியாவிலைக் கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
புதுச்சேரி மாநிலத்தில் ஆதி திராவிட மணமகள் நிதியுதவி திட்டம் ரூ. 75,000 இருந்து ரூ.1,00,000 ஆக உயர்த்தப்படும்.
பாட்கோ கடன் தள்ளுபடி செய்யப்படும்.
இவ்வாறு பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
Puducherry government budget highlights 2021