தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
என் நாடக காதல்.: 60 கிலோ தாங்கிய திவ்யா.. என்னை புரிந்து கொள்ளவே ‘வாழை’.. – மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவரது மனைவி திவ்யா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வாழை’.
ஓடிடி தளத்திற்காகவே உருவாக்கப்பட்ட இந்த படத்தை ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரித்தது.. ஆனால் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தை ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்கில் வெளியிட உள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் கலையரசன் நாயகனாக நாயகிகளாக திவ்ய துரைசாமி மற்றும் நிகிலா விமல் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள தென்கிழக்கு என்ற பாடலை பாடகி தீ பாடியிருக்கிறார். இந்த பாடல் வெளியீட்டை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.
அப்போது நாயகி திவ்யா துரைசாமி பேசியதாவது..
பத்திரிக்கையாளர்கள் உங்களுடன் நான் அமர்ந்து இந்த மேடையை பார்த்திருக்கிறேன். அதுபோல இந்த மேடையில் இருந்தும் உங்களை நான் பார்த்து இருக்கிறேன்.. பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறேன்.
ஆனால் இந்த முறை நான் ஒரு நடிகையாக இங்கே நிற்கிறேன்.. கொஞ்சம் நடுக்கம் இருக்கிறது..
வாழை படத்திற்காக என்னை மாறி செல்வராஜை தொடர்பு கொண்ட போது ‘வாழை’ என்னுடைய லட்சியப் படம்..கனவு படம் என்றார். அதற்கு நீங்கள் தயார் என்றால் நீங்கள் நடிக்கலாம் என்றார்.. அதன்படியே நான் என்னை முழுவதுமாக இந்தப் படத்திற்காக சரண்டர் செய்து விட்டேன்.. படமும் சிறப்பாக வந்திருக்கிறது.” என்று பேசினார் திவ்யா.
இந்த படத்திற்காக வாழை இலை கலரில் அழகான பச்சை கலர் உடை அணிந்து வந்திருந்தார் திவ்யா
பின்னர் மாரி செல்வராஜ் பேசியதாவது…
என்னை பாதித்த சம்பவங்களை தான் நான் படமாக்கிக் கொண்டு இருக்கிறேன்.. என்னுடைய முதல் படைப்பாக வாழை என்ற இந்த படத்தை இயக்கத் தயாராக இருந்தேன்.. ரூ. 50 லட்சத்தில் இந்த படத்தை முடித்து விடலாம் என காத்திருந்தேன்.
ஆனால் அதற்குள் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானேன். அதன் பின்னர் கர்ணன் & மாமன்னன் என்ற அடுத்த அடுத்த படங்களை இயக்கி விட்டேன்.
மாமன்னன் படத்தை இயக்கும்போதே ‘வாழை’ படத்தை இயக்க வேண்டும் என்று எண்ணம் அதிகமாகவே இருந்தது.. எனவே உடனே தொடங்கி விட்டேன்.
இதன் பின்னர் துருவ் நடிக்கும் பைசன் என்ற படத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறேன்.. இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த சிறுவன் இப்போது பெரிய பையனாகி விட்டான்.. அவன் என் உறவினர் தான்..
அவன் என்னை பார்த்து ஏதோ ஒன்று கேட்பது போலவே இருந்தது.. நீங்கள் அடுத்தடுத்து படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.. எங்கள் படத்தை எப்போது ரிலீஸ் செய்வீர்கள் என்பது போலவே கேள்வி இருந்தது?
இதில் இடம்பெற்ற ‘பாதகத்தி’ பாடல் என்னை தொந்தரவு செய்து கொண்டேயிருக்கிறது.
நான் பட்ட கஷ்டங்களை நீங்கள்பட வேண்டும் என்று கூறிதான் நடிகர்களிடம் வேலை வாங்கினேன்.
நிகிலா விமலுக்கு சிரமமான காட்சிகள் இல்லை.. ஆனால் கலையரசன் 100 கிலோ வெயிட்டை தலையில் சுமந்திருந்தார். திவ்யா துரைசாமி 60 கிலோ எடையை தூக்கினார். நிறைய முறை ரீடெக் வேறு எடுத்தேன்.. அவ்வளவு பாரத்தை சுமந்தால் கழுத்து வலி அதிகமாகவே இருக்கும்.. ஆனாலும் எனக்காக கடுமையாக உழைத்தார்கள்.. பார்க்கவே பாவமாக இருக்கும்.
என் வாழ்வில் நடந்த ஆகப்பெரும் துயரத்தை மனைவி திவ்யா தயாரிப்பார் என நான் நினைத்துப் பார்த்து கிடையாது.
நானும் என் மனைவியும் காதல் செய்து திருமணம் செய்து கொண்டோம்.. என்னுடைய காதல் நாடக காதல்.. என்னைப் பற்றியும் சினிமா பற்றியும் நிறைய தெரிந்து வைத்திருப்பவர் திவ்யா.. எனவே என் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டேன்.. என் வாழ்க்கையில் மீளமுடியாத துயரம் ‘வாழை’.
என்னைப்பற்றி நிறைய கேள்விகள் உங்களிடம் இருக்கும். என்னை நீங்கள் புரிந்துகொள்ள எடுக்கப்பட்ட படம் தான் இந்த வாழை.. இந்தப் படத்தை பற்றி பேச இன்னும் நிறைய இருக்கிறது.. அடுத்தடுத்த மீட்டிங்கில் சந்திக்கும்போது பேசலாம்..” என்றார்.
Public will understand me from Vaazhai says Mari Selvaraj





