தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினி-விஜய்-தனுஷ் வர்றாங்க.. அசோக் செல்வனால் வர முடியாதா? ETR பட விழாவில் தீயாய் திருமலை
போர் தொழில் & ப்ளூ ஸ்டார் ஆகிய படங்களைத் தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’.
அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் எழுதி இயக்கி இருக்கிறார்.
‘எமக்குத் தொழில் கவிதை’ என்ற பாரதியாரின் கவிதை வரிகளை சற்று மாற்றி டைட்டிலாக்கியிருக்கிறார்கள்.
ரொமான்டிக் நாயகன் மற்றும் அவனது நண்பர்கள் குடும்பத்தை பற்றிய கதையை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கி இருக்கின்றனர்.
அசோக் செல்வன் நாயகனாக நடிக்க அவந்திகா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து உள்ளார்.
எம்.எஸ்.பாஸ்கர், அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். நடிகை ஊர்வசி முக்கிய கேரக்டர் நடித்துள்ளார்.
இப்படத்தை பிரபல இயக்குனர் திருமலை தயாரித்துள்ளார்.
இந்தப் படம் திரைக்கு வர தயாராகி கிட்டத்தட்ட சில மாதங்கள் ஆன நிலையில் தற்போது இந்த படத்தின் பிரஸ்மீட் இன்று ஜூலை 27 சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்த் திரையுலக பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.. பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி, தயாரிப்பாளர்கள் டி சிவா, கே ராஜன் இயக்குனர் எழில் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.. ஆனால் படத்தின் நாயகன் அசோக் செல்வன் இந்த விழாவை புறக்கணித்து இருந்தார்.
இந்த நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் திருமலை பேசும்போது…
அசோக் செல்வனால் இந்த படத்தில் ஏகப்பட்ட பிரச்சனை.. அவர் இந்த விழாவுக்கு வரவில்லை. அவருக்கு என்ன பிரச்சனை என்று கூட சொல்லவில்லை. யாரிடம் சென்று பேசுவது என்பது கூட தெரியவில்லை.
தற்போது அசோக் செல்வன் சம்பளமாக 2 கோடி வரை கேட்கிறார்.. ஆனால் இந்த படத்தில் அவர் நடிக்கும் போது 35 லட்சம் வரை சம்பளம் வாங்கினார்.. இன்று அவர் கோடி கணக்கில் சம்பளம் பெற தொடங்கி விட்டார்.. ஆனால் அவர் பழசை மறந்து விட்டார்.
ரஜினிகாந்த் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்.. அவர் நினைத்திருந்தால் எந்த ஒரு ப்ரொமோஷனுக்கும் வராமல் கூட இருந்திருக்கலாம்.. அவர் வராமலே படம் ஹிட்டு அடிக்கும். ஆனாலும் படத்தின் இசை நிகழ்ச்சி முதல் எல்லா நிகழ்ச்சிகளும் அவர் கலந்து கொள்கிறார்.
அதுபோல நடிகர் விஜய்யும் பங்கு பெறுகிறார்.. அவர் விழாக்களில் கலந்து கொண்டு கதைகள் பேசுகிறார்.. அதுபோல் தனுஷும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் வருகிறார்.. ஆனால் அசோக் செல்வனால் வர முடியாதா.?..
நடிகர்கள் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு கட்டாயத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று பேசினாலர் தயாரிப்பாளர் திருமலை.
பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி பேசும் போது…
ஒரு போலீஸ்காரன் நாட்டில் திருட்டு நடக்கிறது என்று தெருவில் வந்து கத்திக் கொண்டிருந்தால் ஆகாது.. அது போல தான் இங்கே வந்து திருமலை தயாரிப்பாளர்களை குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட அவரே ஒரு பொறுப்பில் உள்ள நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டு இருக்கலாம்..
மேலும் அசோக் செல்வனுக்கும் அவருக்கும் என்ன பிரச்சனை நடந்தது எனக்கு தெரியாது.. ஆனால் நான் பார்த்தவரை ஒரு நல்ல பண்பாளராக அசோக் செல்வன் நடந்து கொண்டார்.
மேலும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் நிச்சயம் பிரஸ்மீட் மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும்.
ஒரு படம் வெற்றி பெற்றால் அதில் 80% லாபம் நடிகர் நடிகைகளுக்கு செல்கிறது. அதாவது நான் பணத்தை சொல்லவில்லை. ஒரு படம் வெற்றி பெற்றால் அவர்கள் அடுத்தடுத்த படங்களில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் நிறைய வாய்ப்புகள் லாபம் வருகிறது.
அவர்கள அடுத்து 25% டெக்னீசியன்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் தயாரிப்பாளர் அதே நிலையில் தான் இருக்கிறார்.
எனவே படத்தில் நடிக்கும் ஹீரோக்கள் அவர்கள் அதிக லாபம் பெறும் நிலையில் படத்தின் ப்ரமோசோர்களுக்கு வந்து துணை புரிய வேண்டும்” என்று பேசினார் ஆர்கே செல்வமணி..
Producer Thirumalai condemns Actor Ashok Selvan






