ரஜினியின் ‘தலைவர் 169’ அப்டேட் : மீண்டும் நெல்சன் இயக்கத்தில் பிரியங்கா

ரஜினியின் ‘தலைவர் 169’ அப்டேட் : மீண்டும் நெல்சன் இயக்கத்தில் பிரியங்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்தாண்டு 2021ல் வெளியான டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன்.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். காமெடியாக உருவான இந்த படம் வசூலில் கல்லா கட்டியது.

கடந்த வாரம் தியேட்டர்களில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரியங்கா.

ஆதினி என்ற கிராமத்து பெண் வேடத்தில் அசத்தியிருந்தார். இப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிற நிலையில் மீண்டும் நெல்சன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் தான் பிரியங்காவுக்கு இந்த வாய்ப்பு அமைந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘தலைவர் 169’ படத்தில் ரஜினிக்கு மகளாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ரஜினியுடன் முக்கிய வேடத்தில் சரண்யா பொன்வண்ணன் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Priyanka in Rajinikanths Thalaivar 169 with Nelson

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் ரியல் ஹீரோ சினிமாவில் நடிக்கிறார்

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் ரியல் ஹீரோ சினிமாவில் நடிக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக காவல்துறையை போற்றியும் கழுவி ஊற்றியும் நிறைய படங்கள் தமிழ் சினிமாவில் இடம் பெற்றுள்ளன.

பெரும்பாலும் ஹீரோ போலீசாக இருந்தால் அந்த படத்தில் காவலர்களை நல்லவர்களாக காட்டியிருப்பார்கள். ஒருவேளை வில்லன் போலீசாக இருந்தால் அந்த படத்தில் காவலர்களை மிக மோசமாக காட்டியிருப்பார்கள்.

சில வருடங்கள் முன் வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்த வெளியான படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’.

இதில் காவலர்களை நேர்மையாளர்களாக காட்டியிருந்தார் வினோத்.

இந்த படத்தில் பவாரியா கொள்ளை சம்பவ வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் போலீசாக நடித்திருத்தார் கார்த்தி.

இது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம். தமிழக முன்னாள் டிஜிபி ஆன எஸ்.ஆர்.ஜாங்கிட் தான் இந்த உண்மை கதைக்கு காரணமாக அமைந்தவர். இவர் காவல்துறையில் பணியாற்றிய போது குற்றவாளிகளுக்கு சிம்மசொப்பனாக இருந்தார். இவரது பணியை மக்கள் பலரும் பாராட்டினர்.

இந்த நிலையில் தற்போது ஆன எஸ்.ஆர்.ஜாங்கிட் தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கியுள்ளார்.

விமல், தன்யா ஹோப் நடிப்பில் உருவாகி வரும் ‛குலசாமி’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ஜாங்கிட்.

இந்த படத்தை ‛குட்டிப்புலி’ புகழ் ஷரவணஷக்தி இயக்க நடிகர் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ளார்.

குலசாமி பட மோசன் போஸ்டர் நேற்று வெளியானது. அதை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து, தான் நடிப்பதை தெரிவித்துள்ளார் ஜாங்கிட்.

விரைவில் தமிழர்களுக்கு தரிசனம் தருவார் குலசாமி.

Theeran Adhigaram Ondru real hero turns reel hero

சூர்யாவுக்கு ஒரே ஹிட்டு..; தனுஷூக்கு ஒரே ப்ளாப்..

சூர்யாவுக்கு ஒரே ஹிட்டு..; தனுஷூக்கு ஒரே ப்ளாப்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2020 மற்றும் 2021 ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஓடிடி தளங்கள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கின.

ஊரடங்கிற்கு பின்னர் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் ஓடிடி தளங்களை நாடியது. இதில் சில படங்களுக்கு மட்டுமே ஓடிடியில் வாய்ப்பு கிடைத்தது.

ஓடிடியில் ரிலீசான சில படங்களுக்கு மட்டுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை டாப் ஹீரோக்கள் தங்கள் படங்களை தியேட்டர்களில் வெளியிடவே காத்திருந்தனர்.

ஆனால் சூர்யா தான் தயாரித்த பல படங்களை ஓடிடியில் வெளியிட்டார்.

பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் உள்ளிட்ட படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்தார். இவை நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் இந்த படங்களில் இவர் நடிக்கவில்லை.

இவர் தயாரித்து நடித்த சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய படங்களையும் ஓடிடியில் ரிலீஸ் செய்தார். இவை இரண்டும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.

இவரை தொடர்ந்து ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை மற்றும் விக்ரம் நடித்த மகான் ஆகிய படங்களும் ஓடிடியில் வெளியானது. இதற்கும் வரவேற்பு கிடைத்தன.

அதுபோல் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் மற்றும் மாறன் ஆகிய இரண்டு படங்களும் ஓடிடியில் வெளியானது. (மாறன் படம் சில தினங்களுக்கு முன் வெளியானது.) ஆனால் இவையிரண்டும் மோசமான விமர்சனங்களை பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது.

ஆக.. ஓடிடி தளங்கள் சூர்யாவுக்கு ராசியாகவும் தனுஷிற்கு மோசமாகவும் அமைந்துள்ளது.

Suriya and Dhanush films OTT release comparison

முதன்முறையாக அஜித் படத்தை தயாரிக்கும் லைகா.; இயக்குனர் இவரா.?

முதன்முறையாக அஜித் படத்தை தயாரிக்கும் லைகா.; இயக்குனர் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று லைகா.

ரஜினிகாந்த் நடித்த 2.0 மற்றும் தர்பார், விஜய் நடித்த கத்தி, சூர்யா நடித்த காப்பான், சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தையும் லைகாவே தயாரித்து வருகிறது.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இந்த நிலையில் முதன்முறையாக அஜித் நடிக்கவுள்ள ஒரு படத்தை லைகா தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

போனி கபூர் தயாரிக்கும் AK 61 படத்தில் நடித்து முடித்துவிட்டு லைகா படத்தை அஜித் நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

அஜித் அனிருத் மற்றும் லைக்கா இணையும் படத்தை விஷ்ணுவர்தன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மற்றொரு புறம் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் கதை கேட்டு வருகிறதாம் லைகா என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Lyca to produce Ajith film for their next ?

கேரள சர்வதேச திரைப்பட விழாவில் கமல் சிவகுமார் பங்கேற்பு.?

கேரள சர்வதேச திரைப்பட விழாவில் கமல் சிவகுமார் பங்கேற்பு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரள சர்வதேச திரைப்பட விழா, மார்ச் 18 முதல் 25 ஆம் தேதி வரை கேரளாவில் நடைபெறவுள்ளது.

இதன் தொடக்க விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துக் கொண்டு தலைமையேற்கிறார்.

இந்த திரைப்பட விழாவில் சுமார் 175 திரைப்படங்கள் 15 தியேட்டர்களில் திரையிடப்படும் எனத் தெரிகிறது.

மேலும் சாதனை புரிந்த மறைந்த திரையுலக ஆளுமைகளுக்கு உரிய மரியாதை இந்த விழாவில் அளிக்கப்படவுள்ளது.

மறைந்த பிரபல மலையாள இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய தமிழ் படமான ‘மறுபக்கம்’ இந்த விழாவில் திரையிடப்படுகிறது.

1991ல் வெளியான ‘மறுபக்கம்’ படத்தில் சிவகுமார், ராதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 3 தேசிய விருதுகளை இந்த படம் வென்றுள்ளது. எனவே சிவகுமார் இந்த விழாவில் பங்கேற்க உள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் இந்த விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

கமல், கௌதமி, கரண் நடித்த நம்மவர் (1994) படத்தையும் கே.எஸ்.சேதுமாதவனே இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan and Sivakumar to attend Kerala film festival?

ரஹ்மான் – பார்த்திபன் கூட்டணிக்கு கை கொடுக்கும் மணிரத்னம்

ரஹ்மான் – பார்த்திபன் கூட்டணிக்கு கை கொடுக்கும் மணிரத்னம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகராக பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது தன் பாணியிலான வித்தியாசமான படங்களை இயக்கி வருபவர் பார்த்திபன்.

இவர் இயக்கி இவர் மட்டுமே நடித்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படம் ஓரிரு ஆண்டுகளுக்கு முன் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது.

இந்த படம் தேசிய விருதையும் பெற்றது.

இவரின் அடுத்த முயற்சியாக சிங்கிள் ஷாட் முறையில் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தை சர்வதேச திரைப்பட விழாவுக்கு அனுப்பி வைத்துள்ளார் பார்த்திபன். ஆனால் இதனை சிங்கிள் ஷாட் படம் என்பதை அவர்கள் ஏற்க மறுப்பதாக யுத்த சத்தம் பிரஸ்மீட்டில் வேதனையுடன் தெரிவித்தார்.

இந்த நிலையில் இரவின் நிழல் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் மணிரத்னம் வரும் மார்ச் 19ம் தேதி வெளியிடுகிறார் என அறிவித்துள்ளனர்.

Parthiban’s first look poster will be released by Mani ratnam

More Articles
Follows