தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்க பலர் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் முயன்றனர்.
ஆனால் லைகா நிறுவனத் தயாரிப்பில் அதை சாத்தியமாக்கி வருகிறார் இயக்குநர் மணிரத்னம்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் அறிவிப்பு வெளியானது.
இதில் விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, பேபி சாரா, த்ரிஷா, பிரபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ஆதித்த கரிகாலனாக விக்ரமும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடித்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் இந்த படத்தில் நடிக்க நீண்ட தலை முடி வளர்த்து வருவதை நாம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பார்த்து வருகிறோம்.
ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய தோட்டாதரணி கலை பணியை செய்ய ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்கிறார்.
இந்த படம் விரைவில் முழுப்படமாக உருவாகி திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்தனர்.
இந்த நிலையில் பாகுபலி பாணியில் இரண்டு பாகங்களாக வெளியாகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பான போஸ்டரில் PS 1 என ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
(‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’) வரும் 2022 ஆம் ஆண்டு வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் பொற்காலம் வாழ்வில் வருகிறது எனவும் லைகா தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
The golden era comes to life! #PonniyinSelvan #PS1 #ManiRatnam @MadrasTalkies_ https://t.co/RHbwDoMv22
Ponniyin Selvan release date announced