தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய கடைகளான மளிகை & காய்கறி கடைகள் மட்டுமே திறக்க அனுமதியளிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி & காரைக்கால் பகுதிகளில் மதியம் வரை கடைகள் திறக்க அனுமதி அமலில் உள்ளது.
இவர்களும் மக்கள் மீது அக்கறையில்லாமல் வாய்க்கு வந்தபடி காய்கறிக்கு விலை சொல்லி ஏமாற்றுகின்றனர்.
ஊரடங்கால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. குழந்தைகள் தங்கள் படிக்கும் வகுப்பையே மறந்து விட்டனர்.
மேலும் சலூன், ஒர்க் ஷாப், வெல்டிங், தனியார் நிறுவன ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவற்றை எல்லாம் நினைத்து கவலைப்படாமல் இதற்கெல்லாம் குரல் கொடுக்காமல் சரக்கடிக்காமல் ஒருவர் இறந்துவிட்டதாக கூறி மதுக்கடைகளை திறக்க ஆளுநரிடம் கோரிக்கை ஙைத்துள்ளார் புதுச்சேரி பிஜேபி எம்எல்ஏ ஜான்குமார். அவரின் ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.
குடிக்காரர்கள் குடிக்கட்டும்.. குடித்து குடித்து செத்து கூட மடியட்டும். அதனால் உங்களுக்கு என்ன பிரச்சினை என கேட்பவர்களுக்கு… “சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.
மதுக்கடைகளில் நிச்சயம் சமூக இடைவெளி என்பதே கிடையாது. இதனால் கொரோனா வைரஸ் எளிதாக பரவும்.
மது கடைக்கு மதுபிரியர்கள் சென்று வீட்டிற்கு திரும்ப வந்தால் அவர்களால் குடும்பத்தினருக்கு தொற்று ஏற்படும். இதனால் சின்ன சின்ன குழந்தைகள் வரை பாதிக்கப்படுவர்.
இதனால் சமூகம் முற்றிலும் பாதிக்கப்படக் கூடிய அபாயம் உருவாகும். எனவே தான் மதுக்கடைகள் திறக்கப்படவே கூடாது என்கிறோம்.
*ஜான்குமார் யார்.? ஒரு பார்வை..*
புதுச்சேரியில் கடந்த 2019-ம் ஆண்டு காமராஜர் நகர் இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் எம்.எல்.ஏ ஜான்குமார், தனது சொத்துகளை மறைத்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய குற்றத்திற்காக வழக்கும் இவர் மீது போடப்பட்டது.
2021 பிப்ரவரியில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஜான் குமார் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காங்கிரஸ் தலைமையிலான நாராயணசாமி ஆட்சி பெருன்பான்மை இழந்தது. ஆட்சி பறிபோனது.
தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வில் இணைந்தார் ஜான்குமார்.
அவரும் 2021 சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்வதை விட மதுக்கடைகளை திறக்க ஆடியோ வெளியிட்டுள்ளார் இந்த எம்எல்ஏ ஜான்குமார். இதுவல்லவோ பொது நலம்..??
Pondy BJP MLA John Kumar controversy audio goes viral
மதுக்கடைகளை திறக்க போராடும் பிஜேபி MLA #ஜான்குமார்.; வைரலாகும் ஆடியோ..! இவர்தான் மக்களை காப்பாற்றுவாரா.?#JohnKumar #FilmiStreet pic.twitter.com/qwiMsJjCF8
— Filmi Street (@filmistreet) June 7, 2021